Monday

சிங்களத்தின் கொடுர தாக்குதல்கள் கொத்து கொத்தாக மடியும் தமிழ் உறவுகள்

நேற்று இரவு முதல் சிங்கள ராணுவம் கொடுர தாக்குதல்களை நடத்தி வருகிறது . சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு நாட்களில் 4000-த்தை தாண்டி இருக்கிறது .

ஏற்கனவே இருந்த பாதுகாப்பு வளைய பகுதியை சுருக்கி கொண்ட ராணுவம் தற்போது இப்போது அறிவித்துள்ள பாதுகாப்பு பகுதிகளில் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி தமிழர்களை கொன்று குவித்து வருகிறது . இன்னும் இரண்டு நாட்களில் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிற நிலையில் . தேர்தலுக்கு முன்னர் ஒட்டு மொத்தமாக தமிழர்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது .

உலகம் முழுவதும் தமிழர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன . உடனடியாக போர் நிறுத்தம் ஏற்படவில்லையெனில் ஒன்றரை லட்சம் மக்களின் நிலை  என்னவாகும் ? தாய் தமிழகத்து உறவுகள் நாம் என்ன செய்ய போகிறோம் .

0 கருத்துக்கள்:

Post a Comment

Send your Status to your Facebook