Thursday

ஓரின சேர்க்கை சட்ட பூர்வமாகிறது . என்ன கொடுமை?

 ஆணும் ஆணும்   இணைந்து செக்ஸ் செய்வதும் ஒரு பெண்ணும் பெண்ணும் இணைந்து செக்ஸ் செய்வதும் ஓரின சேர்க்கையாக கருத படுகிறது முறையே ஹோமோ செக்ஸ் என்றும் லெஸ்பியன் என்றும் சொல்லப்படும் . இது மனித குலத்திற்கு ஒவ்வாத ஒன்றாக கருத பட்டு வருகிறது . இவ்வாறு ஓரின சேர்க்கை செய்வதால் பல வகையான பாலியல் நோய்கள வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் . செக்ஸ் உறவுகளின் மூலம் வரும் எயிட்ஸ் (HIV) கூட வருவதற்கு பெரும்பாலான வாய்ப்புகள் இருக்கிறது .

இந்த நிலையில் ஓரின சேர்க்கை இந்தியாவில் குற்றம் என பிரிவு 377 ளில் சொல்லபட்டிருக்கிறது . இதைஎதிர்த்து ஓரின சேர்க்கையில் ஈடுபாடுடைய அமைப்புகள் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது . இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதி மன்ற நீதிபதி ஓரின சேர்க்கை குற்றம் அல்ல என தீர்ப்பளித்திருக்கிறார் இந்த தீர்ப்பு மக்கள் மத்தியில் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது .



சில அயல் நாடுகளில் ஓரின சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் இருந்தாலும் இந்தியாவில் இது குற்றமாகவே இருந்து வந்துள்ளது . இந்த தீர்ப்பின் மூலம் இந்தியாவில் சட்ட அங்கீகாரம் வரவும்  வாய்ப்பிருக்கிறது . மேலும் நீதிபதி பிரிவு 377 தவறு எனவும் ஓரின சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கலாம் எனவும் சொல்லியிருக்கிறார் . இந்நிலையில் மத்திய சட்ட அமைச்சர்  வீரப்ப மொய்லி  இந்த தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்படும் என சொல்லியிருக்கிறார் .

என்ன கொடுமை ..........................................  இதுக்கு மேல என்ன சொல்ல

6 கருத்துக்கள்:

மயாதி said...

சூப்பர்,,,
நிறைய பதிவர்களுக்கு ஜாலிதான், முன்னெல்லாம் ஜாடைமாடையா ஆதரிச்சவங்க இனி ஒப்பினா கதைக்கப் போறாங்க...

பேசாம கொஞ்ச நாளைக்கு திரட்டிகள் பக்கம் போகாம எஸ்கேப் ஆகிறது நல்லது போல...

Suresh Kumar said...

மயாதி said...

சூப்பர்,,,
நிறைய பதிவர்களுக்கு ஜாலிதான், முன்னெல்லாம் ஜாடைமாடையா ஆதரிச்சவங்க இனி ஒப்பினா கதைக்கப் போறாங்க...//////////////

இத கூடவா ஆதரிச்சாங்க ? என்ன கொடுமை

பேசாம கொஞ்ச நாளைக்கு திரட்டிகள் பக்கம் போகாம எஸ்கேப் ஆகிறது நல்லது போல... /////////////

நல்லது தான்

Anbu said...

:-)

தினேஷ் said...

பெங்களூர்ல அதற்க்கு ஆதரவா நடந்த பேரணிய பார்த்தேன் .. நாம என்ன தான் கலாச்சாரம் கிலாச்சாரம்னு சொன்னாலும் அதுவும் ஒரு உணர்வுதானே . அது புதுசா ஒண்ணும் வரல காலம் காலாமா நடக்குறதுதானே.. என்ன செய்ய ஆண்டவனோட விளையாட்டுத்தான் எல்லாம்.

ஆ.ஞானசேகரன் said...

பல குற்றங்களுக்கு ஆரம்பமாக ஆகிவிடலாம் மறுபரிசிலனை நல்லது

Suresh Kumar said...

கருத்துக்கள் சொன்ன அன்பு , சூரியன் , ஞான சேகரன் அனைவருக்கும் நன்றிகள் பல

Post a Comment

Send your Status to your Facebook