Thursday

ஓட்டுசுட்டானில் சிங்கள இராணுவத்தை வேட்டையாடிய புலிகள் !! காணொளி !!

வன்னிக் களமுனைகளில் கடந்தவாரம் வெள்ளிக்கிழமை படையினரால் கைப்பற்றப்பட்ட புதுக்குடியிருப்பு நகரைச் சுற்றிய பகுதிகளிலும் இரணைப்பாலை முன்னணி நிலைகளிலும், சாலை கடற்கரைப் பகுதிகளிலும் விடுதலைப் புலிகள் ஊடறுப்புத் தாக்குதல்களைத் தொடுத்திருந்தனர். இந்த மோதல்களில் ஒரு நாளிலேயே 100-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டிருந்ததுடன் படையினரது உடலங்களும் படைக்கருவிகளும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தன. இதன்போது படையினரால் கைப்பற்றப்பட்ட ஒட்டுசுட்டான் காட்டுப் பிரதேசத்தில் விடுதலைப்புலிகளில் ஆழ ஊடுருவும் படையணிகள் நடத்திய தாக்குதலில் ட்ரக் ஒன்றில் பயணம் செய்த சுமார் 20 படையினர்; கொல்லப்பட்டிருந்தனர். இத்தாக்குதல் நடந்தபொழுது நேரடியாக எடுக்கப்பட்ட காணொளிக் காட்சியை விடுதலைப்புலிகள் வெளியிட்டுள்ளனர். அப்பாவித் தமிழ்மக்கள் மீது இனவெறித்தாக்குதலை நடத்திவரும் சிங்கள இராணுவம் புலிகளால் வேட்டையாடப்படுவதை இக்காணொளியில் காணலாம்.

காணொளி பார்க்க இந்த இணைப்பில் செல்லவும் .

0 கருத்துக்கள்:

Post a Comment

Send your Status to your Facebook