• பேய், பிசாசு உடம்பினுள்...

    இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....

  • உங்கள் மேல் எதற்கு ...

    தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் ...

  • யூத் புல் விகடனில் ...

    யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் ...

Showing posts with label உண்ணாவிரதம். Show all posts
Showing posts with label உண்ணாவிரதம். Show all posts

Friday

முல்லை பெரியாறில் தமிழர் உரிமை காக்க வைகோ தலைமையில் உண்ணாவிரதம்

முல்லை பெரியாறில் தமிழக மக்களின் உரிமையை பறிக்கும் வகையில் புதிய ஆணை கட்ட முதற் கட்ட பணிகளை துவக்கிய கேரள அரசையும் , ஆய்வு பணிக்கு அனுமதி வழங்கிய மத்திய தமிழர் விரோத காங்கிரஸ் அரசையும் கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் மதுரையில் நாளை மாபெரும் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

ஏற்கனவே மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேசை கண்டித்து மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த திமுக பின்னர் ராஜாவின் ஷ்பெக்ட்ராம் ஊழலை மத்திய காங்கிரஸ் அரசு சிபிஐ மூலமாக விரைவு படுத்தி திமுக மத்திய அமைச்சர் ராஜாவின் அலுவலகம் முழுவதும் அதிரடி சோதனை செய்தார்கள் . இதையடுத்து கண்டன பொதுக்கூட்டத்தை நடத்துவதிலிருந்து விலகி கொண்டது திமுக. இப்படி ஊழல் விவகாரங்களுக்காக மக்கள் நலனை காற்றில் பறக்க விடும் திமுக அரசையும் கண்டித்து நடைபெறும் உண்ணாவிரத போராட்டம் மிகவும் முக்கியமானதாக கருத படுகிறது .

தென் மாவட்டங்களில் உள்ள ஐந்து மாவட்டங்கள் முல்ல்லை பெரியாறை நம்பி தான் விவசாயங்கள் இருக்கிறது . கேரளா அரசு திட்டமிட்டு தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க கூடாது என வீண் புரளிகளை கிளப்பி விடுகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் மதிக்காமல் , இந்திய இறையாண்மையை பற்றியும் கவலை படாமல் செயல் பட்டு வருகிறது . கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டிற்கு சாதகமாக இருந்த வழக்கு தற்போது தமிழக அரசின் திறமையற்ற வாதத்தினால் கேரளத்திற்கு சாதகமாக செல்லும் நிலைமை ஏற்பட்டு உள்ளது . இதன் ஒரு பகுதி தான் வழக்கை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றியது.

இந்த சூழ்நிலையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது . மாற்றங்களை உருவாக்குமா ? உண்ணாவிரத போராட்டம் .
Read More

Send your Status to your Facebook