Friday

வைகோ தலைமையில் டெல்லியில் உண்ணாவிரதம் துவங்கியது-தலைவர்கள் வாழ்த்து

ஈழ தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு நடத்தும் திட்டமிட்ட இனபடுகொலையை கண்டித்தும் , இதற்கு துணை போகும் இந்திய அரசை கண்டித்தும், போர் நிறுத்தம் வலியுறுத்தியும் டெல்லியில் வைகோ தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது .

இன்று காலை மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது . இதில் மதிமுக தொண்டர்கள் ஆயிரகணக்கானோர் நேற்றே டெல்லிக்கு சென்று சேர்ந்தனர் . ஆயிரகனாக்கான தொண்டர்களோடு வைகோ உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இந்த உண்ணாவிரதத்தில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர் பழ. நெடுமாறன் மற்றும் பாமக , இந்திய கம்யூனிஸ்ட் , விடுதலை சிறுத்தைகள் , பாரதிய ஜனதா தேசிய தலைவர்கள் , பிற மாநில கட்சி தலைவர்கள் பங்கு பெற்று வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றனர் .

இந்த போராட்டமானது டெல்லியில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்க படுகிறது . நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கிறது . நேற்று பாமக , மதிமுக , இந்திய கம்யூனிஸ்ட் எம்பிக்கள் போர் நிறுத்தம் வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிட தக்கது .

போராட்டம் வெற்றி பெற்று போர் நிறுத்தம் ஏற்பட நாமும் வாழ்த்துவோம் .

12 கருத்துக்கள்:

SurveySan said...

:)

Anonymous said...

அண்ணே வைகோ
ஆதரவற்று வந்த ஈழத்தமிழரை மனிதர்களாக கூட நடத்தாத நீங்களும் உங்கள் தமிழக தலைவர்களும் தயவு செய்து வேறு உத்திகளை கையாண்டு உங்கள் கேவலங்கெட்ட அரசியல் புழைப்பை நடத்துங்கோ. ஆனால் அண்ணை பிரபாவின்ர ஏஜண்டுகளிட்ட வாங்கின காசுக்கு> சொன்ன மாதிரி இல்லாம ஏய்ச்சா பிராபாண்ணை ஒண்டாச் சாப்பிட்டு சகோதரம் மாதிரி இருந்தனீங்கள் எண்டு கூட பாக்கமாட்டார் போட்டுத்தள்ளிப் போடுவார். கவனம். எதுக்கும் தயவு செய்து ஈழத்தமிழரை காட்டி ஈனத்தனமாய் அரசியல் நடத்துறதை விட்டிடுங்கோ ஈழத் தமிழர் தமிழக தமிழன் போலில்லை. அது புலியாய் இருந்தாலும் சரி இல்லாட்டிலும் சரி. ஏன் உமக்கு இந்த பொல்லாத விஷப்பரீட்சை
குகன்

Anonymous said...

அண்ணாச்சி உங்கள் உண்ணாவிரதம் அடையாள உண்ணாவிரதமா? அல்லது சாகும்வரை உண்ணாவிரதமா?

தமிழ் ஈழத்தில் காந்திய வழியில் போராட்டம் நடத்திய திலீபனின் வழிகாட்டலில் நீங்களும் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்பதே எமது தமிழ்நாட்டு மக்களின் விருப்பம். தமிழன் சாதனைக்குரியவன். முத்துகுமார் தீக்குளித்து சரித்திரத்தில் இடம் பிடித்து விட்டார். தோழர் திருமாவைப் போல அரைகுறையாக உங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளாதீர்கள். சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து சரித்திரத்தில் இடம் பிடியுங்கள். வாழ்த்துக்கள்.

Anonymous said...

வெல்ல வாழ்த்துகள்

Anonymous said...

போராட்டம் வெற்றி பெற்று போர் நிறுத்தம் ஏற்பட வாழ்த்துகள்

ers said...

எல்லா கரை வேட்டிகளுடன் சேர்ந்து நீங்க காட்டும் இந்த படத்தின் ரீல்... இடையில் அறுந்து விடாமல் இருந்தா சரி தான்.

ers said...

திலீபன் மாதிரி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க தைரியம் இருக்கா உங்களில் யாருக்காவது

Suresh Kumar said...

tamil cinema சொன்னது…

திலீபன் மாதிரி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க தைரியம் இருக்கா உங்களில் யாருக்காவது////////////////////////

இந்த உண்ணாவிரத போராட்டம் சாவதற்கில்லை . சிங்கள இனவெறி அரசு நடத்தும் படுகொலையை தடுத்து நிறுத்தவும் . அதற்கு உதவி செய்யும் மத்திய அரசை கண்டித்து நடைபெறுவது. தமிழ் உணவாளர்கள் சாக வேண்டும் என்பது உங்கள் எண்ணமா? ஒரு திலிபனை நாம் இழந்தோம் இன்னொரு திலிபனை இழக்காமலே நாம் போராட்டத்தில் வெற்றி பெற வேண்டும்

Anonymous said...

Kugan சொன்னது…

அண்ணே குகன்

உங்க அப்பா சிங்களன் தன் ஒத்துகிறேன்

Anonymous said...

Kugan சொன்னது…

Anonymous said...

அண்ணே குகன்

உங்க அப்பா சிங்களன் தன் ஒத்துகிறேன்

Anonymous said...

உண்ணாவிரதம் எப்படிப் போயிட்டுருக்கிது ?

Post a Comment

Send your Status to your Facebook