Saturday

தூக்கத்தில் பேசுபவரா நீங்கள் கட்டாயம் படியுங்கள்

வேலை செய்து உடலுக்கும் மனதிற்கும் ஓய்வெடுக்க வேண்டும் என தூங்கினால் தூக்கம் வருகிற நேரம் பார்த்து பக்கத்தில் படுத்திருக்கும் நண்பரின் பேச்சுக்கள் நம்முடைய தூக்கத்தை கெடுத்து விடும் . நாம் தூக்கத்தில் பேசுகிறவராக நம்மால் நம்முடைய நண்பரின் தூக்கம் கேட்டு விடும் .

காலை விடிந்ததும் ஏய் மச்சி நேற்று ராத்த்ரி ராஜாவோட பாட்டு கச்சேரி தாண்டா . அவன் பாட்டு கச்சேரியில என்னோட தூக்கம் போச்சுடா . அப்படியே மற்ற நண்பர்களிடம் சொல்லி கொண்டிருக்கும் போதே நம்மை கிண்டலடிப்பார்கள் . இது பலருடைய வாழ்கையில் நடை பெற்றிருக்கலாம்  .

பொதுவாகவே இப்படி தூக்கத்தில் நாம் பேசுகிறது நம்மை தெரியாமலே நாம் பேசுவதாகும் . இது நம்முடைய  மனது  சம்பந்த பட்டதாகும் . நம்முடைய மனதை பாதித்த விசயங்கள் தூக்கத்தில் நம்மை தாண்டி பேச வேண்டியது வருகிறது . தூக்கத்தில் பேசுகிறவர்களை பார்த்தல் பெரும்பாலானோர் மனதில் ஏற்படும் எண்ணங்களை மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்க வேண்டும் என இருப்பவர்கள் . மற்றொரு பிரிவு சின்ன விசயங்களாக இருந்தாலும் அதன் மீது அதிக கவனம் செலுத்துவது .

நம் மனதை பொறுத்தவரையில் ஒரு நாள் வாழ்கையில் பல நிகழ்வுகள் வந்து செல்லும் . எந்த நிகழ்வுகளையுமே பாதியில் முடிக்க மனம் விரும்பாது . சிலர் தங்களுக்கு ஏற்படும் கவலையாக இருந்தாலும் சரி சந்தோசமாக இருந்தாலும் சரி இவைகளை உடனடியாக வெளிப்படுத்தி விடுவார்கள் . ஆனால் சிலர் சோகமானாலும் துக்கமானாலும் வெளிக்காட்டாமல் மனதிற்குள்ளே இறுக்கி கொள்வார்கள் . இப்படி மனதிற்குள்ளே இறுக்கி கொள்வதால் எல்லாம் ஓன்று சேர்ந்து நமக்கு தெரியாமலே வெளியில் வந்து விடுகிறது . இவ்வாறு நம்மை அறியாமலே நாம் இரவில் பேசுகிறோம் .

மற்றொரு பிரிவினர் சின்ன செயல்களாக இருந்தாலும் அந்த ஒரு செயலையே காலையிலிருந்து மாலை வரை சிந்தித்து கொண்டே இருப்பார்கள் . இப்படி ஒரே செயலை சிந்தித்து கொண்டிருப்பவர்களும் வழக்கம் போல் தூங்கும் போதும் அதை பற்றிய சிந்தனையால் தூக்கத்தில் பேசி விடுகின்றனர் .

எப்படி நாம் தூக்கத்தில் பேசாமல் இருப்பது ? இப்படி பேசுவதால் பொதுவான ஒரு இடத்தில நம்மால் தூங்கவே முடியவில்லை என்ற கவலை உள்ளவர்கள் செய்ய வேண்டியது  எந்த ஒரு செயலிலும் துக்கமானாலும் சந்தோசமானாலும் உடனடியாக வெளிப்படுத்துங்கள் . வெளிப்படுத்தி அப்படியே அதை விட்டு விடுங்கள் மனதிலே போட்டு இறுக்கி கொள்ளாதீர்கள் . ஒரே செயலை எந்த நேரமும் நினைத்து கொண்டே இருக்காதீர்கள் . அழ வேண்டிய இடத்தில அழுங்கள் சிரிக்க வேண்டிய இடத்தில சிரியுங்கள் .  .................................

7 கருத்துக்கள்:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல பதிவுங்க சுரேஷ்.. இன்றைய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கைக்கு பொருந்துவது போன்ற பதிவு... ஓட்டும் போட்டுட்டேன் :)

Suresh Kumar said...

S Senthilvelan கூறியது...

நல்ல பதிவுங்க சுரேஷ்.. இன்றைய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கைக்கு பொருந்துவது போன்ற பதிவு... ஓட்டும் போட்டுட்டேன் :)

நன்றி S Senthilvelan

செல்வன் said...

நல்ல பதிவு சுரேஷ். இப்படியான நல்ல பதிவுகளை தொடர்ந்து எழுதுங்கள். அது மட்டுமே தமிழ்நாட்டு தமிழர்க்கும், இலங்கை தமிழர்க்கும் நன்மை தரும். நன்றி.

vasu balaji said...

பயனுள்ள பதிவு. பகிர்தலுக்கு நன்றி.

Suresh Kumar said...

பாலா... சொன்னது…

பயனுள்ள பதிவு. பகிர்தலுக்கு நன்றி.////////////

நன்றி நண்பா

Suresh Kumar said...

செல்வன் கூறியது...

நல்ல பதிவு சுரேஷ். இப்படியான நல்ல பதிவுகளை தொடர்ந்து எழுதுங்கள். அது மட்டுமே தமிழ்நாட்டு தமிழர்க்கும், இலங்கை தமிழர்க்கும் நன்மை தரும். நன்றி //////////

செல்வன் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் ?

கலையரசன் said...

ஹலோ சுரேஷ்..
அது ஒரு டெம்பிலேட் கமெண்ட் போல..
நீங்க பீல் பண்ணாதீங்க..
பயனுள்ள பதிவு! கலக்கல்..

Post a Comment

Send your Status to your Facebook