• பேய், பிசாசு உடம்பினுள்...

    இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....

  • உங்கள் மேல் எதற்கு ...

    தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் ...

  • யூத் புல் விகடனில் ...

    யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் ...

Tuesday

உணமையை மறைத்து பேசும் சுபவீக்கு செந்திலதிபன் கண்டனம்

மாவீரர் திலகம் பிரபாகரன் தாயார் பார்வமதி அம்மாள் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்தது பற்றி சுப.வீ.உண்மைகளை மறைத்து எழுதி இருக்கிறார்.

பக்கவாதம், சிறுநீரகக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்த பார்வதி அம்மாள், முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின் ,முள்வேலி முகாமில் இருந்தார்.பிரபாகரன் தந்தை வேலுப்பிள்ளை அவர்கள் மறைந்த பிறகு அம்மாவின் உடல் நிலை மோசமடைந்தது. இலங்கை எம்பி சிவாஜிலிங்கம் முயற்சியால் பார்வதி அம்மாள் சிகிச்சைக்காக மலேசிய நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மலேசிய அரசு குறுகியகால விசா வழங்கியதால் ,அம்மாவின் தொடர் சிகிச்சைக்காக தலைவர் பிரபாகரனின் அக்கா வினோதணி கனடாவில் உள்ள தன் வீட்டுக்கு அழைத்துச் செல்ல விரும்பினார்.

ஆனால் கனடாவில் மருத்துவ நடைமுறைகளில் சிக்கல் இருப்பதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. பின்னர் அம்மாவை தமிழ்நாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பது என்று சிவாஜிலிங்கம், அதற்கான ஏற்பாடுகளை செய்தார். இந்திய அரசிடம் உரிய அனுமதி பெறப்பட்டது.

தமிழகத்தில் அம்மா எங்கே தங்கி சிகிச்சை எடுக்கப் போகிறார் என்று வெளியுறவுத்துறை கேட்டபோது பழ.நெடுமாறன் இல்லத்தில் தங்குவதாக அவரது வீட்டு முகவரி அளிக்கப்பட்டது.
அதன் பிறகே இந்தியா பார்வதிஅம்மாவுக்கு விசா வழங்கியது.

2010, ஏப்ரல் 16 ஆம் தேதி மாலை விமானத்தில் அம்மாவும்,அவருக்கு த் துணையாக விசயலட்சுமி எனும் செவிலியரும் மலேசியாவிலிருந்து சென்னை வந்து சேர்ந்தனர். பார்வதிஅம்மாள் வந்த செய்தியை முறைப்படி தமிழக அரசுக்கு மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரியப்படுத்தினர்.

அம்மா வருகை பற்றி அய்யா நெடுமாறன் அவர்கள் தலைவர் வைகோவுக்கு மட்டும் தகவல் தந்திருக்கிறார். விமான நிலையத்திற்கு 16.04.2010 இரவில் வைகோ,நெடுமாறன் இருவரும் சென்ற போது,தமிழக காவல்துறையினர் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
விமான நிலையத்தில் தமிழக காவல்துறை குவிக்கப்பட்டது.

இதனிடையில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை தமிழகத்தின் ஆட்சியாளர்(???) தொடர்பு கொண்டு தமிழ்நாட்டில் முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு தமிழக மக்கள் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு,மாநில தி.மு.க அரசு மீது கோபமாக உள்ளனர். இந்த நிலையில், பிரபாகரன் தாயார் இங்கு வந்து தங்கினால் நி லைமை கட்டுமீறிப் போகும்.எனவே பார்வதி அம்மாள் சென்னையில் தங்கி மருத்துவம் பார்க்க அனுமதிக்க க் கூடாது என்று கூறினர்.

அதற்குப் பிறகு விமானத்திலேயே 5 மணி நேரம் காத்திருந்த பார்வதி அம்மாளை மத்திய அரசு அதிகாரிகள் திருப்பி அனுப்பியதால் மீண்டும் மலேசியாவுக்கு போக வேண்டிய சூழல் ஏற்பட்டு, பின்னர் அங்கிருந்து ஈழம் சென்று,உடல்நலன் பாதிக்கப்பட்டு மறைந்தார்கள்.

இதுதான் நடந்த உண்மைகள்.
சுப.வீ.அவர்களுக்கு சில கேள்விகள்.
மத்திய அரசு அம்மா வருகைக்கு அனுமதி அளித்தது தி.மு.க அரசுக்கு த் தெரியாதா?
முதல்வருக்குத் தெரியாமல் ஒரு நிகழ்வு நடந்து விடுமா?மத்திய திமுக அமைச்சர்களுக்கும் தெரியாதா?
முதல்வர் கருணாநிதி சார்பில் மத்திய அரசிடம் பார்வதி அம்மாவுக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப் பட்ட செய்தி வந்த போது மத்திய அரசு அப்போது மறுப்பு தெரிவிக்கவில்லையே ஏன்?

1990 களில் நாங்கள் பார்த்த பேராசிரியர், தோழர் சுப.வீ.உருவம் மட்டும் மாறவில்லை.
தமிழ் உள்ளமும் அல்லவா மாறி விட்டது! இவ்வாறு மதிமுக அரசியல் ஆய்வு மைய செயலாளர் செந்திலதிபன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .

Read More

Sunday

செயல் ஜோக்ஸ் வெளி நடப்பு

செயலு : "சார், என்னோட செக் புக் தொலஞ்சு போச்சு.."

பேங்க் மேனஜர்: "பார்த்து சார், யாராவது உங்க கையெழுத்தை போட்டு ஏமாத்திடப் போறாங்க.."

செயலு : "நான் என்ன பேக்கா? இப்படி ஏதாவது நடக்கும்னு தான் முதலிலேயே எல்லா செக்கிலையும் கையெழுத்து போட்டு வச்சிருக்கேன்.." 😎😎😎

---------------------------------------------------------------

செயலு : நான் இந்த இடத்தில இருந்து வெளிநடப்பு செய்கிறேன்

செயலு மனைவி துர்கா : ஒழுங்கா படு சனியன மணி ராத்திரி 12

😜 😜 😜
Read More

செயல் ஜோக்ஸ் அறிவாலயம்

"அறிவாலயத்துல வெளில இருக்க செடிகளுக்கு ஏன்யா இன்னைக்கு தண்ணி விடலை?"

"செயல் தலைவரே இன்னிக்கு மழ பெஞ்து செயல் தலைவரே..அதான் தண்ணி விடலை"

"இது ஒரு காரணமா? மழ பெஞ்சா என்ன?குடைய புடிச்சுட்டு தண்ணி விட வேண்டியதானே?"

#செயல்_ஜோக்ஸ்

😁 😁 😁 
Read More

செயல் சிரிப்புகள் - தபால்ல அனுப்பி இருக்கலாமே

தபால்காரர் : உங்க பார்சலை கொண்டுவர ஏழு கிலோ மீட்டர் நடந்து வருகிறேன்..

செயலு : ஏன் இவ்வளவு தூரம் நடக்கறீங்க தபால்ல அனுப்பி இருக்கலாமே
😁 😁 😁 😂
செயல் ஜோக்ஸ்
Read More

Thursday

ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி?

மலர் - மோடி தமிழகத்தில் வைகோவின் பேச்சை கேட்கிறார் என எழுதுகிறான்...,

விகடன் - வைகோ பற்றி அர்த்தமற்ற காழ்ப்புணர்ச்சி வழியும் நக்கல் வீடியோ போடுகிறான்..,

இந்து - சமஸ் போன்ற வெங்காய பஜ்ஜி சமையல்காரர்களை வைத்து வைகோ எதிர்ப்பு கட்டுரைகளாக போடுகிறான்...,

இதிலிருந்து என்ன உணர்கிறீர்கள்?

தினமலரை பாராட்ட வேண்டிய தேவையுமில்லை..,
விகடனையும், இந்துவையும் திட்ட வேண்டிய தேவையுமில்லை..,
ஆம்.., இந்த பத்திரிக்கைகள் மட்டுமல்ல இன்னும் சில பத்திரிக்கைகளுக்கும் தரப்பட்டுள்ள ப்ராக்ஜெட் அசைன்ட்மென்ட் படியே அவர்கள் நகர்கிறார்கள்.

தினமலரும், விகடனும், இந்துவும் தமது
காரியத்தை கச்சிதமாக பார்க்கிறார்கள்!!!

அதிமுக தற்போதைய சூழலால் ஒருவேளை பல குழப்பங்கள் ஏற்பட்டு, பலவீனமானால் இங்கே வைகோ கவனிக்கப்பட வேண்டிய திராவிட இயக்க தலைமையாகி விடக்கூடாது என்பதே இந்த ஊடக விற்பன்னர்களின் நோக்கம்.

அதாவது, கலைஞர், ஜெயா அடுத்து ஸ்டாலின் என்பதோடு இங்கே முடிந்துவிட வேண்டும் என்பதே உள்ளூர் வியாபாரிகள் மற்றும் இங்கே வலுப்பெற துடிக்கும் சில பல தேசிய வியாதி கட்சிகளின் ஆவல்.

திராவிட இயக்கத்தில் ஸ்டாலின் வலுப்பெறுவதில் இந்த விற்பன்னர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை. அதற்கு பல காரணங்கள் உண்டு. ஒருவேளை ஸ்டாலின் அதிகார பீடம் ஏறினாலும் திராவிட கொள்கையென எதையும் அவர் தூக்கி சுமக்க மாட்டார், சுமக்கவும் தெரியாது என்பதோடு அவர் கலைஞரை போல் இவர்களுக்கு பாகற்காயாக இருக்க மாட்டார். ஸ்டாலினை நாணலை போல் வளைப்பது எளிது என்பதும் அவர்களுக்கு தெரியும். கூடவே, கலைஞர் போல் ஸ்டாலின் புத்திசாலி இல்லை என்பதும், ஸ்டாலின் பெரிய வீட்டில் பிறந்த சவலை பிள்ளை என்பதையும் அறிந்தே வைத்துள்ளது, தினமலரும், விகடனும், மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு குழுமமும். இவற்றோடு ஸ்டாலினுக்கு, சங்கர மடத்தின் ஆசியும், சூனா சாமியின் அருளும் தீர்க்கமாக கிட்டும் என்பதும் அவர்களின் கூடுதல் கணக்கு.

ஆனால், மேற்சொன்ன எவையும் ஸ்டாலின் இடத்தில் வைகோ இருந்தால் நடைபெறாது என்பதையும் இந்த விற்பன்னர்கள் மிக ஆழமாக உணர்ந்துள்ளனர். ஆதலால், இந்த சந்தர்ப்பத்தில் வைகோ வலுப்பெற்றால் அது திராவிட இயக்க கொள்கைகள், மாநில உரிமைகளை காப்பது போன்ற அழுத்தங்கள் இன்னும் நீட்சி பெறுவதற்கான வாய்ப்பாக அமைந்து விடக்கூடாது என்பதே அவர்களின் பெரும் அச்சம். ஆதலால் தான், வைகோவை அடுத்த திராவிட இயக்கத்தின் வலுவான தலைமையாக உருவெடுக்க விடாமல் பல காலமாக நடத்தப்பட்டு கொண்டிருக்கும் பல சதிகளில் தற்போது நடப்பவைகளும் ஒன்று. கருப்பு துண்டு போட்ட வைகோவை எந்த இந்துத்துவ வாதி ஏற்பான்? ஆனால், திராவிட இயக்கத்தை விரும்புவர்களிடத்தில் வைகோ மீதான பல்வேறு குழப்பமான செய்திகளை சொல்வதின் மூலம் வைகோவை வெறுக்க வைக்கலாம் தானே? இதுதான் அவர்களுக்கு தேவை!!! பாஜகவிற்காக வைகோ பேசுகிறார் என்கிற பிம்பத்தை காட்டிட தான் ஊடக விற்பன்னர்கள் முயல்கிறார்கள். ஆனால், வைகோவை இந்த விற்பன்னர்கள் ஒருபோதும் மனதார ஏற்க மாட்டார்கள்.

எண்ணிக்கையில் குறைவானவர்கள், தாங்கள் நேரடி போருக்கு செல்லகூடாது என்பதால், புத்திசாலிகளை தங்கள் நண்பர்களை போல் உடன்வைத்து அவர்களை வலுபெறாமல் செய்வதோடு, மாறாக முட்டாள் எதிரியை பலசாலியை போல் இல்லாத்தை உருவாக்கி காண்பித்து அவர்களை ஆளவிட்டு திரைமறைவில் இவர்கள் அந்த முட்டாளை முழுமையாக ஆட்டுவிப்பார்கள்.

அதிகாரமில்லா புத்திசாலி....,
அதிகாரமிக்க முட்டாள்..,

விற்பன்னர்களின் தேர்வு ஒருநாளும் முந்தையதாக இருக்காது!!! ஆம்.., சோழியன் குடுமி எந்நாளும் சும்மா ஆடாது!!!

தாயகம் சுரேஷ் 
Read More

Send your Status to your Facebook