இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Showing posts with label மக்கள் நல கூட்டணி. Show all posts
Showing posts with label மக்கள் நல கூட்டணி. Show all posts
Thursday
சூப்பர் ஸ்டார் தேர்தல் அறிக்கை
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
தேர்தல் அறிக்கை,
மக்கள் நல கூட்டணி
எழுதிய நேரம்
Thursday, April 28, 2016
தேர்தல் என்றாலே தேர்தல் அறிக்கை மிக முக்கியம். மக்கள் நல கூட்டு இயக்கம் கூட்டணியாக பரிணமித்த போது குறைந்த பட்ச செயல்திட்டத்தை வெளியிட்டது. அதன்பிறகு இன்று மதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிட பட்டது..
தேர்தல் அறிக்கையில் மிக முக்கிய அம்சமாக மது விலக்கு அமுல்படுத்துவதும். மதுவினால் ஏற்படும் வருவாய் இழப்பை சரி செய்வதற்கான வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது..
ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி வரை இலவச கல்விக்கு உத்தரவாதம் கொடுத்துள்ளதோடு. வீட்டுக்கு ஒருவருக்கு கட்டாய வேலையையும் உறுதி அளித்துள்ளனர்.
மேலும் 5 ஆண்டுகளில் 1 கோடி பேருக்கு வேலை வழங்கப்படும்.
இதுவரை உள்ள கல்வி கடன் அனைத்தையும் அரசே ஏற்கும் என்பது மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
விவசாய கடன்கள் கூட்டுறவு வங்கி மட்டுமல்லாது தேசிய வங்கி கடன்களும் தள்ளுபடி செய்ய படும்.
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு உள்ள கடன்களும் தள்ளுபடி செய்ய படும்..
சேவை பெறும் உரிமை சட்டம் கொண்டு வரப்படும்..
உயர்மட்ட ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்படும்..
அரசு பணிகளை கண்காணிக்க மக்கள் கண்காணிப்பு குழு, மக்கள் தணிக்கை குழு உருவாக்க படும்..
5 வயது உள்ள குழந்தைகளுக்கு தினமும் அரை லிட்டர் பால் இலவசம்..
சுத்திகரிக்கப்பட்ட மினரல் வாட்டர் இலவசமாக வழங்கப்படும்...
பட்டா மாறுதல் முறை எளிதாக்க பட்டு பத்திரம் பதிவு செய்யும் அன்றே கிடைக்க நடவடிக்கை..
தமிழ் மொழி முதல் மொழியாக்க படும்.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்..
மீத்தேன், கெயில் போன்றவை தடை செய்யப்படும்..
இப்படி மக்கள் நல கூட்டணி தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டாராக திகழ்கிறது..
வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை மக்கள் நல கூட்டணி தேர்தல் அறிக்கை
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
தமிழகம்,
மக்கள் நல கூட்டணி
எழுதிய நேரம்
Thursday, April 28, 2016
மக்கள் நல கூட்டணி தேர்தல் அறிக்கை இன்று தாயகத்தில் வெளியிடப்பட்டது. அதில் முக்கிய அம்சங்கள்..
மக்கள் நல👬👬கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு.
👉கூட்டணி ஆட்சி அமைப்போம்
👉 லோக் ஆயுக்தா கொண்டு வரப்படும்
👉சேவை வரி உரிமை சட்டம்
👉 பூரண மது விலக்கு
👉தொடக்க கல்வி முதல் கல்லூரி வரை இலவசக் கல்வி
👉வேளான் உற்பத்தி மூன்று மடங்கு அதிகரிப்பு
👉கல்வி கடன் ரத்து
👉பால் விலை குறைக்கப்படும்
👉 படித்த பெண்களுக்கு வீட்டுக்கொருவருக்கு அரசு வேலை
👉 நெசவாளர் கடன் தள்ளுபடி
👉 மீனவர்கள் பாதுகாப்பு
👉 இலவச மினரல் குடிநீர்
👉 இஸ்லாமிய அப்பாவி கைதிகள் விடுதலை
👉மீனவர்களுக்கு ஓய்ஊதியம்
👉 சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு தடுக்கப்படும்
👉 மத வன்முறைகளை தடுக்க உருதியான நடவடிக்கை
👉கல்வி மற்றும் வேலைவாய்பில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு
👉 தாழ்த்தப்பட்டவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிப்பு
👉 மகளிர் சுய உதவி குழு கடன் ரத்து
👉குடும்பத்தில் ஒரு இளைஞருக்கு அரசு வேலை உறுதி செய்யப்படும்
👉 திருநங்கைகளுக்கு இலவச குடியிருப்பு.
👉அரசு அனைத்து அலுவலங்களிலும் அம்பேத்கர் புகைப்படம் வைக்கப்படும்.
👉 மணல் கொள்ளைகள் தடுக்கப்படும்.
👉கிராமங்களில் விவசாய வேலைகளுக்கும் பயன்படுத்தப்படும்
👉மகாத்மா ஊரக வளர்ச்சி திட்டத்தில் ரூ 250 வழங்கப்படும்.
👉 இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட அனைத்து தமிழர்களும் விடுதலை
👉 வெளிநாட்டு தமிழர் நல அமைச்சகம் தொடங்கப்படும்
👉 மதவெறி சாதிவெறி சக்திகளை எதிர்போம்
👉அனைத்து கனிம வளங்களும் பாதுகாக்கப்படும்
👉 69 % இட ஒதுக்கீடு பாதுகாக்கப்படும்
👉மருத்துவ காப்பீடு இலவச பேருந்து
👉பதிரிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள்.
👉மக்களை தேடி அரசு என்பது உறுதி செய்யப்படும்
👉சட்டமன்ற தொடர் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்
👉 அரசு அலுவலங்களில் அனைத்து சான்றிதழ்களும் லஞ்சம் இல்லாமல் வழங்கப்படும்
👉பொது கண்காணிப்பு குழு
👉 ஊழலை ஒழிக்க முதலைமைச்சர் அலுவலகம் வரை கடுமையான சட்டம்.
👉மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களுக்கு தலித்துகளுக்கான சலுகைகள் வழங்கப்படும். மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை .
Subscribe to:
Posts (Atom)


