Wednesday

என்ன கொடுமை சரவணா ?

இலங்கை போர் நிறுத்தம்: முதல்வர் தலைமையில் நாளை பேரணி

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை மன்றோ சிலையிலிருந்து சேப்பாக்கம் வரையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நாளை பேரணி நடக்கிறது

.இது குறித்து, தி.மு.க., தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:


இந்தியா உள்ளிட்ட உலகநாடுகள் எழுப்பிடும் உருக்கமிகு குரலை மதித்து, இலங்கை அரசு போரை நிறுத்திட வேண்டும். இதை வலியுறுத்தி சென்னையில் நாளை மாலை 4 மணிக்கு நடக்கும் தமிழர் பேரணியில் கட்சி வேறுபாடின்றி அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். முதல்வர் கருணாநிதி தலைமையில் மன்றோ சிலையிலிருந்து சேப்பாக்கம் வரையில் பேரணி நடக்கும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இன்று தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடப்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள்:

Post a Comment

Send your Status to your Facebook