Wednesday

உரிமைக்காக மதுரை நிரம்பி வருகிறது - நேரடி ரிப்போர்ட்

மதுரை காளவாசல் இதுதான் இன்றைய மதுரை மக்களின் பேச்சாக இருக்கிறது . ஆம் உரிமைக்காக மதுரை மக்களால் நிரம்பி வருகிறது . முல்லை பெரியாறு அணையை உடைக்க நினைக்கும் கேரளா அரசை கண்டித்தும் தமிழகத்திற்கு துரோகம் செய்யும் மத்திய அரசை கண்டித்தும் , முல்லை பெரியாறில் உரிமை காக்க தமிழக அரசு விரைந்து செயல்பட வலியுறுத்தியும் வைகோ தலைமையில் மதுரை காளவாசல் பகுதியில் பிரமாண்டமான உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது .
இங்கிலாந்து பொறியாளர் பென்னிகுயக் அவர்களால் தமிழர்களுக்காக தமிழர்களின் வியர்வையும் ரத்தமும் சிந்தி கட்ட பட்டது. 999 ஆண்டுகளுக்கு உரிமை பட்ட அணையை கேரள அரசு சதி செய்து உடைக்க முற்படுகிறது . கடந்த திமுக ஆட்சி தமிழர்களுக்கு எதிராக செயல் பட்ட காரணத்தால் தமிழர்களுக்கு சாதகமாக இருந்த நிலை இன்று கேரளாவிற்கு சாதகமாக ஆகி இருக்கிறது . 

கேரளா அரசு இந்திய இறையாண்மைக்கு எதிராக போட்ட தீர்மானத்தை ஆதரித்து மத்திய அரசும் அதே போல் ஒரு தீர்மானத்தை போட முற்படுகிறது . இந்த நிலையில் இதுவரை காலமும் முல்லை பெரியாறில் தமிழர் உரிமைக்காக போராடி வருகிற வைகோ இன்று மீண்டும் உண்ணாவிரதம் இருக்கிறார் . முன்னர் நடந்த போராட்டங்கள் போல் அல்லாமல் இன்று மிக பெரிய எழுச்சி மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது . 

மக்கள் வெள்ளம போல் திரண்டு உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்று வருகிறார்கள் . இதுவரை நேரம் வரை பதினையாயிரம் பேர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர் . பேரணி போன்று கட்சி கொடிகளை ஏந்தி வந்து கொண்டிருக்கிறார்கள் . இந்த போராட்டத்தை கொளத்தூர் மணி துவங்கி வைத்தார் . கத்தோலிக்க அமைப்புகள் இந்திய கம்முனிஸ்ட் கட்சி தலைவர்கள் விவசாய அமைப்புகள் வைகோவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அப்பாஸ் அவர்கள் முன்னிலை வகித்து வருகிறார்கள் .

0 கருத்துக்கள்:

Post a Comment

Send your Status to your Facebook