Wednesday

மருத்துவ மனையிலும் தொடரும் மாணவர் போராட்டம்

இலங்கையில் தமிழர்கள் மீது சிங்கள படையினர் நடத்தும் கண்மூடி தனமான தாக்குதலை நிறுத்த கோரியும் ,போர்நிறுத்தம் செய்யகோரியும் செங்கல் பாட்டில் சட்ட கல்லூரி மாணவர்கள் 14 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டனர் .

இதில் ஆறு மாணவர்கள் மயக்கம் அடைந்தனர் அவர்களை செங்கல் பட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் . பின்னர் ஏழாவது நாளாக மற்ற எட்டு மாணவர்களும் உண்ணாவிரதத்தை இன்றும் தொடர்ந்தனர் . அந்த மாணவர்களின் நாடித்துடிப்பு குறைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்திருந்த வேளையில் இன்று காலை உண்ணாவிரத பந்தலுக்கு சென்ற காவல் துறையினர் மாணவர்களை குண்டு கட்டாக தூக்கி மருத்துவ மனையில் அனுமதித்தனர் . அங்கே மாணவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது .

மாணவர்களின் சுயநினைவு திரும்பிய நிலையில் குளுக்கோஸ் குழாய்களை எல்லாம் பிடுங்கி எறிந்து விட்டனர் . மருத்துவ சிகிச்சையை ஏற்கமறுத்து மீண்டும் தங்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர் .


மருத்துவமனையிலிருந்து உண்ணாவிரதத்தை மாணவர்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர் .

மத்திய மாநில அரசுகளே மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்குவதை விட்டு விட்டு ஆக்கபூர்வமாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்துங்கள் . உண்ணாவிரதமிருக்கும் மாணவர்களுக்கு எங்கள் வீர வணக்கங்கள் .


2 கருத்துக்கள்:

தேவன் மாயம் said...

மத்திய மாநில அரசுகளே மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்குவதை விட்டு விட்டு ஆக்கபூர்வமாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்துங்கள் . உண்ணாவிரதமிருக்கும் மாணவர்களுக்கு எங்கள் வீர வணக்கங்கள் .
இந்த நேரத்தில்,ஜாலியா எழுத முடியல.
பின் வரும் கவிதையை,நிறைய இடத்தில்
அழுது கொண்டே எழுதினேங்க!
ஒரு சிறு குழந்தையின் பார்வையில்....

Anonymous said...

சாகச்செய்வானை சாகச்செய்யாமல்
சாகத்துணிந்தாயே தமிழா

Post a Comment

Send your Status to your Facebook