• பேய், பிசாசு உடம்பினுள்...

    இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....

  • உங்கள் மேல் எதற்கு ...

    தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் ...

  • யூத் புல் விகடனில் ...

    யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் ...

Showing posts with label தமிழ் ஈழ தேசிய மலர். Show all posts
Showing posts with label தமிழ் ஈழ தேசிய மலர். Show all posts

Sunday

கார்த்திகை பூ தமிழ் ஈழ தேசிய மலர்

மாலத்தீவில் நான் தங்கியிருந்த அறையிலிருந்து வெளியே செல்லலாம் என கிளம்பிய நேரத்தில் திடீரென என்னுடைய கண்ணில் பட்டது அழகிய மலர். இந்த மலர் என்னை கவர்ந்தது உடனடியாக என்னுடைய கைபேசியில் படம் எடுத்து கொண்டேன் . படம் எடுத்து கொண்ட பின்னர் எனக்கு ஒரே குழப்பம் இந்த பூவை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்பது தான். ஆனால் நான் இதற்கு முன்னர் நேரடியாக இந்த பூவை பார்த்ததில்லை. ஆனால் பார்த்த நியாபகம். பின்னர் நினைவுக்கு வந்தது இணையத்தில் பார்த்ததாக. பின்னர் தான் தெரிந்தது இது தான் தமிழ் ஈழ தேசிய மலர் என்று.


அந்த மலரை பார்த்ததும் தமிழ் ஈழத்தில் இன ஒடுக்குமுறைக்கு எதிராக, இன விடுதலைக்காக களத்தில் மடிந்த ஆயிரகணக்கான மாவீரர்களை நினைவு கூறும் மாவீரர் நாள் அடுத்த மாதம் என்பதும் நினைவில் வந்தது. ஈழ தமிழர்களுக்கு மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நினைவு கூற வேண்டிய நாள் தான் நவம்பர் 27 .

நினைவு கூர்ந்து அதை ஒரு தமிழர்களின் எழுச்சி நாளாக கடை பிடிக்க வேண்டும் . எந்த இலட்சியத்திற்காக ஆயிரம் ஆயிரம் மாவீரர்கள் மடிந்தார்களோ அந்த லட்சியத்தை அடைய நாம் உறுதி கூற வேண்டும்.
Read More

Send your Status to your Facebook