• பேய், பிசாசு உடம்பினுள்...

    இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....

  • உங்கள் மேல் எதற்கு ...

    தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் ...

  • யூத் புல் விகடனில் ...

    யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் ...

Showing posts with label தூக்கத்தில் பேசுதல். Show all posts
Showing posts with label தூக்கத்தில் பேசுதல். Show all posts

Saturday

தூக்கத்தில் பேசுபவரா நீங்கள் கட்டாயம் படியுங்கள்

வேலை செய்து உடலுக்கும் மனதிற்கும் ஓய்வெடுக்க வேண்டும் என தூங்கினால் தூக்கம் வருகிற நேரம் பார்த்து பக்கத்தில் படுத்திருக்கும் நண்பரின் பேச்சுக்கள் நம்முடைய தூக்கத்தை கெடுத்து விடும் . நாம் தூக்கத்தில் பேசுகிறவராக நம்மால் நம்முடைய நண்பரின் தூக்கம் கேட்டு விடும் .

காலை விடிந்ததும் ஏய் மச்சி நேற்று ராத்த்ரி ராஜாவோட பாட்டு கச்சேரி தாண்டா . அவன் பாட்டு கச்சேரியில என்னோட தூக்கம் போச்சுடா . அப்படியே மற்ற நண்பர்களிடம் சொல்லி கொண்டிருக்கும் போதே நம்மை கிண்டலடிப்பார்கள் . இது பலருடைய வாழ்கையில் நடை பெற்றிருக்கலாம்  .

பொதுவாகவே இப்படி தூக்கத்தில் நாம் பேசுகிறது நம்மை தெரியாமலே நாம் பேசுவதாகும் . இது நம்முடைய  மனது  சம்பந்த பட்டதாகும் . நம்முடைய மனதை பாதித்த விசயங்கள் தூக்கத்தில் நம்மை தாண்டி பேச வேண்டியது வருகிறது . தூக்கத்தில் பேசுகிறவர்களை பார்த்தல் பெரும்பாலானோர் மனதில் ஏற்படும் எண்ணங்களை மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்க வேண்டும் என இருப்பவர்கள் . மற்றொரு பிரிவு சின்ன விசயங்களாக இருந்தாலும் அதன் மீது அதிக கவனம் செலுத்துவது .

நம் மனதை பொறுத்தவரையில் ஒரு நாள் வாழ்கையில் பல நிகழ்வுகள் வந்து செல்லும் . எந்த நிகழ்வுகளையுமே பாதியில் முடிக்க மனம் விரும்பாது . சிலர் தங்களுக்கு ஏற்படும் கவலையாக இருந்தாலும் சரி சந்தோசமாக இருந்தாலும் சரி இவைகளை உடனடியாக வெளிப்படுத்தி விடுவார்கள் . ஆனால் சிலர் சோகமானாலும் துக்கமானாலும் வெளிக்காட்டாமல் மனதிற்குள்ளே இறுக்கி கொள்வார்கள் . இப்படி மனதிற்குள்ளே இறுக்கி கொள்வதால் எல்லாம் ஓன்று சேர்ந்து நமக்கு தெரியாமலே வெளியில் வந்து விடுகிறது . இவ்வாறு நம்மை அறியாமலே நாம் இரவில் பேசுகிறோம் .

மற்றொரு பிரிவினர் சின்ன செயல்களாக இருந்தாலும் அந்த ஒரு செயலையே காலையிலிருந்து மாலை வரை சிந்தித்து கொண்டே இருப்பார்கள் . இப்படி ஒரே செயலை சிந்தித்து கொண்டிருப்பவர்களும் வழக்கம் போல் தூங்கும் போதும் அதை பற்றிய சிந்தனையால் தூக்கத்தில் பேசி விடுகின்றனர் .

எப்படி நாம் தூக்கத்தில் பேசாமல் இருப்பது ? இப்படி பேசுவதால் பொதுவான ஒரு இடத்தில நம்மால் தூங்கவே முடியவில்லை என்ற கவலை உள்ளவர்கள் செய்ய வேண்டியது  எந்த ஒரு செயலிலும் துக்கமானாலும் சந்தோசமானாலும் உடனடியாக வெளிப்படுத்துங்கள் . வெளிப்படுத்தி அப்படியே அதை விட்டு விடுங்கள் மனதிலே போட்டு இறுக்கி கொள்ளாதீர்கள் . ஒரே செயலை எந்த நேரமும் நினைத்து கொண்டே இருக்காதீர்கள் . அழ வேண்டிய இடத்தில அழுங்கள் சிரிக்க வேண்டிய இடத்தில சிரியுங்கள் .  .................................
Read More

Send your Status to your Facebook