இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts
Wednesday
பலி ஆடு தலைய ஆட்டிடிச்சோ ?
எழுதியது
Suresh Kumar
Labels:
2G அலைவரிசை ஊழல்,
அரசியல்,
இந்தியா,
திமுக கூட்டணி
எழுதிய நேரம்
Wednesday, February 02, 2011
ஒரு படத்தில விஜயும் நண்பனுமாக சேர்ந்து தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்க செல்லும் இடத்தில் ஆட்டை பலி கொடுக்க தயாராகி கொண்டிருப்பார்கள் அவங்க கிட்ட விஜய் ஆட்டை பலி கொடுப்பது தவறு என்பது போல பேசுவார். உடனே அந்த ஊரு நாட்டமை சொல்வார் நீங்க இவ்வளவு சொல்றீங்க அதனால நாங்க ஆட்டை பலி கொடுக்க விரும்பல அப்படின்னு சொல்லி முடித்ததும் ஒரு குண்டை தூக்கி போடுவார். ஒரு தவறும் செய்யாத விஜயையும் நண்பனையும் பலி கொடுக்க ஏற்கனவே தயாராக இருந்த கம்பின் மீது கட்டுவார்கள். ( அதற்காக இந்த ஆடு ஒரு தவறும் செய்யவில்லை என அவசர பட்டு முடிவெடுத்திடாதீங்க) அதில ஒரு நியாயம் என்னவென்றால் தலை ஆட்டினால் மட்டும் தான் வெட்டுவார்கள். அப்போ இவங்க ரெண்டு பேரும் தலையே ஆட்ட கூடாதுன்னு முடிவெடுப்பாங்க. எவ்வளவோ முயற்சித்தும் தலை ஆட்ட வைக்க முடியாது. வெட்ட அரிவாள் வச்சிருக்கிறவர் ஏதோ சொல்ல இவரும் ஆமா என தலையாட்ட ஆத்தா அனுமதி தந்துட்டானு சொல்லி வெட்ட போவாங்க ................. இது சினிமா
அதே போல இப்போ இங்க ஒரு பலி ஆடு மாட்டியிருக்கு. இந்த ஆடு கொஞ்சம் வித்தியாசம். இது பலி கொடுக்க வேண்டிய ஆடு என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் இப்போது யாருக்காகவோ பலி ஆடாக்கியிருக்கிரார்கள். அது தாங்க ஸ்பெக்ட்ரம் புகழ் ராஜா இன்று சிபிஐ அதிகாரிகளால் ஊழல் செய்ததற்காக கைது செய்ய பட்டிருக்கிறார். இந்த ஊழல் இன்று நேற்று நடந்தது அல்ல மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே நடந்து மீடியாக்களால் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசபட்டது. கடந்த ஐக்கிய முற்போக்கு ஆட்சியில் நடந்த இந்த ஊழல் மீண்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியே ஆட்சிக்கு வந்ததால் மூடி விடலாம் என நினைத்து அதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் தலைமையிலான அரசு செய்தது.
இந்த ஊழலை மறைப்பதற்காகவே ஒரு ஊழல் அதிகாரியை ஊழல் ஒழிப்பு துறைக்கே தலைவராக்கியதும் இதே சோனியாவின் வழிகாட்டலில் இருக்கும் காங்கிரஸ் அரசு தான் . இப்படி பல வழிகளில் மறைக்க முயற்சித்த வேளையில் மத்திய தணிக்கை குழு இந்த ஊழலால் ஒரு லட்சத்தி எழுபத்தாறு கோடி ருபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என அறிக்கை வெளியிட்டது. இதை அடுத்து எதிர் கட்சிகள் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை வேண்டும், ராஜா பதவி விலக வேண்டும் , ராஜா கைது செய்ய பட வேண்டும் , இந்த ஊழலில் யார் யாரெல்லாம் பங்கு வகித்திருக்கிரார்களோ அவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நாடாளுமன்ற கூட்ட தொடர் முழுவதையும் நடை பெறாமல் செய்தன. இருந்தும் காங்கிரஸ் கட்சி அதற்கு பதிலைக்க்வோ நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு ஒத்துழைக்கவோ செய்ய வில்லை . மாறாக மத்திய அரசின் எடுபிடியான சிபிஐ மூலம் படம் காட்டியது.
இந்த நிலையில் நீரா ராடியாவிடம் தமிழக அரசியல் வாதிகள் குறிப்பாக கனி மொழி பேசிய உரையாடல் வெளியானது. அந்த உரையாடல்கள் மூலம் ராஜா மட்டும் குற்றவாளி அல்ல என்பது உறுதியாகிறது. திமுகவை பொறுத்தவரை கருணாநிதியின் மனைவியின் பிள்ளைகளுக்கு ஏற்கனவே பல இடங்களில் கொள்ளையடிக்க வாய்ப்பு கொடுத்து இன்று அவர்கள் மிக பெரிய கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். ஆனால் துணைவியின் பிள்ளைக்கு பல கோடிகள் இருந்தாலும் இவர்களை போல் இல்லாத காரணத்தால் இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலை கனிமொழிக்கு ஒதுக்கி கொடுத்தார் கருணாநிதி. அதற்கு எதுவாக ராஜாவை அந்த துறைக்கும் மந்திரி ஆக்கினார். ராஜாவின் மூலமாக கொள்ளை துவங்கியது. இதில் ராஜாவும் பல கொடிகளை சுருட்டி இருக்கிறார்.
இன்னும் இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது ராஜா ஒருவரால் இத்தனை கொடிகளை அடிக்க முடியாது என கருணாநிதி சொன்னது. அப்படி பார்க்கும் போது இந்த ஊழலில் காங்கிரஸ் கட்சிக்கும் மிக பெரிய பங்கு உண்டு. அதனால் தான் இந்த ஊழலை பல வழிகளில் காங்கிரஸ் கட்சி மறைக்க பார்த்தது. அதற்காக தான் விசாரணை நடக்கும் போதே கபில் சிபில் இதில் அரசுக்கு எந்த இழப்பும் வரவில்லை என அறிக்கை விட்டார். இப்போது கபில் சிபிலால் அமைக்க பட்ட விசாரணை கமிட்டியே ராஜா குற்றவாளி என சொல்லி விட்டது. இதற்கு மேல் விசாரிக்க எனக்கு அதிகாரம் இல்லை எனவும் சொல்லி விட்டது.
தலித் அரசியலை கொண்டு வந்து ராஜாவையும் தன்னையும் காப்பாற்றி கொள்ளலாம் என கருணாநிதி திட்டம் போட்டு பார்த்தார் அது நிறை வேற வில்லை. எதிர் கட்சிகளும் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றன. சட்ட மன்ற தேர்தல் வரும் நிலையில் ராஜா ஏன் கைது செய்ய பட்டார் என சந்தேகம் எழுகிறது. ஊடகங்கள் இது தொகுதி பங்கீட்டுக்காக திமுகவை காங்கிரஸ் மிரட்டுவதாக இந்த கைது என ஊகங்கள் வெளியிடுகின்றன ஆனால் உண்மை அதுவல்ல. பட்ஜெட் கூட்ட தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது. மீண்டும் எதிர்கட்சிகள் நாடாளுமன்ற விசாரணை குழு அமைக்க வேண்டும் என போராட தயாராகி கொண்டிருக்கின்றனர். மத்திய அரசு சம்மதிக்க வில்லை என்றால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரை முடக்கவும் தயாராக இருக்கின்றனர். அப்படி நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை வந்தால் கருணாநிதி, சோனியா , கனிமொழி மன்மோகன் சிங் , கபில் சிபில் மற்றும் சிபிஐ முதல் அனைவரும் விசாரிக்க படுவார்கள் . அப்படி விசாரிக்கும் பட்சத்தில் இந்த ஊழலில் பங்கு கொண்ட மேற்சொன்ன அனைத்து தலைகளும் ஆட்டம் காணும். அப்படி ஒரு நிலை வரகூடாது என்பதற்காகவும் , எதிர்கட்சிகளை சமாதன படுத்துவதற்காகவும் ராஜா பலி ஆக்க பட்டிருக்கிறார். உண்மையை சொல்ல போனால் கருனாநிதிக்ககவும், கருணாநிதி குடும்பத்திற்காகவும், சோனியாவுக்ககவும் ராஜா இரண்டு கட்சிகளாலும் பேசி ராஜா கைது செய்ய பட்டிருக்கிறார். இந்த நாடகம் நாடாளுமன்ற கூட்டம் முடியும் வரை தொடரும் பின்னர் ராஜா எந்த தவறும் செய்ய வில்லை என விடுவிக்க படலாம் இல்லை ராஜா தான் குற்றவாளி என மீண்டும் ஒரு முறை பலி ஆடு ஆக்கி ஊழலை மறைத்து விடலாம்.
Friday
தலித் அரசியல்! ராஜா கைது செய்ய பட கூடும் ?
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
இந்தியா,
சிறுபான்மையினர்,
தமிழ் நாடு,
தலித்,
தலித் கிறிஸ்தவர்கள்
எழுதிய நேரம்
Friday, December 24, 2010
கிறிஸ்தவ விழாக்களில் பங்கு பெறும் ஒவ்வெரு அரசியல் தலைவர்களும் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். நேற்று குமரி மாவட்டம் அருமனையில் ஜெயலலிதா பங்கேற்ற கிறிஸ்தவ விழாவில் பல வாக்குறுதிகளை கிறிஸ்தவ மக்கள் மத்தியில் கொடுத்திருக்கிறார். அதில் கிறிஸ்தவ ஆதி திராவிடர்களுக்கும் மற்ற ஆதி திராவிடர்களுக்கும் வழங்கும் அதே சலுகைகளை நடை பெற போகும் கழக ஆட்சியில் நிறைவேற்றுவேன் என்றிருக்கிறார் .அதே போல் கருணாநிதி பங்கேற்ற கிறிஸ்தவ விழாவிலும் பல வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறார் .
சிறுபான்மை மக்கள் மத்தியில் செல்வாக்கை கூட்ட வேண்டும் என்று ஒவ்வெரு கட்சியும் வாக்குறுதிகளை கொடுத்து கொண்டு தான் இருக்கிறார்கள் . கருணாநிதி ஒரு படி மேலே சென்று நாடாளுமன்றத்தில் கிறிஸ்தவ ஆதி திராவிடர்களுக்கும் மற்ற ஆதி திராவிடர்களுக்கு வழங்கும் அதே சலுகையை வழங்க திமுக குரல் கொடுக்கும் என்று சொல்லியிருக்கிறார் .
ஆதி திராவிடர் கிறிஸ்தவர்களுக்கு மற்ற ஆதி திராவிடர்களை போல் சலுகைகள் இல்லை. இதனால் அரசுக்கு தெரியாமல் பல ஆதி திராவிடர்கள் மறைமுக கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள் . இத்தனை காலம் ஆட்சி செய்த பின்னும் இந்த கோரிக்கைகள செயல் படுத்தசிறுபான்மை மக்களுக்கு பயன்படும் வகையில் எந்த திட்டங்களையும் நிறைவேற்ற வில்லை . மத்திய அரசால் அமைக்க பட்ட கமிசன் பரிந்துரைத்த முஸ்லிம்களுக்கு பத்து சதவீத இட ஒதுக்கீடும் கிறிஸ்தவர்களுக்கு ஐந்து சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசோ மாநில அரசோ இதுவரை ஒதுக்கீடு செய்ய வில்லை. வில்லை . பல ஆண்டுகளாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்கின்றான்ர் ஆனால் இது வரை இந்த கோரிக்கைகளுக்கு ஒரு தீர்வு ஏற்பட வில்லை. இதே போல் தான் மத்திய காங்கிரஸ் அரசும் இதுவரை
தேர்தல் வந்தாலே ஒவ்வெரு கட்சியும் சிறுபான்மை மக்களுக்கு நன்மை செய்வதை போலகாட்டி பல வாக்குறுதிகளை அள்ளி வீசு கின்றனர் . உமா சங்கர் என்ற தலித் ஐ ஏ எஸ் அதிகாரியை மத மாற்றத்தை காரணம் காட்டி தற்காலிக பதவி நீக்கியது கருணாநிதி தலைமையிலான இந்த அரசு . ஆட்சியில் இருக்கும் போது செய்ய வேண்டியது எதையும் செய்யாமல் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதிலேயே முனைப்பாக இருக்கிறார்கள். இப்போது கருணாநிதி , வீரமணி போன்றோர் பார்வையில் 2G அலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் செய்து சிக்கிய ராஜா மட்டும் தான் தலித். ஏனெனில் ராஜ செய்த ஊழல் ராஜாவுக்காக இல்லை கனிமொழிக்காக என்பது தான். கனிமொழி கருணாநிதியின் மகளாகி விட்ட்டதால் தன் மகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தலித் அரசியலை கையில் எடுக்கிறார் . இன்று சி பி ஐ முன்பு விசாரணைக்கு ஆஜர் ஆகும் ராஜ கைது செய்ய படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றனார் .............
Thursday
இனி எந்த முகத்தில் செய்தி வெளியிடுவீர்கள் நக்கீரன் கோபால் அவர்களே
எழுதியது
Suresh Kumar
Labels:
2G அலைவரிசை ஊழல்,
அரசியல்,
இந்தியா,
தமிழகம்,
நக்கீரன்,
ராஜாவின் பினாமி
எழுதிய நேரம்
Thursday, December 16, 2010
நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே சங்க கால புலவரின் வரிகளோடும் பெயரோடும் தமிழகத்தில் வீறு நடை போட்டு கொண்டிருக்கிறது நக்கீரன் . ஆனால் இந்த நக்கீரனின் உண்மை முகம் பலருக்கு தெரிவதில்லை. பத்திரிக்கையின் விற்பனையை அதிகரிக்க பொய் செய்திகளை போடுவதில் கில்லாடி பத்திரிகை தான் இந்த நக்கீரன் .
கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் நானும் ஒரு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழருமாக பேசி கொண்டிருந்த பொது நக்கீரன் பற்றிய பேச்சு வந்தது . தோழர் சொன்னார் நக்கீரன் நடுநிலை தவறாத பத்திரிகை உண்மை செய்திகளை போடுவதில் நக்கீரன் மட்டுமே இன்று முன்னோக்கி நிற்கிறது, அரசியல் விமர்சனங்கள் மிகவும் நாடு நிலையோடு இருக்கும் என்று என்னோடு சொன்னார் . நான் அவரோடு விவாதம் செய்தேன் நக்கீரன் தன்னுடைய நடுநிலையை இழந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது .இருந்தாலும் அவர் வாதத்தில் விட்டு கொடுக்காமல் நக்கீரனை புகழ்ந்து பேசி கொண்டிருந்தார் . நான் அந்த நிலையில் ஒரு நாள் நீங்களும் புரிந்து கொள்வீர்கள் தோழரே என்று சொல்லி விட்டு அத்தோடு அந்த விவாதங்களை முடித்து கொண்டோம் .
பின்னர் சில ஆண்டுகள் கழித்து நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர் ஒரு நாள் பேசி கொண்டிருக்கும் போது நக்கீரன் இப்போது வாங்குகிறீர்களா என்றேன் . இல்லை அதன் விமர்சனங்கள் இப்போது ஒரு பக்க சார்பாக இருக்கிறது . நடுநிலை என்பதே இல்லை என்றார் . உடனே நான் சொன்னேன் நீங்கள் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வந்த பின்னர் தான் நக்கீரனின் லட்சணம் உங்களுக்கு தெரிந்திருக்கிறது . நக்கீரன் பல ஆண்டுகளுக்கு முன்னரே நடுநிலை இழந்து விட்டது .நீங்கள் திமுக கூட்டணியில் இருந்ததால் சில நேரங்களில் உங்களை புகழ்ந்து எழுதிய நக்கீரன் நீங்கள் கூட்டணியை விட்டு வெளியே வந்தவுடன் நேர்மாறாக உங்களை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் )பற்றி தவறாக எழுதியது அது தான் உண்மை.
எப்போது அரசு பணம் திமுக சார்பாக நக்கீரனுக்கு கைமாறியதோ அப்போதிலிருந்தே நக்கீரன் தடம் மாறி விட்டடது . கூட்டணி மாறும் அரசியல் தலைவர்களை பற்றி தவறான செய்திகளை போடுவதில் மிக முக்கியமான இடத்தில் இருப்பது இந்த பத்திரிகை . பொய்யான தகவல்களை பக்கத்தில் இருந்து பார்த்தது போல் செய்தி வெளியிடுவதில் வல்லவர் தான் இந்த கோபால் . திமுக கூட்டணியை விட்டு யார் வெளியே வந்தாலும் பல கொடிகள் கைமாறியதாக செய்திகள் போட்டு மக்களை குழப்புவதில் முதலிடம் நக்கீரனுக்கு தான் .
ஒவ்வெரு தேர்தலிலும் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர் ஒரு புகை படம் இந்த பத்திரிகைகளில் வரும் ஜெயலலிதாவும் சசிகலாவும் சேர்ந்து நின்று ஒரு எஸ்டேட் பார்த்து கை காட்டுவது போல் அதில் இருக்கும் . கீழே செய்தி இப்போது ஜெயா வாங்கிய எஸ்டேட் . நான் மூன்று தேர்தலுக்கு இதே புகை படத்தை நக்கீரன் பத்திரிகையில் பார்த்திருக்கிறேன் . அடுத்த சட்ட மன்ற தேர்தலில் கூட அந்த புகைப்படம் வரலாம் .புலானாய்வு என்ற பெயரில் தலைவர்களை மிகவும் கீழ் தரமாக விமர்சிப்பதில் முதலிடம் வகிக்கும் அதே பத்திரிகை இப்போது 2G அலை வரிசை ஒதுக்கீட்டில் ஊழல் செய்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் பினாமி தான் இந்த நக்கீரன் இணை ஆசிரியர் காம ராஜ். பல நாட்களுக்கு முன்னரே பலருக்கு தெரிந்த இந்த பினாமி கதை சி பி ஐ நடத்திய சோதனை மூலமாக இப்போது தமிழகம் முழுவதும் தெரிந்து விட்டடது . நூறு கோடி ரூபாய்க்கு மேல் காமராஜிடம் ராஜா ஊழல் செய்த பணம் கைமாறியதாக தெரிகிறது .
ஒரு பத்திரிகை வைத்திருந்தால் போதும் அதன் மூலமாக கூட கொள்ளையடிக்கலாம் என்பதை செய்து காட்டியது நக்கீரன். இதன் விளைவாக தான் ராஜாவை அனைத்து பத்திரிக்கைகளும் ஊழல் நாயகன் என்று சொல்லி வந்த போதும் நக்கீரன் மட்டும் ராஜா நல்லவர் என்று திரும்ப திரும்ப சொல்லி வந்தது . மிக வேகமாக செய்திகளை கொடுக்கும் நக்கீரன் நேற்று நடைபெற்ற சோதனையை பற்றி தங்கள் இணைய தளத்தில் எந்த செய்தியும் போடவில்லை . பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான் என சொல்வார்கள் இவ்வளவு நாளும் வேறு யாரையெல்லாமோ திருடன் என்று சொன்னவனே இன்று மிக பெரிய திருடனாக பிடி பட்டிருக்கிறான் .
இனி எந்த முகத்தில் செய்தி வெளியிடுவீர்கள் நக்கீரன் கோபால் அவர்களே. ஜனநாயகத்தின் நான்காவது பெரிய தூண் பத்திரிகைகள் ஆனால் இன்று பத்திரிகைகள் ஆளும் கட்சிகள் போடு எச்சிலையை பொறுக்கி தின்று ஜால்ரா அடிப்பதாகவே இருக்கிறது . ஏற்கனவே அனைத்து மீடியாக்களும் ஒரு குடும்பத்தின் கையில் இருக்கும் போது நம்பி இருந்த நக்கீரன் பத்திரிக்கையும் இப்படி ஆகி விட்டதே என மக்கள் நக்கீரன் முகத்தில் காரி துப்புகிறார்கள் .
Friday
சோனியாவிற்கு வேண்டுமென்றால் மகிழ்ச்சியாக இருக்கலாம்
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
இந்தியா,
இலங்கை,
சோனியா,
தமிழ் ஈழம்,
தமிழ்நாடு
எழுதிய நேரம்
Friday, December 03, 2010
மனசாட்சினா என்ன விலை எந்த கடையில கிடைக்கும் என்று கேட்கும் அளவிற்கு இன்றைய சமூக சூழ்நிலை மனிதர்களை மாற்றி இருக்கிறது. நான் நன்றாக இருந்தால் போதும் என் குடும்பம் நன்றாக இருந்தால் போதும் என்ற மனநிலையே இன்று எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது . மற்றவர்களை கடவுள் பார்த்து கொள்வார் என்று அந்த இடத்திலிருந்து கடவுள் மீது பழியை போட்டு தப்பித்து கொள்கிறார்கள் .
அரசன் ஏழையாக இருந்தால் தான் மக்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்று சொல்வார்கள் ஆனால் இன்று மக்களை ஆளுகிறவர்கள் கோடீஸ்வரராக இருக்கிறார்கள் அப்படி இருக்கும் போது மக்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும் . அறிவியல் வளர வளர மனித குலமும் தங்கள் அறிவில் வளர்ந்து தன்னம்பிக்கையோடு மற்றவர்களை கையேந்தாமல் சுய உழைப்பில் வாழ வேண்டும் ஆனால் இன்றோ சூழ்நிலை மாறி விட்டது . ஏதோ ஒன்றுக்கு அடிமையாவது போல் தமிழக மக்கள் இலவசங்களுக்கு அடிமையாகி விட்டனர் . அரசும் மக்களை கவுரவ பிச்சைகாரர்கள் ஆக்கி விட்டது . பிச்சைக்காரனுக்கு பிச்சை போட்டால் அவன் எப்படி நமக்கு அடிமையாக இருப்பானோ அதே நிலை போல் ஓட்டு மொத்த தமிழகமும் மாறி விட்டதோ என தோன்றுகிறது .
ஜனநாயகத்தின் ஒரு தூணாக விளங்குகின்ற பத்திரிகைகள் இன்று நடிகைகளின் கவர்ச்சி படங்களோடு தங்கள் வருமானத்தை ஈட்டி கொள்கின்றனர் . தமிழக பத்திரிகைகள் கள்ள காதலனால் காதலி கொலை என்ற சம்பவங்கள் இருந்தால் முதல் பக்கத்தில் போட்டு ஐந்து பத்தி வரை அவன் அவளை முதலில் சந்தித்த போது அப்படி உறவு நடந்தது , பின்னர் அங்கெ உறவு நடந்தது என்று பலனா புத்தகங்களுக்கு ஈடாக கதை எழுதுவார்கள் . அதை படிப்பவர்களுக்கோ கொலை செய்த குற்றம் தெரிவதை விட எப்படி அவன் அவளோடு தொடர்பு கொண்டான் என்ற சிந்தனை தான் இருக்கும் . உரிமை மீறல்கள் போர் குற்றங்கள் இவற்றை பதிவு செய்து மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை உண்டாக்கும் எண்ணம சற்றும் இல்லாமல் இருக்கின்றன .
இப்போது சானல் 4 தொலைக்காட்சியில் இலங்கை ராணுவத்தால் கற்பழித்து கொலை செய்த காணொளிகள் ஒளிபரப்ப பட்டன . கற்பிற்கு மரியாதை கொடுக்கும் தமிழ் சமூகத்தில் இப்படி ஒரு கொடூரம் நடந்திருக்கிறது என்றால் அதை செய்தவர்கள் மனித பிறவிகளாக இருக்க முடியுமா . கோவையில் இளம் பெண்ணை கடத்தி கற்பழித்து கொலை செய்த கொடூரன் மீது ஏற்பட்ட கோபம் ஏழு தமிழ் பெண்களை உடம்பில் ஒரு துணி இல்லாமல் கொடூரமான முறையில் கொலை செய்த சிங்கள இனவெறியர்கள் மீது ஏன் வர வில்லை . காசுக்க்காகவும் பதவிக்காகவும் தமிழ் இனத்தையே காட்டி கொடுத்து என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என காட்டும் அரசியல் தலைவர்களும் தமிழ் சமுதாயத்தில் மட்டும் தான் இருக்க முடியும் .
உலகத்திலே மிக பெரிய அரக்கனாகவும் போர் குற்றவாளியாகவும் திகழும் மனித குலத்திலே சேர்க்க முடியாத சிங்கள இனவெறியன் ராஜபட்சே செல்லும் இடமெல்லாம் விரட்ட புலம் பெயர் தமிழர்கள் தயாராகி விட்டனர் . அதன் எதிரொலி தான் எதற்காக லண்டனுக்கு இந்த அரக்கன் சென்றானோ அதை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது . இங்கிலாந்தில் புலி கொடியேந்தி போராட அந்நாட்டு காவல் துறை அனுமதி கொடுக்கிறது . ஆனால் தமிழர் பிரச்சனைக்காக தமிழர்கள் போராடினால் கைது செய்கிறது தமிழக அரசு மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத அரசு என்ன அரசு .
உலக மக்கள் பார்வையில் தூக்கிலிட பட வேண்டியவன் தான் இந்த ராஜ பட்சே . ஆனால் இந்திய அரசோ அவனை கவுரவ படுத்துகிறது . இங்கிலாந்து காவல் துறை ராஜ பக்சேவை கைது செய்யலாமா என ஆராய்ந்து வருகிறது . ஹிட்லர் , முசோலினி , இடி அமின் போன்ற சர்வாதிகாரிகளுக்கு அடுத்த படியாக அதை விட பல மடங்கு போர் குற்றங்கள் புரிந்த போர் குற்றவாளியை இந்தியாவில் கவுரவ படுத்தியது இந்தியாவிற்கே அவமானம் . சோனியாவிற்கு சோனியாவிற்கு வேண்டுமென்றால் மகிழ்ச்சியாக இருக்கலாம் . ஏனெனில் முசோலினி பிறந்த மண்ணில் பிறந்தவள் தானே. தமிழர்களின் கலாசாரம் கற்பு பற்றி என்ன தெரியும் .
புலம் பெயர் தமிழர்களோடு தமிழக தமிழர்களும் ஓன்று பட்டு போராடினால் இன்னும் சில காலங்களில் தமிழ் பெண்களை கற்பழித்தும் போர் குற்றங்கள் புரிந்த சிங்கள இனவெறியர்களை தண்டிக்க முடியும் அதற்கான உதாரணம் தான் ராஜபட்சேவிற்கு தமிழர்களால் லண்டனில் ஏற்பட்ட அவமானம் . ஓடாத மானும போராடாத இனமும் நிம்மதியாய் வாழ முடியாது . இதே நிலை நாளை நமக்கும் வரலாம் . ஏன் காங்கிரஸ் தோழர்களுக்கு கூட வரலாம் .....
அரசனை நம்பி புருசனை கைவிட்ட திமுக
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
இந்தியா,
கலைஞர்,
தமிழகம்,
தமிழ் ஈழம்,
திமுக
எழுதிய நேரம்
Friday, November 19, 2010
தமிழகத்தில் திமுகவின் நான்காண்டு சாதனைகளை சொல்லி கொண்டே போகலாம் என உடன் பிறப்புகள் தங்களுக்குள் மகிழ்ச்சி பொங்க பேசி கொண்டிருக்கிறார்கள் . கடந்த ஒரு வார காலமாக உடன் பிறப்புகளுக்கு எங்கு சென்றாலும் என்ன உங்களை இந்த பக்கம் காணவே இல்லை அந்த குரல்களோடு சிலர் அழைத்து என்னையா இது ஒன்னு ரெண்டு கோடியா ....................? எவ்வளவுயா? உனக்கு ஏதாவது ......? இப்படியே தான் மக்களின் பேச்சுக்கள் இருக்கின்றன .
நான்கு ஆண்டுகளில் திமுக என்ன சாதித்தோ இல்லையோ அதுவல்ல ஆனால் இந்தியாவில் மட்டுமல்லாது உலகத்திலே மிக பெரிய ஊழலாக கருத படும் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழலால் ஒரு கெட்ட பெயர் உருவானது என்னவோ உண்மை . பதவி வேண்டும் என்றால் யார் காலிலும் விழுந்து யாரை வேண்டுமானாலும் காட்டி கொடுத்து வாழும் காலமாக இந்த காலம் மாறிவிட்டது . மனிதாபிமானமோ ,கொள்கையோ , இரக்கமோ , தொலைநோக்கு பார்வையோ சிறிதும் இல்லாமல் போய்விட்டது . தமிழகம் உணர்வற்ற மாநிலமாக மாறிவிட்டது . அதன் விளைவு உலகத்திலே மிக பெரிய ஊழல் செய்தவன் தமிழன் என்ற பெயர் கிடைத்திருக்கிறது . மக்களின் எண்ணங்களோ சில்லறைக்கு ஆசைப்பட்டு ருபாய் நோட்டுகளை தொலைப்பதை போலாகி விட்டது . சிந்திக்கும் ஆற்றல அற்று போய் விட்டது .
திமுகவின் இந்த நான்கு ஆண்டு காலங்களில் தமிழர்கள் தங்கள் உரிமைகளை தொலைத்தது ஏராளம் . அடுத்த தலைமுறையினரின் வாழ்க்கையை பதவிக்காக விலை பேசி விட்டது . காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சியில் அமைச்சர் பதவி மட்டும் போதும் அதன் மூலம் நாங்கள் பிழைத்து கொள்ளலாம் என இருந்த விளைவு தான் . முல்லை பெரியாறு மீதான நமது உரிமை பறி போய் கொண்டிருக்கிறது . காவிரியில் கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காமல் போகிறது . காங்கிரஸ் தலைமையிலான அரசின் மூலம் திட்டமிட்டு நடத்த பட்ட தமிழர்கள் அழிப்பின் போது கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது தான் திமுக அரசு .
மீனவர்கள் நலனை பாதிக்கும் சட்டங்கள் கொண்டு வந்த போதும் ஆதரவளித்து கொண்டிருந்தது . சிங்கள கடற்படையினால் தமிழக மீனவர்கள் சுட பட்ட போது தடுக்க்கவுமில்லை தட்டி கேட்கவுமில்லை . ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் என்ன ஆனது என்றே இதுவரை தெரியவில்லை . ரேசன் கடைகளில் அரிசி ஒரு ருபாய் மற்ற அனைத்து அடிப்படை பொருட்களும் பல மடங்கு விலையேற்றம் . இன்று நடுத்தர மக்களே வீடு கட்ட முடியாதவாறு கட்டுமான பொருட்களின் விலையேற்றம் இருக்கும் போது ஏழை மக்களின் நிலை என்ன?
பதவி சுகங்களை தவிர மக்கள் நலனில் சிறிதும் அக்கறையற்ற ஒரு ஆட்சி இன்று மக்களால் புறக்கணிக்க கூடியதாக இருக்கிறது . ராஜாவின் ஊழலால் ஓட்டு மொத்த தமிழகமே தலை குனிய வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது. சோனியா தலைமையிலான காங்கிரஸ் அரசோ இத்தனை நாளும் கலைஞரால் என்ன சாதிக்க முடியுமோ அதை சத்தமின்றி நாய்க்கு பிஸ்கட் கொடுத்தது மாதிரி மந்திரி பதவிகளை கொடுத்து விட்டு காரியத்தை சாதித்து விட்டார் . எல்லாம் முடிந்த பின்னர் ராஜாவையும் கழற்றி விட்டு விட்டார் . இன்று கலைஞரின் ஒரே நினைவுகள் காங்கிரஸ் நம்மை விட்டு பிரிந்து விடுமோ ? என்பது தான் அதை தான் செல்லுமிடமெல்லாம் தன் ஏக்கங்களை பதிவு செய்து கொள்கிறார் . மக்கள் மீது அக்கறையின்றி நடக்கும் இந்த அரசு அரசனை நம்பி புருசனை கை விட்ட கதை போலாகி விட்டது .
Monday
புதிய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் கபில் சிபில்
புதிய தொழில் நுட்ப துறை அமைச்சராக கபில்சிபில் நியமிக்க படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . ஊழல் குற்ற சாட்டின் பேரில் அமைச்சர் பதவியை ராஜினமா செய்த ராஜாவுக்கு பதிலாக அந்த பொறுப்பை பிரதமர் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டது .
இந்நிலையில் புதிய தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சராக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபில் நியமிக்க படுவதாக தெரிகிறது . டி ஆர் பாலு இதே துறை மீண்டும் தீமுகவிற்கே ஒதுக்கப்படும் என்று தெரிவித்த நிலையில் இந்த செய்தி திமுக மத்தியில் கலக்கத்தை உண்டாக்கும் என்பதில் மாற்றம் இருக்காது .
Read More
இந்நிலையில் புதிய தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சராக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபில் நியமிக்க படுவதாக தெரிகிறது . டி ஆர் பாலு இதே துறை மீண்டும் தீமுகவிற்கே ஒதுக்கப்படும் என்று தெரிவித்த நிலையில் இந்த செய்தி திமுக மத்தியில் கலக்கத்தை உண்டாக்கும் என்பதில் மாற்றம் இருக்காது .
யார் ஸ்பெக்ட்ரம் குற்றவாளி ?
யார் ஸ்பெக்ட்ரம் குற்றவாளி ?
எழுதியது
Suresh Kumar
Labels:
இந்தியா,
கருணாநிதி,
திமுக,
ராஜா,
ஸ்பெக்ட்ரம் ஊழல்
எழுதிய நேரம்
Monday, November 15, 2010
ராஜாவா ? மன்மோகன் சிங் ? சோனியா? கருணாநிதி? கனிமொழி? யார் தான் குற்றவாளி . ஒரு குற்றம் நடந்தால் அதில் குற்றவாளி யார் என விசாரித்தால் பலரும் குற்றத்தில் சம்மந்த பட்டிருப்பார்கள் . இன்று இந்தியாவையை அதிர வைத்திருக்கும் ஊழல் தான் இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் . ஆசிய கண்டத்திலேயே மிக பெரிய ஊழல் இது தான் என்றும் சொல்லுகிறார்கள் . உலகின் மிக பெரிய மக்களாட்சி நாடு இந்தியாவில் தான் இப்படி நடக்கும் .
இந்தியா இதுவரை பல ஊழல் வாதிகளை கண்டிருக்கிறது . ஆனால் இது மிக பெரிய ஊழல் என்றே கணக்கிட படுகிறது . இப்படி ஒரு ஊழல் நடந்திருக்கிறது என்று தெரிந்தவுடனே முதன் முதலில் மாறன சகோதரர்களின் மீடியாக்களில் தான் பிரபலமாக ஊழலுக்கு எதிராக பிரச்சாரம் முன்னெடுக்க பட்டது . இது ஒரு பூதாகரமாக அமைந்து விடுமோ என எண்ணிய கலைஞர் மாறன சகோதரர்களிடம் மண்டியிட்டது வேறு . மாறன சகோதரர்களை அமுக்கி விட்டால் பிரச்னை தீர்ந்து விடும் என கணக்கு போட்ட கருணாநிதிக்கு மக்கள் விளிப்புனர்வாலும் மற்ற ஊடகங்களாலும் மத்திய கணக்கு அதிகாரிகள் மூலமாகவும் மீண்டும் பிரச்னை வந்தது . எதிர்கட்சிகள் ராஜாவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் . ராஜா மீது சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து நாடாளுமன்றத்தை முடக்கினர் . பின்னர் ஒரு வழியா ராஜா ராஜினமா செய்வதாக அறிவிக்க பட்டது .
ஆனால் உண்மையில் யார் குற்றவாளி? ராஜா மட்டும் தானா? கிடையாது ராஜா பலிக்கு கொடுக்க பட்ட ஆடு மட்டும் தான் . இத்தனை கோடிகளையும் ராஜா சுருட்டியிருப்பார் என நினைத்தால் அது தான் தவறு . இந்திய அரசியல் கேளிகூத்தாட படும் போது இவ்வாறு ஊழல்கள் இருக்க தான் செய்யும் . கூட்டணி ஆட்சியை உண்மையான கூட்டாட்சி என்று ஏமாற்றி கொண்டிருக்கும் அரசியல் வாதிகள் தாங்கள் கையில் அதிகாரம் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் . அதற்கு பணம் ஒன்றே போதும் என்ற குறிக்கோள்களில் தான் இந்த கொள்ளையடிப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன . ஊழலை தண்டிக்க சரியான சட்டங்கள் இல்லாததால் தான் இந்த நிலை . அப்படி ஒரு சரியான சட்டங்கள் எந்த அரசியல் நிற்பந்தங்களுக்கும் பணியாமல் இருந்திருந்தால் இன்று கருணாநிதியால் முதலமைச்சராக இருந்திருக்க முடியாது .
தமிழகத்திலேயே முதன் முதலாக ஒரு ஊழல் ஆட்சியை கொடுத்தவர் தான் இப்போதைய முதல்வர். அப்போதைய சர்க்காரிய கமிசன் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்ய பட்டுள்ளது என அறிக்கை அளித்தது . அரசியலுக்காக அந்த வழக்குகள் தள்ளுபடி செய்ய பட்டது எல்லாம் முடிந்து போன கதை . அந்த தைரியத்தில் தான் இவர்களால் துணிந்து ஊழல் செய்ய முடிகிறது .
இந்த மிக பெரிய ஊழலில்காங்கிரஸ் கட்சிக்கு பலன் இருந்ததாகவும் சொல்ல படுகிறது . அதனால் தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆற்று வெள்ளம போல் பணம் இறக்க பட்டது . ஆனால் இதில் மிக பெரிய பலன் அடைந்தது திமுகவும் அதன் தலைவர் கருணாநிதியும் தான் ஊழலில் கிடைத்த லாப பணத்தை ராஜா ஒருவர் கொண்டு போக முடியாது . ராஜாவுக்கு இந்த ஊழலில் எவ்வளவு பங்கு இருக்கிறதோ அதை விட இரண்டு மடங்கு பங்கு கருணாநிதிக்கும் கருணாநிதி குடும்பத்திற்கும் இருக்கிறது . கருணாநிதியால் மட்டுமே இத்தனை கோடிக்கு ஊழல் செய்ய சிந்திக்க முடியும் . ராஜா ஒருவரால் இது முடியாது . இந்த ஊழலில் முக்கிய குற்றவாளியாக பார்த்தால் கருணாநிதியும் அவர் குடும்பமும் தான் கடைசியில் பல்கடாக்கப்பட்டார் ராஜா .
சிலருடைய வாதங்கள் இது அரசுக்கு ஏற்பட்ட இழப்பு தானே தவிர ராஜா ஊழல் செய்ததாக எங்கேயும் சொல்லவில்லை . அவர்களுக்கு நான் சொல்லும் பதில் இத்தனை கோடி ருபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை விட இழப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இது திட்டமிட்டு இழப்பை ஏற்படுத்தியது . திட்டமிட்டு இழப்பை ஏற்படுத்தியதால் ஏற்பட்ட பலன் தான் ஊழல் . இந்த ஊழலில் ராஜாவை மட்டும் பலி ஆடு ஆக்காமல் தீர விசாரித்து ஊழல் செய்து அரசுக்கு இழப்பு எற்படுத்தியவர்களை தண்டிக்க வேண்டும் . இது தான் அனைவருடைய விருப்பம் .
Friday
முல்லை பெரியாறில் தமிழர் உரிமை காக்க வைகோ தலைமையில் உண்ணாவிரதம்
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
இந்தியா,
உண்ணாவிரதம்,
தமிழகம்,
மதிமுக,
வைகோ
எழுதிய நேரம்
Friday, November 13, 2009
முல்லை பெரியாறில் தமிழக மக்களின் உரிமையை பறிக்கும் வகையில் புதிய ஆணை கட்ட முதற் கட்ட பணிகளை துவக்கிய கேரள அரசையும் , ஆய்வு பணிக்கு அனுமதி வழங்கிய மத்திய தமிழர் விரோத காங்கிரஸ் அரசையும் கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் மதுரையில் நாளை மாபெரும் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

ஏற்கனவே மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேசை கண்டித்து மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த திமுக பின்னர் ராஜாவின் ஷ்பெக்ட்ராம் ஊழலை மத்திய காங்கிரஸ் அரசு சிபிஐ மூலமாக விரைவு படுத்தி திமுக மத்திய அமைச்சர் ராஜாவின் அலுவலகம் முழுவதும் அதிரடி சோதனை செய்தார்கள் . இதையடுத்து கண்டன பொதுக்கூட்டத்தை நடத்துவதிலிருந்து விலகி கொண்டது திமுக. இப்படி ஊழல் விவகாரங்களுக்காக மக்கள் நலனை காற்றில் பறக்க விடும் திமுக அரசையும் கண்டித்து நடைபெறும் உண்ணாவிரத போராட்டம் மிகவும் முக்கியமானதாக கருத படுகிறது .
தென் மாவட்டங்களில் உள்ள ஐந்து மாவட்டங்கள் முல்ல்லை பெரியாறை நம்பி தான் விவசாயங்கள் இருக்கிறது . கேரளா அரசு திட்டமிட்டு தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க கூடாது என வீண் புரளிகளை கிளப்பி விடுகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் மதிக்காமல் , இந்திய இறையாண்மையை பற்றியும் கவலை படாமல் செயல் பட்டு வருகிறது . கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டிற்கு சாதகமாக இருந்த வழக்கு தற்போது தமிழக அரசின் திறமையற்ற வாதத்தினால் கேரளத்திற்கு சாதகமாக செல்லும் நிலைமை ஏற்பட்டு உள்ளது . இதன் ஒரு பகுதி தான் வழக்கை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றியது.
இந்த சூழ்நிலையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது . மாற்றங்களை உருவாக்குமா ? உண்ணாவிரத போராட்டம் .

ஏற்கனவே மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேசை கண்டித்து மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த திமுக பின்னர் ராஜாவின் ஷ்பெக்ட்ராம் ஊழலை மத்திய காங்கிரஸ் அரசு சிபிஐ மூலமாக விரைவு படுத்தி திமுக மத்திய அமைச்சர் ராஜாவின் அலுவலகம் முழுவதும் அதிரடி சோதனை செய்தார்கள் . இதையடுத்து கண்டன பொதுக்கூட்டத்தை நடத்துவதிலிருந்து விலகி கொண்டது திமுக. இப்படி ஊழல் விவகாரங்களுக்காக மக்கள் நலனை காற்றில் பறக்க விடும் திமுக அரசையும் கண்டித்து நடைபெறும் உண்ணாவிரத போராட்டம் மிகவும் முக்கியமானதாக கருத படுகிறது .
தென் மாவட்டங்களில் உள்ள ஐந்து மாவட்டங்கள் முல்ல்லை பெரியாறை நம்பி தான் விவசாயங்கள் இருக்கிறது . கேரளா அரசு திட்டமிட்டு தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க கூடாது என வீண் புரளிகளை கிளப்பி விடுகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் மதிக்காமல் , இந்திய இறையாண்மையை பற்றியும் கவலை படாமல் செயல் பட்டு வருகிறது . கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டிற்கு சாதகமாக இருந்த வழக்கு தற்போது தமிழக அரசின் திறமையற்ற வாதத்தினால் கேரளத்திற்கு சாதகமாக செல்லும் நிலைமை ஏற்பட்டு உள்ளது . இதன் ஒரு பகுதி தான் வழக்கை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றியது.
இந்த சூழ்நிலையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது . மாற்றங்களை உருவாக்குமா ? உண்ணாவிரத போராட்டம் .
Thursday
இளங்கோவனை பார்த்து பயந்தார்களா ? கருணாநிதி கும்பல்

இந்தியாவிலே ஊழலில் முதலிடத்தில் இருப்பது கருணாநிதி தலைமையிலான திமுக தான் என்பதில் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை . முல்லை பெரியாறு ஆணை விவகாரத்தில் கேரளாவிற்கு ஆய்வு பணிக்கு அனுமதி கொடுக்கும் வரை கண்டு கொள்ளாமல் ( தெரியாமலிருந்திருக்குமோ ) இருந்து விட்டு எதிர் கட்சிகள் போராட்டம் நடத்திய பின்னர் வேண்டா வெறுப்பாக உச்ச நீதி மன்றத்தில் தடை உத்தரவு பெற மனு தாக்கல் செய்து வழக்கை வாதாட தெரியாமல் தமிழகத்திற்கு பாதகமான இடைக்கால தீர்ப்பை வாங்கிய பெருமை கருணாநிதிக்கே சாரும் .
மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்க ஆடிய நாடகம் தான் மதுரையில் நவம்பர் ஒன்றாம் தேதி மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேசை எதிர்த்து கண்டன கூட்டம் என அவசர கோலத்தில் பின் விளைவுகளை பற்றி அறியாமல் அறிவித்தார் . முசோலினி வம்சா வழியில் வந்த சோனியா விடுவாரா கடந்த முறை கூட்டு சேர்ந்து கொள்ளையடித்த ஸ்பெக்த்ராம் ஊழலை தோண்ட முடிவெடுத்து தடா புடலாக cpi ராஜாவின் அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தியது . 22000 கோடி ருபாய் அளவிற்கு ராஜா அமைச்சரவையின் கீழ் ஊழல் நடந்திருப்பதாக வழக்கு பதிவு செய்ய பட்டது .
இதை பார்த்த திமுக கொள்ளை கும்பல் பயந்து போனது வண்டவாளம் எல்லாம் வெளியில் வரும் என நினைத்து . இதனிடையே போதுக்கூட்ட்டத்தில் பேசிய தமிழ் விரோதி இளங்கோவன் திமுகவின் ஊழலை எதிர்த்து காங்கிரஸ் காரர்கள் போராட்டம் நடத்த வேண்டும் என பேசினார் . இதை எதிர் பார்க்காத திமுக கூட்டம் அவசர அவசரமாக கண்டன கூட்டம் நடை பெறாது என்றது .
இப்படி தான் நாடகமாடி சோனியாவுக்கு பல்லாக்கு தூக்கி 2 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் ஈழத்திலே சாவதற்கு காரணமாகி போனார் கருணாநிதி . ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திலே காங்கிரஸ் கட்சிக்காக அந்த திட்டத்தையே கானல் நீராக்கி மூன்று மாவட்ட மக்களின் குடிநீரில் உலை வைத்தார் . இப்போது 22000 கோடி பணத்திற்காக ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதார பிரச்சனையில் தமிழர்களுக்கு எதிராக செயல் படுகிறார் .
தமிழகத்தின் இயற்கை துறைமுகமான குளச்சலில் துறைமுகம் ஏற்படுத்த மக்கள் விடுத்த கோரிக்கை கூட காற்றில் பறந்து கேரளா மாநிலத்திற்கு சென்று விட்டதாக தெரிகிறது .
இப்படியே நாள் முழுக்க சிந்த்தித்து தன் குடும்பத்திற்கு மட்டுமே உழைத்து கொண்டு ஒட்டு மொத்த தமிழினத்தின் எதிர் காலத்தை கேள்வி குறியாக்கிய கருணாநிதிக்கு தமிழர்கள் என்ன கைம்மாறு செய்ய போகிறார்களோ . முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரளா முதல்வர் அச்சுதானந்தன் பாராட்ட வேண்டிய அளவிற்கு கருணாநிதி நடக்கிறார் என்பது கேரளா மாநில மக்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம் .
இதே நிலை நீடித்தால் ஒட்டு மொத்த தமிழனின் நிலை .....................
Wednesday
பதவி, பணம் தவிர மாற்ற அனைத்து நலன்களுக்கும் கேரளாவிற்கு தான் முன்னுரிமையா ?
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
இந்தியா,
கேரளம்,
தமிழகம்
எழுதிய நேரம்
Wednesday, October 21, 2009

இந்தியாவை ஆளுகிற மாநிலம் எது என்ற எண்ணம் ஏற்படுகிறது என கருணாநிதி கோபமாக ஓர் அறிக்கையை விட்டிருக்கிறார் . முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு கேரளா மாநிலத்திற்கு சாதகமாக நடப்பதாக சொல்லி இப்படி ஒரு அறிக்கையை விட்டிருக்கிறார் .
எதிர் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் முன்னரே எச்சரித்தும் அலட்சியமாக இருந்து விட்டு நிலைமை கிளைமாக்ஸ் கட்டத்திற்கு செல்லும் போது தூக்கத்தை கலைத்திருக்கிறார் . தமிழக அரசோ மத்திய அரசில் பதவி வாங்குவதிலும் அதன் மூலம் பணம் சம்பாதிப்பதிலும் குறியாக இருக்கும் போது கேரள அரசோ மத்திய அரசின் மூலமாக கேரளா மாநிலத்திற்கு என்ன வேண்டுமோ அதை சாதிக்கிறார்கள் . கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டிற்கு சாதகமாக இருந்த நிலை மாறி இப்போது கேரளா மாநில அரசுக்கு சாதகமாக மாறிய நிலை ஏற்படுகிறது .
கேரள அரசு புதிய அணை கட்டியே தீருவோம் என உறுதியாக இருக்கிறது சர்வே பணிகள் பெரும்பாலும் முடிவடைந்து விட்டதாக தெரிகிறது . இத்தனை காலமும் தமிழக அரசு என்ன செய்து கொண்டிருந்தது . முதலமைச்சருக்கு தான் வயதாகி விட்டது என்றாலும் அதிகார்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் , துணை முதல்வர் என்ன செய்து கொண்டிருக்கிறார் ? இப்படி பல கேள்விகள் எழுகின்றன .
பிரச்சனை நடக்கும் இடத்தில் காவல் துறை எல்லாம் முடிந்த பின்னர் வருவது போல் தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது . கேரள மாநில அரசை நடத்தும் கட்சியோ மத்திய அரசில் எந்த பதவியும் வகிக்க வில்லை காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவும் அழைக்க வில்லை ஆனால் அவர்கள் தேவை பூர்த்தியாகிறது . ஆனால் தமிழக திமுகவோ மத்திய காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கிறது . மத்திய அரசில் பங்கு வகிக்கிறது . ஆனால் நம் உரிமைகள் பறிபோகிறது .
கேரள மாநில அதிகாரிகள் மத்திய அரசை ஆட்டிவிக்கின்றனர் என்பது எல்லோரும் அறிந்ததே ஆனால் அது நமது கையாலாகாத தனம் தானே தவிர வேறொன்றுமில்லை . கேரள அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி தான் ஈழத்திலே இரண்டு லட்சம் மக்கள் சாவதற்கு இந்தியாவும் தமிழகமும் காரணமானது . அந்த நேரத்தில் சோனியாவும் , பதவியும் முக்கியம் என்று மௌநியாவே இருந்தோம் . அப்படி தமிழனுக்கு சூடு சொரணை இல்லை என்பதை தெரிந்து தானே மத்திய அரசு தமிழனுக்கு எதிராக மீண்டும் ஒரு துரோகம் செய்திருக்கிறது . பதவி வாங்க சட்டையை பிடித்த நாம் ஏன் உரிமைக்காக சட்டையை பிடிக்க முடியவில்லை இதை சிந்தியுங்கள் , மற்றும் நமது கையாலாகாத தனத்தையும் சிந்தியுங்கள் தமிழின உரிமை பறிபோகாது .
எதிர் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் முன்னரே எச்சரித்தும் அலட்சியமாக இருந்து விட்டு நிலைமை கிளைமாக்ஸ் கட்டத்திற்கு செல்லும் போது தூக்கத்தை கலைத்திருக்கிறார் . தமிழக அரசோ மத்திய அரசில் பதவி வாங்குவதிலும் அதன் மூலம் பணம் சம்பாதிப்பதிலும் குறியாக இருக்கும் போது கேரள அரசோ மத்திய அரசின் மூலமாக கேரளா மாநிலத்திற்கு என்ன வேண்டுமோ அதை சாதிக்கிறார்கள் . கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டிற்கு சாதகமாக இருந்த நிலை மாறி இப்போது கேரளா மாநில அரசுக்கு சாதகமாக மாறிய நிலை ஏற்படுகிறது .
கேரள அரசு புதிய அணை கட்டியே தீருவோம் என உறுதியாக இருக்கிறது சர்வே பணிகள் பெரும்பாலும் முடிவடைந்து விட்டதாக தெரிகிறது . இத்தனை காலமும் தமிழக அரசு என்ன செய்து கொண்டிருந்தது . முதலமைச்சருக்கு தான் வயதாகி விட்டது என்றாலும் அதிகார்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் , துணை முதல்வர் என்ன செய்து கொண்டிருக்கிறார் ? இப்படி பல கேள்விகள் எழுகின்றன .
பிரச்சனை நடக்கும் இடத்தில் காவல் துறை எல்லாம் முடிந்த பின்னர் வருவது போல் தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது . கேரள மாநில அரசை நடத்தும் கட்சியோ மத்திய அரசில் எந்த பதவியும் வகிக்க வில்லை காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவும் அழைக்க வில்லை ஆனால் அவர்கள் தேவை பூர்த்தியாகிறது . ஆனால் தமிழக திமுகவோ மத்திய காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கிறது . மத்திய அரசில் பங்கு வகிக்கிறது . ஆனால் நம் உரிமைகள் பறிபோகிறது .
கேரள மாநில அதிகாரிகள் மத்திய அரசை ஆட்டிவிக்கின்றனர் என்பது எல்லோரும் அறிந்ததே ஆனால் அது நமது கையாலாகாத தனம் தானே தவிர வேறொன்றுமில்லை . கேரள அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி தான் ஈழத்திலே இரண்டு லட்சம் மக்கள் சாவதற்கு இந்தியாவும் தமிழகமும் காரணமானது . அந்த நேரத்தில் சோனியாவும் , பதவியும் முக்கியம் என்று மௌநியாவே இருந்தோம் . அப்படி தமிழனுக்கு சூடு சொரணை இல்லை என்பதை தெரிந்து தானே மத்திய அரசு தமிழனுக்கு எதிராக மீண்டும் ஒரு துரோகம் செய்திருக்கிறது . பதவி வாங்க சட்டையை பிடித்த நாம் ஏன் உரிமைக்காக சட்டையை பிடிக்க முடியவில்லை இதை சிந்தியுங்கள் , மற்றும் நமது கையாலாகாத தனத்தையும் சிந்தியுங்கள் தமிழின உரிமை பறிபோகாது .
தமிழர்களை கொன்று குவித்த இனவெறியனுக்கு பொன்னாடையா ?
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
இந்தியா,
இலங்கை,
இனபடுகொலை,
தமிழகம்,
தமிழ் ஈழம்
எழுதிய நேரம்
Wednesday, October 14, 2009
இலங்கையில் தமிழ் ஈழ மக்கள் சுமார் ஒரு லட்சம் பேரை கொன்று குவிக்க உறுதுணையாக இருந்து விட்டு இப்போது சுற்றுலா சென்றிருக்கிற தமிழக திமுக கூட்டணி நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் தமிழர்களை கொன்று குவித்த நவீன கிட்லர் ராஜ பக்ஷேவுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டியிருக்கிறார்கள் .
உலக நாடுகள் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேச நீதி மன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என குரல் கொடுத்து வரும் இந்த வேளையில் தமிழக குழு இலங்கை சென்று பிணம் தின்னி மகிந்தாவுக்கு பொன்னாடை போர்த்தியது தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டு பண்ணியிருக்கிறது .

திமுக , காங்கிரஸ் கட்சியினர் ஏற்கனவே உருவாக்கி கொண்டு சென்ற அறிக்கையை தமிழகத்தில் சமர்பிக்க இருக்கின்றனர் . இதுவரை முகாம்களை சென்று பார்த்த அனைத்து வெளி நாட்டவர்களும் மக்களுக்கான அடிப்படி தேவைகள் இல்லை , இது ஒரு திறந்த வெளி சிறைச்சாலை என்று சொல்லியிருக்கிற வேளையில் காங்கிரஸ் எம்பி சுதர்சன நாச்சியப்பன் முகாம்கள் சர்வதேச அளவில் தரம் வாய்ந்ததாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார் . சர்வதேச தரம் என்பது என்ன என்று தெரியுமா என்பது தெரியவில்லை .
தங்களுடைய சொந்த நாட்டை சிங்கள அரசு ஆக்கிரமித்து சொந்த நாட்டிலேயே சிங்கள இனவெறி அரசால் சிறை பிடிக்க பட்டுள்ளனர் . எந்த தவறுமே செய்யாத மக்களை சிறை பிடித்து அந்த மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள இனவெறி அரசு சர்வதேச தரத்திற்கு முகாம் அமைத்திருக்கிறது என்றால் எப்படி இருக்கும் . தப்பு செய்யாத ஒருவனை சிறையில் அடைத்து சிறையில் வசதிகள் செய்து கொடுத்தால் அது சுதந்திரமா ?

வேலியே பயிரை மேய்ந்த கதையை கேள்வி பட்டிருப்போம் . இங்கே பயிரை மேய்ந்தவனையே விட்டு பாதிப்பு எவ்வளவு என பார்க்க சொல்கிறார்கள் . அங்கெ இன்று சிறையில் அடைபட்டிருக்கும் ஈழ தமிழனாக இருந்தாலும் சரி சிங்கள இனவெறி அரசால் கொல்லப்பட்ட ஈழ தமிழனாக இருந்தாலும் சரி அவனின் இத்தனை நிலைமைக்கும் காரணம் மத்திய மாநில அரசுகள் தானே . சிங்கள இனவெறி தலைவனை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டிய நேரத்தில் நீங்கள் பொன்னாடை அணிவித்தது நியாயமா ? நீங்கள் பொன்னாடை அணிவித்து இனபடுகொலையை அங்கீகரிக்க தான் சென்றீர்களா ?
பசில் ராஜ பக்சேவை டி ஆர் பாலு ஆற தழுவி கொண்டார்
உலக நாடுகள் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேச நீதி மன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என குரல் கொடுத்து வரும் இந்த வேளையில் தமிழக குழு இலங்கை சென்று பிணம் தின்னி மகிந்தாவுக்கு பொன்னாடை போர்த்தியது தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டு பண்ணியிருக்கிறது .

தங்களுடைய சொந்த நாட்டை சிங்கள அரசு ஆக்கிரமித்து சொந்த நாட்டிலேயே சிங்கள இனவெறி அரசால் சிறை பிடிக்க பட்டுள்ளனர் . எந்த தவறுமே செய்யாத மக்களை சிறை பிடித்து அந்த மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள இனவெறி அரசு சர்வதேச தரத்திற்கு முகாம் அமைத்திருக்கிறது என்றால் எப்படி இருக்கும் . தப்பு செய்யாத ஒருவனை சிறையில் அடைத்து சிறையில் வசதிகள் செய்து கொடுத்தால் அது சுதந்திரமா ?

வேலியே பயிரை மேய்ந்த கதையை கேள்வி பட்டிருப்போம் . இங்கே பயிரை மேய்ந்தவனையே விட்டு பாதிப்பு எவ்வளவு என பார்க்க சொல்கிறார்கள் . அங்கெ இன்று சிறையில் அடைபட்டிருக்கும் ஈழ தமிழனாக இருந்தாலும் சரி சிங்கள இனவெறி அரசால் கொல்லப்பட்ட ஈழ தமிழனாக இருந்தாலும் சரி அவனின் இத்தனை நிலைமைக்கும் காரணம் மத்திய மாநில அரசுகள் தானே . சிங்கள இனவெறி தலைவனை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டிய நேரத்தில் நீங்கள் பொன்னாடை அணிவித்தது நியாயமா ? நீங்கள் பொன்னாடை அணிவித்து இனபடுகொலையை அங்கீகரிக்க தான் சென்றீர்களா ?
பசில் ராஜ பக்சேவை டி ஆர் பாலு ஆற தழுவி கொண்டார்
Saturday
இனி என்ன செய்ய போகிறது இந்தியா ?
எழுதியது
Suresh Kumar
Labels:
அவமானம்,
இந்தியா,
இலங்கை,
இனபடுகொலை,
தமிழ் ஈழம்,
விடுதலை புலிகள்
எழுதிய நேரம்
Saturday, June 06, 2009
சிங்கள இனவெறி அரசின் இனவெறிக்கு விடுதலை புலிகள் மீதான கோபத்தால் தீனி போட்ட இந்திய அரசானது தமிழர்கள் மீதான இனபடுகொலையை கண்டித்து மக்கள் போராட்டங்களை நடத்திய போது நாங்கள் அங்கே வாழும் தமிழ் மக்கள் மீது மட்டும் தான் அக்கறை காட்ட முடியும் என்று பதிலளித்தது .
இன்று விடுதலை புலிகளையும் ஒழித்து விட்டாச்சு கூடவே இந்தியா உட்பட ஏழு நாடுகள் உதவியோடு 35000 மேற்பட்ட அப்பாவி மக்களையும் இன படுகொலை செய்து விட்டார்கள் . அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் இலங்கை அரசின் மீதான போர் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வந்த தீர்மானத்தை இலங்கையில் நடைபெறுவது உள் நாட்டு பிரச்சனை என்று சொல்லி தோற்கடித்துமாயிற்று .
இப்போது சிங்கள நாடு எந்த நாடும் கேள்வி கேட்க முடியாது என்று திமிரோடு இருக்கிறது . சொந்த மக்கள் என்று சொல்லி அந்த மக்களையே கொலை செய்து அதற்காக விழா எடுக்கும் ஒரே நாடு உலகத்திலே சிறிலங்காவாக தான் இருக்க முடியும் . இப்படி மக்களை கொலை செய்ததற்காக விழா எடுக்கிறது என்றால் அந்த மக்கள் எப்படி அந்த நாட்டின் குடிமகன்களாக இருக்க முடியும் . வரலாற்றில் ஒரு அரசன் இன்னொரு நாட்டில் படையெடுத்து சென்று அந்த மக்களை சிறை பிடிப்பது போல் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இரும்பு வேலிகளின் உள்ளே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் .
உலகத்தில் எந்த நாடுமே இந்த மனித அவலத்தை பற்றி உண்மையாக பேசவில்லை . விடுதலை புலிகள் அழிந்த பின்னர் மக்களுக்கு தீர்வை முன் வைப்போம் என்று சொன்ன இந்திய அரசையும் கேவல படுத்தி விட்டது சிங்களம் . இந்திய வெளியுறவு துறை மந்திரியை யார் உனக்கு இங்கே என்ன வேலை என்று கேட்குமளவிற்கு இருக்கிறது . ராஜிவ் காந்தி அவர்களால் கொண்டுவரப்பட்ட 13 வது சட்ட திருத்தமே மக்கள் உரிமையை முழுமையாக பெற்று தராததாலும் , அந்த சட்ட திருத்தத்தையே சிங்களம் நடைமுறை படுத்த தவறியதாலுமே அன்று விடுதலை புலிகளுக்கும் இந்திய ராணுவதிற்குமிடையில் போர் வெடித்தது .
இன்று சிங்களம் அந்த சிறிய உரிமைகளை கூட தமிழர்களுக்கு கொடுக்க தயாரில்லை . இந்தியாவை சிங்களம் எச்சரித்தாயிற்று . இலங்கை தலைமை நீதிபதியும் 13 வது சட்ட திருத்தத்தை முழுமையாக அமுல் படுத்த முடியாது என்று சொல்லுகிறார் . யார் தான் அப்படிஎன்றல் தமிழர்களின் உரிமையை பெற்று தருவார்கள் . இந்தியா இனி என்ன செய்ய போகிறது .
Monday
உலகத்திலே கேவலமான இனமா தமிழினம் ?
எழுதியது
Suresh Kumar
Labels:
இந்தியா,
இலங்கை,
இனபடுகொலை,
உலக நாடுகள்,
தமிழ் ஈழம்
எழுதிய நேரம்
Monday, June 01, 2009
இப்போது நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை பார்க்கும் போது தமிழன் உலகத்திலே கேவலமானவனா என நினைக்க தோன்றுகிறது . கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி என்ற பெருமைக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் என்று நாம் படிக்கும் பாடங்களின் மூலமாகவும் .பெரியோர்களின் மூலமாகவும் நமது பெருமைகளை சொல்லியே நாம் வளர்ந்தோம் .
மிக பெரிய வரலாற்று சிறப்பு மிக்க ஒரு இனம் என்று சொல்லியே வளர்ந்த நாம் நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருப்பவைகளை பார்க்கும் போது வரலாறு தவறாகஎழுதப்பட்டதா ? என சிந்திக்க தூண்டுகிறது . வீரத்தில் தமிழன் கலாச்சாரத்தில் தமிழன் கண்டுபிடிப்புகளில் தமிழன் இப்படி அதில் தமிழன் இதில் தமிழன் என்று சொல்லி நமக்கு நாமே பெருமையடித்து நிகழ் காலத்தை தவறவிட்டோம் . நிகழ் காலத்தில் தமிழன் என்று சொன்னாலே கேட்க யாருமற்று காணப்படுகிறது . ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து ஸ்ரீலங்கா விடுபட்ட நாளிலிருந்து ஈழ தமிழர்கள் சிங்கள ஆதிக்கத்தின் கீழ் கொடுமைபடுத்த பட்டனர்.
இருபது ஆண்டு காலம் சாத்வீக வழியில் சுதந்திரம் பெற்றுவிடலாம் என போராடிய மக்கள் மீது சிங்கள ஆதிக்கம் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது .இளைஞர்கள் கொல்லப்பட்டனர் பெண்கள் ராணுவத்தால் கற்பழிக்கப்பட்டனர் .ஒவ்வெரு நாளும் ஒவ்வெரு நொடியும் ஆதிக்க வர்க்கத்தினால் படும் தொல்லைகளுக்கு எதிராக தமிழ் இளைஞர்கள் துப்பாக்கி தூக்கினர் . ராணுவ அடக்கு முறையைக்கு எதிராக ஆயுத போராட்டங்களை துவக்கினர் . ராணுவ அடக்குமுறைக்கு எதிராக உருவான அமைப்பு தான் பிரபாகரன் தலைமையிலான தமிழ் ஈழ விடுதலை புலிகள் .
எத்தனை குழுக்கள் தோன்றினாலும் தான் கொண்ட லட்சியத்திலும் சமரசம் செய்யாமல் இருந்ததால் மக்கள் ஆதரவு பெற்று ஈழ தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் ஆனார்கள் விடுதலை புலிகள் . சிங்கள அரசிற்கு எதிராக மக்களும் விடுதலை புலிகள் பின்னால் அணி திரன்டதின் விளைவாக தமிழ் ஈழ நில பரப்பில் 85 சதவீத நில பரப்புகள் விடுதலை புலிகள் கட்டுப்பாட்டில் வந்தது . அங்கு வாழும் மக்களுக்கு நல்ல ஒரு நிர்வாகத்தை கொடுத்தனர் விடுதலை புலிகள் .
இலங்கை தீவு என்பது ஒரு நாடு அல்ல இரண்டு நாடுகள் ஓன்று தமிழ் ஈழம் மற்றொன்று சிங்களம் ஆனால் சிங்கள தேசமோ தமிழர்களை சிங்களத்துடன் வைத்து கொண்டு கொத்தடிமை வாழ்க்கையை நடத்த நினைத்து தான் தமிழர் பூமி மீது ஆக்கிரமிப்பு போரை தொடுத்தது . அமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற மோசமான முன்னுதாரணம் மூலம் போரை நிகழ்த்தியது . ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் குடியிருப்புகள் மீது முப்படைகளாலும் தாக்குதலை தொடுத்தனர் .
முதலில் மக்களின் சாவு எண்ணிக்கை தினம் நூறாக இருந்தது . பின்னர் படிப்படியாக ஆயிரத்தை தொட்டது . உலக நாடுகளின் கண்கள் குருடாகி போயின . காதுகள் செவிடாகி போயின . தமிழன் தினம் தினம் இறந்து கொண்டேயிருந்தான் . பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் போர் தொடுத்த போது கண்டித்த உலக நாடுகள் தமிழர்கள் சாகும் போது கண்டிக்க மறந்து விட்டனர் . அதன் உச்ச கட்டமாக முல்லிவைக்கால் பகுதியில் 25000 பேரை ஒரே நாளில் ரசாயன் ஆயுதம் மூலமாகவும் கனரக ஆயுதம் மூலமாகவும் கொன்றொழித்தது சிங்கள இனவெறி அரசு .
நிகழ் காலத்தில் எந்த ஒரு இனமும் இப்படி ஒட்டு மொத்தமாக கொல்லப்படவில்லை . சாட்சியே இல்லாமல் மக்கள் கொல்லப்பட்டதை விசாரிக்க வேண்டும் என மக்கள் இறந்த பின்னர் மேற்குலக நாடுகள் வந்தன ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானத்தை முன்மொழிந்த போது மனிதாபிமானமற்ற என் நாடு ( இந்தியா ) உட்பட பல நாடுகள் அந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது . இதன் மூலம் இனி உள் நாட்டில் எந்த இனத்தையும் பெரும்பான்மை மக்களால் உருவாக்கப்பட்ட அரசு கொலை செய்தாலும் இனி எந்த நாடுகளும் கேட்க முடியாதாம் .
முதலில் மக்களின் சாவு எண்ணிக்கை தினம் நூறாக இருந்தது . பின்னர் படிப்படியாக ஆயிரத்தை தொட்டது . உலக நாடுகளின் கண்கள் குருடாகி போயின . காதுகள் செவிடாகி போயின . தமிழன் தினம் தினம் இறந்து கொண்டேயிருந்தான் . பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் போர் தொடுத்த போது கண்டித்த உலக நாடுகள் தமிழர்கள் சாகும் போது கண்டிக்க மறந்து விட்டனர் . அதன் உச்ச கட்டமாக முல்லிவைக்கால் பகுதியில் 25000 பேரை ஒரே நாளில் ரசாயன் ஆயுதம் மூலமாகவும் கனரக ஆயுதம் மூலமாகவும் கொன்றொழித்தது சிங்கள இனவெறி அரசு .
நிகழ் காலத்தில் எந்த ஒரு இனமும் இப்படி ஒட்டு மொத்தமாக கொல்லப்படவில்லை . சாட்சியே இல்லாமல் மக்கள் கொல்லப்பட்டதை விசாரிக்க வேண்டும் என மக்கள் இறந்த பின்னர் மேற்குலக நாடுகள் வந்தன ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானத்தை முன்மொழிந்த போது மனிதாபிமானமற்ற என் நாடு ( இந்தியா ) உட்பட பல நாடுகள் அந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது . இதன் மூலம் இனி உள் நாட்டில் எந்த இனத்தையும் பெரும்பான்மை மக்களால் உருவாக்கப்பட்ட அரசு கொலை செய்தாலும் இனி எந்த நாடுகளும் கேட்க முடியாதாம் .
ஒரு சீக்கிய மத குருவுக்காக பற்றி எரியும் பஞ்சாப் 30,000 தமிழர்களுக்காக ...........?தமிழா
எழுதியது
Suresh Kumar
Labels:
இந்தியா,
இலங்கை,
இனபடுகொலை,
தமிழ் ஈழம்,
பஞ்சாப் கலவரம்
எழுதிய நேரம்
Monday, May 25, 2009
ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் இரு சீக்கிய குழுவினருக்கிடையில் நடைபெற்ற மோதலில் ஒரு சீக்கிய மத குரு கொல்லப்பட்டார் . இதையடுத்து இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் கலவரம் மூண்டது பஞ்சாப் மாநிலமே பற்றி எரிகிறது .
எட்டி கால் வைக்கும் தூரத்தில் மேற்பட்ட தமிழர்கள் ஈவு இரக்கமின்றி ரசாயன ஆயுதங்களினாலும் கனரக ஆயுதங்களினாலும் கொள்ள பட்ட பொது அதை நியாயபடுத்திய பல துரோகிகள் உண்டு . பதவிக்காக இளைஞர்கள் மத்தியில் எழுந்த போராட்டங்களை மழுங்கடித்த அரசியல் சுயநல வாதிகளும் அடக்குமுறையை ஏவிய துரோக கூட்டங்களுக்கு மத்தியில் தமிழினத்தை மிக சுலபமாக கொலை செய்தான் சிங்கள அரக்கன் . தமிழன் உணர்வற்று போனான் .
இன்று உலக தமிழர்களுக்காக தன வாழ்நாளை அர்பணித்து தமிழர்களின் தலைவராக இருந்த தேசிய தலைவரை கொலை செய்து விட்டோம் ( தேசிய தலைவர் உயிரோடிருக்கிறார் என தமிழுணர்வாளர்களால் உறுதி படுத்த பட்டுள்ளது ) சிங்கள வெறியர்கள் சொல்லுகிறார்கள் அப்போது தமிழினம் வேடிக்கை பார்க்கிறது .
சீக்கியர்களின் இன இனர்வுகளுக்கு முன்னால் தலை வணங்குகிறேன் .
சிங்களத்தின் கொடுர தாக்குதல்கள் கொத்து கொத்தாக மடியும் தமிழ் உறவுகள்
எழுதியது
Suresh Kumar
Labels:
இந்தியா,
இலங்கை,
இனபடுகொலை,
தமிழகம்,
தமிழ் ஈழம்
எழுதிய நேரம்
Monday, May 11, 2009
நேற்று இரவு முதல் சிங்கள ராணுவம் கொடுர தாக்குதல்களை நடத்தி வருகிறது . சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு நாட்களில் 4000-த்தை தாண்டி இருக்கிறது .
ஏற்கனவே இருந்த பாதுகாப்பு வளைய பகுதியை சுருக்கி கொண்ட ராணுவம் தற்போது இப்போது அறிவித்துள்ள பாதுகாப்பு பகுதிகளில் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி தமிழர்களை கொன்று குவித்து வருகிறது . இன்னும் இரண்டு நாட்களில் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிற நிலையில் . தேர்தலுக்கு முன்னர் ஒட்டு மொத்தமாக தமிழர்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது .
உலகம் முழுவதும் தமிழர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன . உடனடியாக போர் நிறுத்தம் ஏற்படவில்லையெனில் ஒன்றரை லட்சம் மக்களின் நிலை என்னவாகும் ? தாய் தமிழகத்து உறவுகள் நாம் என்ன செய்ய போகிறோம் .
ஏற்கனவே இருந்த பாதுகாப்பு வளைய பகுதியை சுருக்கி கொண்ட ராணுவம் தற்போது இப்போது அறிவித்துள்ள பாதுகாப்பு பகுதிகளில் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி தமிழர்களை கொன்று குவித்து வருகிறது . இன்னும் இரண்டு நாட்களில் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிற நிலையில் . தேர்தலுக்கு முன்னர் ஒட்டு மொத்தமாக தமிழர்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது .
உலகம் முழுவதும் தமிழர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன . உடனடியாக போர் நிறுத்தம் ஏற்படவில்லையெனில் ஒன்றரை லட்சம் மக்களின் நிலை என்னவாகும் ? தாய் தமிழகத்து உறவுகள் நாம் என்ன செய்ய போகிறோம் .
Friday
ஈழ அவலத்தை கண்முன் நிறுத்தி கண்களை கலங்க வைத்த நடன காட்சி
எழுதியது
Suresh Kumar
Labels:
இந்தியா,
இலங்கை,
இனபடுகொலை,
தமிழ் ஈழம்,
வீடியோ
எழுதிய நேரம்
Friday, May 08, 2009
ஈழத்தில் நடைபெறும் இனபடுகொலையை விஜய் டிவியின் பிரபு தேவா நடன காட்சியில் கண்கள் கலங்கும் வகையில் வெளிகாட்டிருக்கிறார் பிரேம் .
Read More
Wednesday
காங்கிரஸின் தோல்வி முடிவு தெரிந்து விட்டது கலக்கத்தில் சோனியா
எழுதியது
Suresh Kumar
Labels:
இந்தியா,
காங்கிரஸ்,
திமுக கூட்டணி,
தேர்தல்2009
எழுதிய நேரம்
Wednesday, May 06, 2009
15-வது மக்களவைக்கு முதல் மூன்று கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் நாளை நான்காவது கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது . கடைசியாக மே 13- ம் தேதி ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெறவிருக்கிறது .
இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு அவர்கள் நினைத்த வெற்றி கிடைக்காது என ஏஜன்சி செய்திகள் சோனியாவிடம் தெரிவித்ததையடுத்து சோனியா கலக்கத்தில் இருப்பதாக தெரிகிறது . சோனியா மட்டுமல்லாது காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களும் கலக்கத்தில் உள்ளனர் . அந்த நிலையில் தான் ராகுல் காந்தி போகிற இடமெல்லாம் ஆள் பிடிக்கும் வேலையில் இறங்கியுள்ளார் .
நான்காம் கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும் மாநில கட்சிகளே அதிக தொகுதிகளை கைப்பற்றும் என தெரிகிறது . தமிழக தேர்தல் நிலவரத்தை ஆராய்ந்த சோனியா ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்ட காரணாத்தால் தான் திடீரென பிரச்சார கூட்டத்தையே ரத்து செய்தார் . தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள் .
கடந்த முறை பாரதிய ஜனதா கட்சி இந்தியா ஒளிர்கிறது என பிராச்சாரத்தை முடுக்கி விட்டும் பயனற்று போனதை போல் காங்கிரஸ் கட்சியின் பிரசாரமும் பயனற்று போய் மக்கள் பிரச்சனைகளே முன்னிலை பெற்று நிற்கிறது . சி பி ஐ சுதந்திரமாக செயல் படும் அமைப்பு அந்த அமைப்பையே காங்கிரஸ் கட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அதை ஒரு அரசியல் சார்ந்த அமைப்பாக மாற்றியது , விலைவாசி உயர்வுகள் , சுதந்திரமாக செயல் படும் பிரதமர் இல்லாதது , தமிழின படுகொலையை நடத்தும் இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுப்பது . போன்ற பல செயல்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே அமைந்து விட்டது .
காங்கிரஸ் கட்சி இந்த முறை கடந்த முறை பெற்ற 145 தொகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கு தேறுவது கூட கடினம் என தெரிகிறது . கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் முக்கியமான பகுதி . கடந்த முறை நாற்பது தொகுதிகளையும் காங்கிரஸ் கூட்டணி பெற்றது ஆனால் இந்த முறை ஒரு தொகுதி கூட தேறுவது கடினம் என தெரிகிறது . ஈழ தமிழர் எழுச்சி என்றுமில்லாதவாறு இந்த தேர்தலில் எழும்பியிருக்கிறது . காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக்கு எதிராக மக்கள் வாக்களிக்க தயாராகி விட்டனர் .
மொத்தத்தில் தென் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அடி மாநில காட்சிகளால். அதே போல் வடமாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் பல தொகுதிகளை இந்த முறை பாரதிய ஜனதா மற்றும் மூன்றாவது அணிகள் கைப்பற்றும் என தெரிகிறது . ஆட்சி மாற்றத்தின் அறிகுறிகள் தென்பட்டு விட்டது . அப்படியென்றால் சோனியாவின் இத்தாலி காங்கிரஸ் தோற்க போவது உறுதி படுத்தப்பட்டுள்ளது அது தானே சொல்றீங்க .இதில நம்ம திருமா கூட மாட்டிகிட்டாரே .........................!
இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு அவர்கள் நினைத்த வெற்றி கிடைக்காது என ஏஜன்சி செய்திகள் சோனியாவிடம் தெரிவித்ததையடுத்து சோனியா கலக்கத்தில் இருப்பதாக தெரிகிறது . சோனியா மட்டுமல்லாது காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களும் கலக்கத்தில் உள்ளனர் . அந்த நிலையில் தான் ராகுல் காந்தி போகிற இடமெல்லாம் ஆள் பிடிக்கும் வேலையில் இறங்கியுள்ளார் .
நான்காம் கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும் மாநில கட்சிகளே அதிக தொகுதிகளை கைப்பற்றும் என தெரிகிறது . தமிழக தேர்தல் நிலவரத்தை ஆராய்ந்த சோனியா ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்ட காரணாத்தால் தான் திடீரென பிரச்சார கூட்டத்தையே ரத்து செய்தார் . தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள் .
கடந்த முறை பாரதிய ஜனதா கட்சி இந்தியா ஒளிர்கிறது என பிராச்சாரத்தை முடுக்கி விட்டும் பயனற்று போனதை போல் காங்கிரஸ் கட்சியின் பிரசாரமும் பயனற்று போய் மக்கள் பிரச்சனைகளே முன்னிலை பெற்று நிற்கிறது . சி பி ஐ சுதந்திரமாக செயல் படும் அமைப்பு அந்த அமைப்பையே காங்கிரஸ் கட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அதை ஒரு அரசியல் சார்ந்த அமைப்பாக மாற்றியது , விலைவாசி உயர்வுகள் , சுதந்திரமாக செயல் படும் பிரதமர் இல்லாதது , தமிழின படுகொலையை நடத்தும் இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுப்பது . போன்ற பல செயல்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே அமைந்து விட்டது .
காங்கிரஸ் கட்சி இந்த முறை கடந்த முறை பெற்ற 145 தொகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கு தேறுவது கூட கடினம் என தெரிகிறது . கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் முக்கியமான பகுதி . கடந்த முறை நாற்பது தொகுதிகளையும் காங்கிரஸ் கூட்டணி பெற்றது ஆனால் இந்த முறை ஒரு தொகுதி கூட தேறுவது கடினம் என தெரிகிறது . ஈழ தமிழர் எழுச்சி என்றுமில்லாதவாறு இந்த தேர்தலில் எழும்பியிருக்கிறது . காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக்கு எதிராக மக்கள் வாக்களிக்க தயாராகி விட்டனர் .
மொத்தத்தில் தென் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அடி மாநில காட்சிகளால். அதே போல் வடமாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் பல தொகுதிகளை இந்த முறை பாரதிய ஜனதா மற்றும் மூன்றாவது அணிகள் கைப்பற்றும் என தெரிகிறது . ஆட்சி மாற்றத்தின் அறிகுறிகள் தென்பட்டு விட்டது . அப்படியென்றால் சோனியாவின் இத்தாலி காங்கிரஸ் தோற்க போவது உறுதி படுத்தப்பட்டுள்ளது அது தானே சொல்றீங்க .இதில நம்ம திருமா கூட மாட்டிகிட்டாரே .........................!
Saturday
தமிழன் இளிச்சவாயன் என்பதால் தானே தமிழனை கொல்ல தமிழகம் வழியாக ஆயுதம் கொண்டு செல்கிறான் .
எழுதியது
Suresh Kumar
Labels:
இந்தியா,
இலங்கை,
இனபடுகொலை,
காங்கிரஸ்,
தமிழகம்,
தமிழ் ஈழம்
எழுதிய நேரம்
Saturday, May 02, 2009
ஈழத்தமிழினத்தினை கொன்று குவிக்கும் சிறிலங்கா அரசுக்கு 80 சரக்குந்துகளில் போர் தளவாடங்களை இந்திய அரசு இன்று அனுப்புகிறது. அதில் 5 லாரிகளை கோவையில் அடித்து எரித்துள்ளனர். பலர் கைது. ஈழத்தில் தமிழர்கள் மீதான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர் அரசானது தமிழகம் சேலம் , கோயம்பத்தூர் வழியாக போர் தளவாடங்களை 80 லாரிகளில் அனுப்புகிறது. சேலம் வழியாக செல்லும் பொழுது இதை கேள்விப்பட்ட தமிழுணர்வாளர்கள் அவ்வண்டிகளை தடுக்கும் முயற்சிகளில் இறங்கினர்.
தற்பொழுது கோயம்பத்தூரில் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் அப்போர் தளவாடங்களை கொழும்புக்கு செல்லவிடாமல் தடுக்க கோவை L&T சாலையில் திரளான தமிழுணர்வாளர்கள் குழுமினர்.
அப்பொழுது அவ்வழியில் வந்த 5 லாரிகளை தடுத்து நிறுத்தி உள்ளே இருந்த ராக்கெட் லாஞ்சர் முதலான பல பொருட்களை சாலையில் போட்டு உடைத்து எரித்தனர். லாரி டயர்களின் காற்றினை திறந்துவிட்டு லாரிகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.
அப்பொழுது அங்கிருந்த தனியார் தொலைக்காட்சி நிருபர்களை இராணுவ வீரர்கள் அடித்து காயப்படுத்தியுள்ளனர்.அவர்கள் கோவை அரசு மருத்துவமன்னையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் இருந்த பொதுமக்களையும் அடித்து விரட்டியுள்ளனர்.
பெரியார் திக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், பெரம்பூர் இலட்சுமணன் மற்றும் பெரியார் திராவிடர் கழக தொண்டர்கள் , மதிமுக வினர் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தற்பொழுது கோயம்பத்தூரில் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் அப்போர் தளவாடங்களை கொழும்புக்கு செல்லவிடாமல் தடுக்க கோவை L&T சாலையில் திரளான தமிழுணர்வாளர்கள் குழுமினர்.
அப்பொழுது அவ்வழியில் வந்த 5 லாரிகளை தடுத்து நிறுத்தி உள்ளே இருந்த ராக்கெட் லாஞ்சர் முதலான பல பொருட்களை சாலையில் போட்டு உடைத்து எரித்தனர். லாரி டயர்களின் காற்றினை திறந்துவிட்டு லாரிகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.
அப்பொழுது அங்கிருந்த தனியார் தொலைக்காட்சி நிருபர்களை இராணுவ வீரர்கள் அடித்து காயப்படுத்தியுள்ளனர்.அவர்கள் கோவை அரசு மருத்துவமன்னையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் இருந்த பொதுமக்களையும் அடித்து விரட்டியுள்ளனர்.
பெரியார் திக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், பெரம்பூர் இலட்சுமணன் மற்றும் பெரியார் திராவிடர் கழக தொண்டர்கள் , மதிமுக வினர் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தமிழன் நாதியற்றவன் இளிச்சவாயன் என நினைத்து தானே மீண்டும் மீண்டும் இலங்கைக்கு ஆயுதம் கொடுக்கிறது .
Monday
தமிழினத்தை ஒட்டு மொத்தமாக முட்டாளாக்கிய கருணாநிதி
எழுதியது
Suresh Kumar
Labels:
அவமானம்,
இந்தியா,
இலங்கை,
கலைஞர்,
காமெடி,
தமிழ் ஈழம்,
தேர்தல்2009
எழுதிய நேரம்
Monday, April 27, 2009
இன்று காலையில் இணைய தளம் பார்ப்பவராயினும் சரி தொலை காட்சி பார்பவர்களாய் இருந்தாலும் சரி அனைவரும் காலையில் மிக பெரிய அதிச்சியடைந்தார்கள் . இன்று கருணாநிதியின் நாடகமே முதன்மை செய்தியாய் இருந்தது .
சன் டிவி , கலைஞர் டிவிகள் தினமும் ஒழிபரப்பும் தொடர்களை ஒழிபரப்பாமல் கலைஞரின் நாடகத்தை ஒழிபரப்பியது . காலையில் சாகும் வரை உண்ணாவிரதத்தை துவங்கினர் கருணாநிதி . இதில் உச்சகட்ட காமெடி என்னவென்றால் சேலத்தில் தங்கபாலு உண்ணாவிரதம் இருந்தது தான் . தமிழகம் முழுவதும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன . அங்கங்கே தொடர் போராட்டங்கள் நடத்தினர் உடன் பிறப்புகள் . யாரை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள் என்பது யாருக்குமே தெரியாது .
சுமார் நான்கு மணி நேரம் கடந்த பின்னர் இலங்கை போர் நிறுத்தம் அறிவித்தது எனவே நான் என்னுடைய உண்ணாவிரதத்தை முடித்து கொள்கிறேன் என அறிவித்து தன்னுடைய உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் கருணாநிதி . சரி போர் நிறுத்தம் வந்ததா என ஸ்ரீலங்கா செய்திகளை பார்த்தல் எங்கேயும் வரவில்லை . அதற்குள்ளாக கலைஞர் வாழ்க ! போர் நிறுத்தம் ஏற்படுத்திவிட்டார் என பதிவுலக நண்பர்களும் பதிவுகளை போட்டனர் . நானும் முதலில் ஏமாந்து விட்டது என்னவோ உண்மை தான் .
பின்னர் தான் ஸ்ரீலங்கா ராணுவம் அறிவித்தது கனரக ஆயுதங்களை நாங்கள் பயன் படுத்த மாட்டோம் என . சரியாக கருணாநிதி உண்ணாவிரதத்தை முடித்து கொண்ட நேரத்தில் மக்கள் மீது ராணுவம் விமான தாக்குதலை நடத்தியது . போர் நிறுத்தமும் வரவில்லை கனரக ஆயுதம் பயன் படுத்துவதும் நிறுத்தவில்லை .
மொத்தத்தில் கருணாநிதியின் நாடகத்தால் பாதிக்கப்படுவது தமிழ் மக்களே . தமிழினத்தை அதிகமாக சொந்தம் கொண்டாடிய காருனாநிதி இப்போது இவ்வளவு கேவலமாக தமிழினத்தின் இன அழிப்பிற்கு காரணமாகிவிட்டார் . மக்கள் விழிப்புடன் இருந்து இந்த துரோகிகளுக்கு தாக்க பாடம் புகட்டுவோம் .
சன் டிவி , கலைஞர் டிவிகள் தினமும் ஒழிபரப்பும் தொடர்களை ஒழிபரப்பாமல் கலைஞரின் நாடகத்தை ஒழிபரப்பியது . காலையில் சாகும் வரை உண்ணாவிரதத்தை துவங்கினர் கருணாநிதி . இதில் உச்சகட்ட காமெடி என்னவென்றால் சேலத்தில் தங்கபாலு உண்ணாவிரதம் இருந்தது தான் . தமிழகம் முழுவதும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன . அங்கங்கே தொடர் போராட்டங்கள் நடத்தினர் உடன் பிறப்புகள் . யாரை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள் என்பது யாருக்குமே தெரியாது .
சுமார் நான்கு மணி நேரம் கடந்த பின்னர் இலங்கை போர் நிறுத்தம் அறிவித்தது எனவே நான் என்னுடைய உண்ணாவிரதத்தை முடித்து கொள்கிறேன் என அறிவித்து தன்னுடைய உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் கருணாநிதி . சரி போர் நிறுத்தம் வந்ததா என ஸ்ரீலங்கா செய்திகளை பார்த்தல் எங்கேயும் வரவில்லை . அதற்குள்ளாக கலைஞர் வாழ்க ! போர் நிறுத்தம் ஏற்படுத்திவிட்டார் என பதிவுலக நண்பர்களும் பதிவுகளை போட்டனர் . நானும் முதலில் ஏமாந்து விட்டது என்னவோ உண்மை தான் .
பின்னர் தான் ஸ்ரீலங்கா ராணுவம் அறிவித்தது கனரக ஆயுதங்களை நாங்கள் பயன் படுத்த மாட்டோம் என . சரியாக கருணாநிதி உண்ணாவிரதத்தை முடித்து கொண்ட நேரத்தில் மக்கள் மீது ராணுவம் விமான தாக்குதலை நடத்தியது . போர் நிறுத்தமும் வரவில்லை கனரக ஆயுதம் பயன் படுத்துவதும் நிறுத்தவில்லை .
- மக்களை முட்டாள் ஆக்கி கருணாநிதியும் சோனியாவும் ராஜ பக்ஷேவுடன் கூட்டு சேர்ந்து மிக பெரிய தாக்குதலை நடத்தி முடிக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது . இந்திய மீடியாக்களின் நடிகர் கருணாநதியின் காமெடியை போட்டு . தமிழ் ஈழத்திலே மிக பெரிய தாக்குதலை சோனியாவும் கருணாநிதியும் திட்டமிட்டு நடத்திய நாடகம் என்றே நினைக்க தோன்றுகிறது .
- உலக நாடுகள் அனைத்தும் இலங்கை அரசின் இனஅழிப்பை கண்டித்திருக்கும் வேளையில் உலக நாடுகளின் கவனத்தை திசை திருப்பவும் இந்த நாடகம் நடைபெற்றிருக்கலாம் என கருத படுகிறது .
- நேற்று தமிழ் ஈழத்திற்கு ஆதரவளிப்பேன் என ஜெயலலிதா சொன்னதையடுத்து கருணாநிதி இந்த நாடகத்தை நடத்தியிருக்கலாம் .
மொத்தத்தில் கருணாநிதியின் நாடகத்தால் பாதிக்கப்படுவது தமிழ் மக்களே . தமிழினத்தை அதிகமாக சொந்தம் கொண்டாடிய காருனாநிதி இப்போது இவ்வளவு கேவலமாக தமிழினத்தின் இன அழிப்பிற்கு காரணமாகிவிட்டார் . மக்கள் விழிப்புடன் இருந்து இந்த துரோகிகளுக்கு தாக்க பாடம் புகட்டுவோம் .
சோனியா காந்தியை கண்டித்து தங்கபாலு உன்ன்னாவிரதம்
எழுதியது
Suresh Kumar
Labels:
இந்தியா,
இலங்கை,
கலைஞர்,
கற்பனை,
தமிழகம்,
திமுக கூட்டணி,
தேர்தல்2009
எழுதிய நேரம்
Monday, April 27, 2009
இலங்கையில் போர் நிறுத்தம் வலியுறுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி சாகும் வரை உண்ணாவிரதம் துவங்கியிருக்கிறார் . இது வரை காலமும் விடுதலை புலிகளை எதிர்த்து வந்த ஜெயலலிதா வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் ஜி இலங்கைக்கு சென்று அங்கு நடைபெறுகின்ற மனித அவலங்களை சொன்ன பின்னர் தமிழ் ஈழம் ஓன்று தான் தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியும் என சொல்லி நானே போராடி பெற்று தருவேன் என நேற்று அறிவித்தார் .
இதையடுத்து திமுக ஆதரவிலான மத்திய அரசு தான் இலங்கையில் போரை நடத்தி வருகிறது என தமிழ் இன ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர் . எப்போது தமிழகத்தில் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக எழுச்சி ஏற்படும் போதெல்லாம் அதை தேசிய பாதுகாப்பு சட்டம் , கைது , நாடகம் போன்றவற்றால் தடுத்து வந்தார் கருணாநிதி . இந்த நிலையில் தேர்தல் நெருங்கும் வேளையில் திமுக காங்கிரஸ் காட்சிகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட தயாராகிவிட்டனர் .
இந்த வேளையில் திடீரென கருணாநிதி காலவரையற்ற உண்ணாவிரதத்தை மத்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாவை எதிர்த்தும் போர் நிறுத்தம் வலியுறுத்தியும் துவங்கி விட்டார் . இதையடுத்து தமிழகம் முழுவது உடன்பிறப்புகள் பஸ் மறியல் செய்து வருகின்றனர் . தமிழ்நாட்டில் போக்குவரத்து ஸ்தம்பித்தது .
திடீரென காங்கிரஸ் மாநில தலைவர் தங்கபாலு சோனியாவை எதிர்த்து சேலத்தில் உண்ணாவிரதம் இருக்கிறார் . தமிழகம் முழுவதும் சோனியாவுக்கு எதிராகவும் தமிழ் ஈழத்திற்கு ஆதரவான ஒரு நிலைப்பாடு தமிழக காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது .
Subscribe to:
Posts (Atom)












