Saturday

கருணா நிதிக்கு புலிகள் கொலை மிரட்டலா ?


முதல்வர் கருணாநிதிக்கு விடு‌தலை புலிகளின் பெயரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு வந்த இந்த கொலைமிரட்டல் கடிதத்தில் விடு‌தலை புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இதே போல் 14 ஆண்டுகளுக்கு முன்பு வைகோ புலிகள் மூலம் கருணாநிதியை கொலை செய்ய பார்க்கிறார் என நாடகமாடி வைகோ மீது பழி சுமத்தி கட்சியிலிருந்து நீக்கினார் .  ஒருமுறை உள்ளாட்சி துறை அமைச்சர் முக ஸ்டாலின் மதுரைக்கு வந்த போது ஒருவர் கத்தியால் குத்த வந்தார் என்று ஸ்டாலினுக்கு பாதுகாப்பு பல படுத்தப்பட்டது . ஆனால் யாரு குத்த வந்தது என்றே நாம இன்னும் கண்டு பிடிக்கவே இல்லை .

எவன் மேலயாவது பழி போட்டு அனுதாப ஒட்டு  வாங்கனும் இசட் பிளஸ் பாதுகாப்பும் வாங்கணும் . 
ஆனால் ஒரு விடுதலை இயக்கத்தின் பெயரில் யார் மிரட்டல் கடிதம் அனுப்பினாலும் இல்லை அவர்களே அனுப்பினாலும் அதை கண்டுபிடித்து மக்களுக்கு தெரிவிப்பது அரசின் கடமை . அதை விட்டு விட்டு சும்மா பில்டப் பண்ண வேண்டாம் ............ 

7 கருத்துக்கள்:

ttpian said...

கருனனிதிக்கு புலிகல் கொலை மிரட்டல்?
மலிவு விளம்பரம் தேடுவதில்,தமிழக அரசியல்வாதிகள்,மிக மிக மட்டமானவர்கள்

greatlover said...

எத்தனையோ நாடகம் நடத்திவிட்டார் !இப்போது தேர்தல் நாடகம் துவங்கப் போகிறது !!

G.Ragavan said...

இதெல்லாம் கண்டுக்காம விடுங்க. காமெடியாத்தான் இருக்கும். அனுதாப அலையை உண்டாக்குறாங்களாம். தேர்தல்ல இலங்கைப் பிரச்சனையை ஒரு காரணியாக வளர விடாமப் பாத்துக்கிறாங்களாம். திமுக தலைவரின் சீரிய சிந்தனையில் உதித்த வீரிய எண்ணமாக இருக்கும். கருணாநிதி ஜெயலலிதாவாகி ரொம்ப காலம் ஆச்சுங்கோவ்.

Suresh Kumar said...

மலிவு விளம்பரம் தேடுவதில்,தமிழக அரசியல்வாதிகள்,மிக மிக மட்டமானவர்கள் ////////

அதனால் தானே அரசியல்வாதியாக இருக்கிறார்கள்

Suresh Kumar said...

greatlover கூறியது...

எத்தனையோ நாடகம் நடத்திவிட்டார் !இப்போது தேர்தல் நாடகம் துவங்கப் போகிறது !!/////


நன்றி நண்பரே இது தேர்தல் நாடகத்தில் ஒரு பகுதி தான்

Suresh Kumar said...

கருணாநிதி ஜெயலலிதாவாகி ரொம்ப காலம் ஆச்சுங்கோவ்.///////


இது நூற்றுக்கு நூறு உண்மை ராகவன்

பதி said...

கருணா: இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புது?

கழக விசிலடிச்சான் குஞ்சுகள்: அது இவனுங்க தலை எழுத்து மொதலாளி. இன்னும் எத்தனை காலம் போனாலும் நம்புவாங்க. நீங்க அடுத்த நாடகத்தை ரெடி பண்ணுங்க....

Post a Comment

Send your Status to your Facebook