Saturday

காவிய கலைஞரும் ஈழ தமிழர்களும்

கலைஞர் கருணாநிதி அவர்கள் தன்னுடைய பேரன் தயாநிதி மாறன் மீண்டும் இணைந்த மகிழ்ச்சியில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக படம் ஒன்றிற்கு வசனம் எழுதி தருவதாக வாக்கு கொடுத்திருப்பாரோ ?

என்னனா தினம் தினம் ஒவ்வெரு வசனமாக பேசியும் எழிதியும் வருகிறார் . ஒருநாள் வில்லன் கேரக்டரில் பேசுகிறார், ஒருநாள் காமெடி கேரக்டரில் பேசுகிறார் , குணசித்திர கேரக்டரில் எல்லாம் பேசுகிறார் . இப்போ ரீசன்டா பொது குழுவில எல்லாம் தீர்மானம் போட்டு ஒத்திகை பார்த்திருக்கிறார் .

நம்ம விசயத்துக்கு வருவோம் முதலில் ஈழ தமிழர்களுக்காக சில கட்சிகள் தான் போராட்டம் நடத்தி வந்தனர். அந்த கட்சிகள் தினம் தினம் சளைக்காமல் ஈழ தமிழர்களுக்காக குரல் கொடுத்தன பின்னர் பொதுவுடமை கட்சியானது ஈழ தமிழர்களுக்காக போராட்டத்தில் இறங்கியது. கலைஞரும் இறங்கினார் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதை விட்டு விட்டு மாங்கொல்லையில் கூட்டம் போட்டு பேசினார் . பின்னர் அனைத்து கட்சி கூட்டம் நடத்தினார் .

யாரும் எதிர்பார்க்காத முடிவாக நாற்பது எம்பிக்களும் ராஜினமா செய்வோம் என தீர்மானம் நிறைவேற்றினார் . (இரண்டு வார காலத்துக்குள் போர் நிறுத்தம் செய்யபடவில்லைஎன்றால் ) உலகமே பாராட்டியது உலக தமிழின தலைவர் என்ற பட்டம் அங்கங்கே பிரசுரிக்க பட்டது . அதில் நேர்மாறாக பயப்படவேண்டிய மத்திய அரசு கலைஞருக்கு பயம் காட்டியது . அந்த நேரங்களில் ஈழ தமிழர்களுக்காக பதவியை துறப்பேன் என வீர வசனங்களும் விடுவார். நாள் நெருங்கியது ஈழ விடுதலை ஆதரவாளர்களை சிறையிலடைத்தார். மனித சங்கிலி என்று மக்களை முட்டாள் ஆக்கினார் . இலங்கை இராணுவம் போரை தீவிரபடுதியது . கலைஞரும் வழக்கம் போல் தமிழர்களை ஏமாற்றினார்.

மீண்டும் ஒருமுறை இதே நாடகத்தை அரங்கேற்றினார் அப்போதும் தமிழர்கள் நம்பினார்கள் (யார் செய்த பாவமோ ) இப்போது மீண்டும் ஈழ தமிழர்களுக்கு தீர்மானம் போடுகிறார் பேசுகிறார் . சட்ட சபையில் போட்ட தீர்மானம் குப்பையில் போனது இப்போது பொதுக்குழு தீர்மானம் போட்டிருக்கிறது . கலைஞர் உயிரையும் கொடுப்பார் நம்புங்கள் . அய்யா கலைஞர் அவர்களே எல்லோரும் இறந்த பின்னராவதாவது உங்கள் காவியத்தின் கிளைமாக்ஸ் வருமா ?

3 கருத்துக்கள்:

Anonymous said...

கலைஞரும் முயற்சி செய்கிறார் ஆனால் யாரும் அவருக்கு உறுதுணையாய் இருக்க வில்லையே மாறாக இடையூராகதானே இருக்கிறார்கள்

Suresh Kumar said...

வாமா மின்னல் ...................
யார் இடையூறை இருக்கிறார்கள் என்பதை கூட சொல்லியிருக்கலாமே, விவாதிக்கலாம்

Unknown said...

inum ungakiternthu neraya yethir parkuren.///

Post a Comment

Send your Status to your Facebook