Tuesday

உலக தமிழ் மாநாடு ஒத்தி வைப்பு ? காரணம்

ஒரு காலத்தில் உலக தமிழ் மாநாடு என்றால் எலோருக்கும் மிகவும் மகிழ்ச்சியான செய்தி . ஆனால் இந்த காலகட்டத்தில் கருணாநிதியால் உலக தமிழ் மாநாடு என அறிவிக்க பட்டதுமே ஆதரவை விட எதிர்ப்பே மேலோங்கி நின்னது . உலக தமிழர்கள் இந்த மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று கூட அறை கூவல் விட பட்டது . ஏன் இப்படி எந்த நேரமும் இல்லாத எதிர்ப்பு இப்போது ஏன் வந்தது ?

கடந்த ஆண்டு முதல் தீவிரமாக சிங்கள இனவெறி அரசு தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு போரை நடத்தி வந்தது . இதை எதிர்த்து உலகம் முழுவதும் தமிழர்கள் போராடியும் உலக நாடுகளை வலியுறுத்தியும் வந்தனர் . தமிழக தமிழர்களும் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக போராட துவங்கினர் . ஆனால் தமிழை கொண்டு பிழைத்த கருணாநிதி தமிழகத்தில் ஈழ தமிழர்களுக்கு எதிராக செயல் பட்டு அவர்களுக்கு ஆதரவான எழுச்சியை அடக்கினார் . மேலும் மத்திய தமிழர் விரோத காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து தமிழர்களுக்கு எதிராக செயல் பட்டு தமிழர் வரலாற்றில் துரோகியானார் கருணாநிதி .

மீண்டும் தமிழர்களை ஏமாற்ற ஒரு தலை பட்சமாக உலக தமிழ் மாநாட்டை அறிவித்தார் உலக தமிழ் ஆராய்ச்சி கழகத்தின் அனுமதி பெறாமலே . மேலும் மூன்று லட்சம் மக்கள் இப்போதும் சிங்கள இனவெறி அரசின் முள் கம்பிகளுக்கு உள்ளே அடைக்க பட்டுள்ளனர் . அவர்களை விடுவிக்க எந்த முயற்சியும் எடுக்காமல் அவசர அவசரமாக மாநாட்டை அறிவித்த கருணாநிதி இப்போது ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளார் .

ஏற்கனவே உலக தமிழ் ஆராய்ச்சி கழகத்தின் அனுமதி பெறாமல் அறிவிக்க பட்டது என்பது குறிப்பிட தக்கது . இன்னும் உலக தமிழ் ஆராய்ச்சி பெற முடியாத காரணத்தால் தான் ஒத்தி வைத்திருப்பதாக தெரிகிறது . சமூகத்தில் நடைபெறும் பிரச்சனைகளையும் திசை திருப்ப கருணாநிதி கையாளும் கலைகளில் இந்த உலக தமிழ் மாநாடும் ஓன்று தான் .

தமிழர்கள் வாழ்வு சிறந்தால் தமிழும் வாழும் என்ற உண்மையை நினைக்காமல் தான் மட்டும் வாழ்தல் தமிழ் வாழும் என்று நினைக்கும் தலைவரை என்ன சொல்ல ? இப்போது தேவை தமிழ் மாநாடு அல்ல தமிழினத்தின் உரிமைகள் அதை பெற்று கொடுக்கும் வழியை ஆராய்தல் .

9 கருத்துக்கள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

:( (:

கலையரசன் said...

கரைக்டா சொன்னீங்க சுரேஷ்!

dilsbro said...

சபாஷ் சரியாக சொன்னீர்கள்!

ISR Selvakumar said...

கருணாநதியின் மேல் உள்ள கடுமையான கோபத்தால் எழுதப்பட்டுள்ள பதிவு.

பித்தன் said...

கரைக்டா சொன்னீங்க சுரேஷ்!

Suresh Kumar said...

நன்றி ஜோதி பாரதி , கலையரசன் , தேவ தாசன் , செல்வா குமார் , பித்தன்

Anonymous said...

கருணாநிதி ஒரு இன துரோகி. அவன் சித்திரவதை பட்டு சகவேன்டிய கிழவன்

Anonymous said...

Karunanidhi is the ONLY Tamil leader and he should live for another 200 years to make the Tamil Nadu Glorious and fabulous - He should also marry few more times - almightyshould give his that power

Anonymous said...

It is not the responsibility of Taminadu Government to end LTTE war. The war was created by the dictator Prabakaran who is inhuman and Selfish
person. All Tamils living in abroad wanted the war to continue so that they can stay in the foreign country and live a comfortable life citing the reason of war. Many Tamils in abroad swindled money from public in the name of war and got rich. So all blame goes to stupid and selfish tamils.

Post a Comment

Send your Status to your Facebook