• பேய், பிசாசு உடம்பினுள்...

    இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....

  • உங்கள் மேல் எதற்கு ...

    தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் ...

  • யூத் புல் விகடனில் ...

    யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் ...

Showing posts with label தியாகி முத்துக்குமார். Show all posts
Showing posts with label தியாகி முத்துக்குமார். Show all posts

Saturday

முள் செடியை வீழ்த்தும் ஆயுதம் வைகோ! படபடக்கிறார் முத்துக்குமாரின் தந்தை- ஜூனியர் விகடன்-20.3.11

வெண்ணெய் திரண்டு வரும் வேளையில் தாழி தள்​ளாடும் நிலை என்பார்​களே... வைகோவின் அரசி​யல் வாழ்க்கையில் இத்தகைய துயரங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன!
கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக அ.தி.மு.க-​வின் கூட்டணியில் சிறிதளவும் மனக்கசப்பின்றி, ஆளும் கட்சியின் அத்தனை நெருக்கடிகளையும் சமாளித்து நின்ற வைகோ, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அல்லாட்டத்துக்கு ஆளாகினார். கடந்த தேர்தலில் 35 இடங்களில் போட்டியிட்ட ம.தி.மு.க-வுக்கு இந்த முறை மிகக் குறைவான இடங்களே பேசப்பட... மாநிலம் முழுக்க இருக்கும் வைகோவின் ஆதரவாளர்கள் முகம் வாடிப்போனார்கள்.
 
வாய் திறந்து பேசாவிட்டாலும் வைகோவுக்கும் இதில் சொல்லிக்கொள்ள முடியாத வேதனைதான். இந்த நிலையில் நெகிழவைக்கும் சம்பவம் ஒன்று நடக்க... முகம் மலர நிமிர்ந்து இருக்கிறார் வைகோ.
 
ஈழப் போராட்டத்துக்காகத் தீக்குளித்து இறந்த கொலுவைநல்லூர் கு.முத்துக்குமாரின் குடும்பம் வைகோவை நேரில் சந்தித்து ம.தி.மு.க-வில் தங்களை இணைத்துக்கொண்ட சம்பவம்தான் அது.
 
ஈழ ஆதரவுக் கட்சியினர் பலரும் முத்துக்குமாரின் தந்தை குமரேசனைத் தங்கள் பக்கம் இழுக்க எவ்வளவோ முயன்று பார்த்தார்கள். பண உதவிகளும் பதவி குறித்த உத்தரவாதங்களும்கூட அவரிடம் நடத்தப்பட்டன. ஆனால், 'கட்சிகளில் சேரும் விருப்பமே இல்லை. என் மகனின் தியாகத்தைத் தயவுசெய்து விலை பேசாதீர்கள்’ என மறுத்துவிட்டார் குமரேசன். இந்த நிலையில்தான் திடீரென ம.தி.மு.க-வில் ஐக்கியமாகி இருக்கிறார் குமரேசன்.
 
''காங்கிரஸ் - தி.மு.க. என்கிற முட்செடிகளை வெட்டி வீச, நம் கையில் கிடைத்திருக்கும் ஆயுதம் ம.தி.மு.க. தமிழகத்தின் அத்தனை பிரச்னைகளுக்கும் குரல் கொடுக்கும் ஒரே தலைவர் வைகோ மட்டுமே. இனத் துரோகிகளை வீழ்த்துவதற்கு வைகோவின் கரத்தை வலுப்படுத்துவதே சரியான வழி!'' என குமரேசன் ஆவேசமாக அறிவிக்க... நெஞ்சம் சிலிர்த்தார் வைகோ.
 
இணைப்பு விழாவில் பேசிய குமரேசன், ''எங்​களுடைய குடும்பம் ஒரு​போதும் அரசியலில் ஈடுபட்டது இல்லை. ஆனால், இந்தக் காலகட்டத்தில் முத்துக்குமாரின் தியாகத்தைப் போற்றுகின்ற, உண்மையாக ஈழ விடிவுக்குப் பாடுபடுகின்ற ஒரு இயக்கம் மதிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே நாங்கள் ம.தி.மு.க-வில் இணைந்து இருக்கிறோம்.
 
என் மகன் முத்துக்குமாருக்கு மிக நெருங்கிய நண்பராக இருந்தவர் பழனி என்பவர்தான். அவர்கள் இருவரும் சேர்ந்துதான் அரசியல் கூட்டங்களுக்குப் போய் நாட்டு நடப்புகள் குறித்துப் பேசுவார்கள். இறப்பதற்கு முதல் நாள்கூட முத்துக்குமார், பழனியிடம்தான் ஈழக் கோரங்கள் குறித்து குமுறி இருக்கிறார். அதனால், யாரை நம்பிக்கை மிகுந்த தமிழர் தலைவராக முத்துக்குமார் போற்றினார் என்பது பழனிக்குத்தான் தெரியும். பழனியும் எனது மருமகன் கருக்கவேலும் கலந்து பேசித்தான் ம.தி.மு.க-வில் இணையும் முடிவை எடுத்தார்கள்.
 
எனக்கும் அதுதான் மிகச் சரியான முடிவாகப்பட்டது!'' என நெகிழ்ந்த குமரேசன் சற்றே ஆவேசமாகி, ''ஈழத்தையே இழவுக்காடாக்கிய காங்கிரஸும், அதற்குத் துணைபோன தி.மு.க-வும் இந்த மண்ணில் அடியோடு வீழ்த்தப்பட வேண்டும். ஈழக் கோரத்தைத் தடுக்க நினைத்து உடலையே கரிக்கட்டையாக்கிய என் மகனைப்போல், எத்தனையோ இளைஞர்கள் இன்றைக்கும் கொந்தளிப்போடு இருக்கிறார்கள். இனியும் அரசியலுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை என ஒதுங்கி இருந்தால், அநியாயம் புரிபவர்களின் ஆட்டம் அதிகமாகிவிடும் என்பதால்தான், அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கிறோம். குடும்பத்துக்காக சொத்துகளைக் குவிக்கிற தலைவர்களுக்கு மத்தியில், தமிழர் நலனை மட்டுமே தாரக மந்திரமாகக்கொண்டு இயங்கும் வைகோதான் உணர்வாளர்களின் உண்மையான தலைவர்!'' என்றார் சிலிர்ப்பு அடங்காமல்.
 
முத்துக்குமாரின் நண்பர் பழனிராசன், ''முத்துக்குமாரின் தியாகத்தை உலகறியச் செய்தவர் வைகோ. உண்மையான உணர்வோடு முத்துக்குமாரின் இழப்புக்கு வருந்திய தலைவர் வைகோவுக்கு நாங்கள் அனைவருமே நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். 'ஈழத் தமிழர்களுக்கான விடுதலையைப் பெற்றுத் தர தலைவர் வைகோவால் மட்டுமே முடியும்!’ என முத்துக்குமார் என்னிடம் பலமுறை சொல்லி இருக்கிறார். தலைவர் வைகோவின் பொதுக் கூட்டங்கள் எங்கு நடந்தாலும், நானும் முத்துக்குமாரும் சைக்கிளில் போய் அவருடைய பேச்சைக் கேட்போம்.
 
ஒருமுறை தலைவரின் பேச்சில் மெய் மறந்து, அது குறித்துப் பேசிக்கொண்டே இருந்தோம். அதன் பின் பார்த்தபோது சைக்கிள் காணாமல் போனது தெரிந்தது. அந்த அளவுக்கு தலைவர் வைகோவின் பேச்சில் வசப்பட்டுக்கிடந்தவன் முத்துக்குமார். அதனால்தான் அவனுடைய தியாகத்தைப் போற்றும் விதமாக ம.தி.மு.க-வில் இணைய வேண்டும் என முத்துக்குமாரின் மைத்துனர் கருக்கவேல் சொல்லிக்கொண்டே இருந்தார். முத்துக்குமார் ஊட்டிய உணர்வால்தான், இன்றைக்கு வைகோவின் தலைமையில் இந்த இயக்கத்தில் இணைகிறோம். எந்த சுயநலமும் இல்லாமல் வைகோவின் கரத்தை வலுப்படுத்த உறுதி ஏற்போம்!'' என்று சொல்ல வைகோவின் முகம் பரவசமானது.
 
இறுதியில் பேசிய வைகோ, முத்துக்குமாரின் நினைவுகளை அடுக்கிவிட்டு, முத்துக்குமாரின் தியாகத்தை இனத்தின் எழுச்சிக்காகப் பயன்படுத்து​வோமே தவிர, சுயநலத்துக்காக அல்ல!'' என்றார் உணர்ச்சிப்பெருக்கோடு!
 
- இரா.சரவணன்
 

 நன்றி ஜூனியர் விகடன் 
Read More

முத்துக்குமார் வீர வணக்க நிகழ்வுகள் எமது ஊரில் மிகவும் எழுச்சியோடு நடை பெற்றது

ஓர் ஆண்டுக்கு முன்னர் ஈழத்திலே சிங்கள வெறியர்களால் தமிழினம் அழிக்க பட்ட போது கொதித்தெழுந்து தன்னுடைய தேக்கு மர தேகத்தை தீக்கு தின்ன கொடுத்த மாவீரன் முத்துக்குமார் உட்பட 19 வீர தியாகிகளுக்கு வீர வணக்க நிகழ்வுகள் மிகவும் எழுச்சியோடு நடை பெற்றது.


குமரி மாவட்டம் தக்கலை ஒன்றியத்தில் தக்கலை பேருந்து நிலையத்திற்கு முன்புறம் தக்கலை ஒன்றிய மதிமுக செயலாளர் அழகை J.P . சிங் தலைமையில் முத்துக்குமார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தமிழ் ஈழம் மலரும் வரை போராட உறுதி எடுத்து கொண்டனர். ஏராளமான மதிமுக தொண்டர்கள் மற்றும் தமிழ் இன ஆர்வலர்கள் கலந்து கொண்டனர் .


இதை தொடர்ந்து மதிமுக இளைஞர் அணி சார்பாக குமார புரம் சந்திப்பில் முத்துக்குமார் படத்திற்கு இளைஞர் அணியினர் மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் வீரவணக்க நிகழ்வு பொதுக்கூட்டம் நடை பெற்றது . இளைஞர் அணி அமைப்பாளர் சுரேஷ் குமார் தலைமை தாங்கினார் . கூட்ட்டத்திற்கு தக்கலை ஒன்றிய செயலாளர் , குருந்தன் கொடு ஒன்றிய செயலார் , குளச்சல் நகர செயலாளர் மற்றும் நிவாகிகள் கலந்து கொண்டனர் . தலைமை கழக பேச்சாளர் சிலம்பை டென்னிசன் சிறப்புரையாற்றினார் .
Read More

அரசியல் தலைவர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்

தமிழீழ மக்களுக்காக தன் இன்னுயிரை அர்ப்பணம் செய்த அன்புச் சகோதரன் முத்துக்குமரன் அவர்களின் இறுதி ஆசையை நிறைவேற்ற துடிக்கும் மாணவர்களை சில அரசியல்வாதிகள் தமது அரசியல் அபிலாசைகளிற்காக பயமுறுத்துவதாக தெரியவருகிறது.

தனது உடலை வைத்து போராட்டத்தை கூர்மைப்படுத்தும் படி மாணவர்களுக்கு அன்பு வேண்டுகோள் விட்டுச் சென்ற தன் தோழமையின் பணி தொடர துடிக்கும் மாணவர்களை அந்த பணியை தொடராது தடுப்பதற்காக இந்த சதி திட்டம் நடாத்தப்படுகிறது.

உலகிலேயே மாணவ சக்தியால் சாதிக்க முடியாதது ஒன்றுமே கிடையாது. அந்த மாணவ சக்தி கிளர்ச்சி கொண்டால் தமிழீழத்தில் பாதி உரிமை கிடைத்துவிடும். இவ்வளவு காலமாக தமிழீழம் என்றால் என்ன? ஏன் அந்த மக்கள் போராடுகிறார்கள்? என்று தெரியாத மக்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அது எப்படி என்றால் தமிழக மக்களுக்கு தமிழீழத்தின் உண்மை செய்திகள் செல்வதில்லை என்பது தான் உண்மை. அரசியல்வாதிகள் தாம் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்காக மக்களையும் மாணவர்களையும் பயன்படுத்துகிறார்களே தவிர மக்களுக்காக என்பது அரைக்கரை வாசியாகவே இருக்கிறது.

அந்தவகையிலே இன்று நம் முத்துக்குமாரின் வீரமரணம் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் சென்று தமிழீழப் பிரச்சனையை உணர்த்திக் கொண்டிருக்கிறது. அந்த வீரமரணத்தை அறிந்து மக்கள் கொந்தளித்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே, அவரின் தியாகத்தை கொச்சைப்படுத்தாதீர்கள். தமிழீழ தற்கொலைப்படையான கரும்புலிப்படைக்கு நிகரான ஒரு மரணத்தை இன்று தமிழகத்தில் நிகழ்த்தியிருக்கிறார் முத்துக்குமரன்.

அரசியல் வாதிகளே! மாணவ சக்தியை பயன்படுத்துங்கள். இந்த சந்தர்ப்பத்தை நீங்கள் தவறவிட்டீர்கள் என்றால் நீங்கள் தமிழினத்திற்கு செய்யும் துரோகமாக மாணவர்களாலும் அவர்களால் உருவாகும் எதிர்கால சமூகத்தாலும் சித்தரிக்கப்படுவீர்கள்.

கட்சி, அரசியல் என்ற பாகுபாட்டை தூக்கியெறிந்து நாம் எல்லோரும் தமிழர்கள் என்ற உணர்வோடு ஒன்றுபடுங்கள். முத்துக்குமாரின் அஞ்சலி நடக்கும் நிகழ்விடத்தில் மாணவர்கள் கூறுகிறார்கள் தன் உடலை வைத்து போராட்டத்தை கூர்மைப்படுத்த எங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

அவரின் இறுதி ஆசையை நிறைவேற்ற வேண்டிய கடமை எங்களுக்குள்ளதால் அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் தலையிடாமல் மாணவர்களாகிய எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.

அதற்கு குறுக்கிட்ட அரசியல்வாதிகள் "நீங்களெல்லாம் என்ன செய்து கிழித்தீர்கள் ஈழப்பிரச்சனை பற்றி பேசுவதற்கு" என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். இதனால் மாணவர்கள் செய்வதறியாது திகைத்து போய் இருக்கிறார்கள்.

என்ன தோன்றுகின்றது என்றால் அரசியலால் சாதிக்க கூடியவற்றை அரசியலால் சாதியுங்கள். மாணவர்களால் சாதிக்க கூடியவற்றை மாணவர்களால் சாதியுங்கள். எல்லோருடைய நோக்கமும் தமிழீழம் கிடைக்க வேண்டும்.

தமிழீழ மக்கள் நிம்மதியுடன் வாழவேண்டும் என்றிருந்தால் போட்டி போடாதீர்கள். நெல்லை எந்த இயந்திரத்தில் குத்தினோம் என்கிறது நமக்கு முக்கியம் கிடையாது நமக்கு தேவை பயன் தரக்கூடிய அரிசி.

ஆகவே, தமிழர்களாகிய நாம் நமக்குள்ளேயே பிரிவினையை வளர்க்காமல் அன்பு சகோதரன் முத்துக்குமரனின் கனவு நனவாக பாடுபடுவோம்.

நன்றி : தமிழ் வின்
Read More

தியாகி முத்துக்குமாருக்கு அஞ்சலி:குமரி மாவட்ட விசைபட்கு மீனவர்கள் வேலைநிறுத்தம்

ஈழ தமிழர்களுக்காக தன் உடலை தீயால் கொளுத்தி மாய்த்து கொண்ட தியாகி தூத்துக்குடி முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படவும் வலியுறுத்தி கன்யா குமரி சின்ன முட்டத்தை சேர்ந்த விசை படகு மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர் .

வேலை நிறுத்தம் காரணமாக இங்குள்ள350 க்கும் மேற்பட்ட விசை படுகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வில்லை .

இன்று தியாகி முத்துக்குமாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கிறது . இதில் பெரும்பாலான தமிழின உணர்வாளர்களும் , மாணவ, மாணவிகளும் ,அரசியல் கட்சி தலைவர்களும் , இளைஞர்கள் , வழக்கறிஞ்சர்கள்பெரியோர்கள் , சிறியோர்கள் என பெரும்பாலான தமிழ் மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் .

முத்துக்குமார் தன் உடலில் கொளுத்திய தீயானது இன்று ஒவ்வெரு தமிழனின் மனதிலும் கொழுந்து விட்டு எரிகிறது . தமிழகம் இன்று ஓன்று சேர்ந்து இந்தியாவையும் இலங்கையையும் எதிர்த்து வருகிறது .

இலங்கை பாதுக்காப்பு இயக்கத்தின் சார்பாக பெப்ருவரி 4 ஆம் தேதி ( இலங்கையின் சுதந்திர தினம் ) தமிழகத்தில் முழு வேலை நிறுத்தம் அறிவிக்க பட்டுள்ளது . இதில் அனைத்து தமிழர்களும் கலந்து கொண்டு நம் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்த வேண்டிய நேரம் .

வெல்லட்டும் தமிழ் ஈழம். முத்துக்குமாரின் எண்ணம் ஈடேறட்டும்.
Read More

Send your Status to your Facebook