இன்றைய உலகில் கடவுளின் பெயரை சொல்லி பிழைப்பை நடத்துகிறவர்கள் ஒருபுறம் . கடவுளின் பெயரால் வன்முறையை துவக்குகிறவர்கள் ஒரு புறம் . இன்றைய மனிதன் தான் மனிதன் என்ற அடையாளத்தை விட அதை தாண்டிய ஒரு அடையாளம் தேவை என உணர்கிறான் . அதன் அடிப்படையில் மதம் என்ற ஒரு குறுகிய வட்டத்துக்குள் ஒளிந்து நின்று நான் அந்த மதம் இந்த மதம் என்று பெருமை கொள்வதாய் நினைக்கிறான் .
ஆனால் கடவுள் என்ற ஒரு நிலையை அறிமுகபடுத்திய யாரும் நாளை உலகம் இப்படி மாறும் என நினைத்து அறிமுக படுத்தியிருக்க மாட்டார்கள் . மாறாக மனிதனை நல்வழி படுத்தவே தோன்றியிருக்க வேண்டும் .
எந்த மதமும் வன்முறையை வாழ்க்கையாக எடுத்துரைக்கவில்லை . ஒவ்வெருவரும் தன் மதத்தை வளர்க்க வேண்டும் என நினைக்கிறார்களே தவிர அந்த மதத்தின் நல்ல செயல்களை கடைபிடிப்பதாக தெரியவில்லை . மற்றவர்களுக்கு நான் இந்த மதம், அந்த மதம் என தெரியவேண்டும் என்பதற்காக அடையாள படுத்துகிறார்கள் . தன் மீதும் தன் முயற்சி மீதும் வைக்க வேண்டிய நம்பிக்கையை விட்டு கடவுள் மீது நம்பிக்கை வைக்கின்றனர் . ஒரு தவறு செய்தால் கூட கடவுள் ஏன் இப்படி செய்துவிட்டார் என்று கடவுள் மீது பழிபோடுகிறார்கள் . இப்படி தான் செய்யும் ஒவ்வெரு அயோக்கியத்தனத்துக்கு காவலாக கடவுளை வைத்திருக்கிறார்கள் .
கடவுள் பெயராலும் மதத்தின் பெயராலும் தினம் தினம் பல உயிர்களை பலி கொடுக்கிறார்கள். கடவுள் மீது இருக்கிற அக்கறையை மற்றவர்களின் மீது காட்டுவதில்லை . இந்த வகையில் தான் மதவாதிகள் (அதாவது மனநோயாளிகள் ) இன்னொரு மதத்தின் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுகின்றனர் .
ஏன் இப்படி இவர்கள் இருக்கிறார்கள் என பார்க்கும் போது அவர்கள் மனதை பாதித்தது மதம். மதம் எப்படி யானைக்கு வந்தால் பாகனை கூட தெரியாதோ அதேபோல் தான் மதவாதம் என்னும் மனநோய் மனிதனுக்கு வந்துவிட்டால் அவனும் மனிதன் என்பது மறந்து போகும் . எந்த மனிதனுக்கும் ஆத்திரம் என்பது சுயநினைவு குறையும் போது தான் ஏற்படும் . சுயநினைவு குறையும் போது மனநோய் வரும். இப்படி வரும் மனநோயால் தான் மனிதாபிமானம் இல்லாமல் போகிறது .
மதத்தை பின்பற்றுங்கள் தவறு இல்லை நம்பிக்கை என்பது உங்கள் மேல் வையுங்கள், உங்கள் மதம் சொல்லியிருக்கும் நல்லதை மட்டும் வாழ்க்கைக்கு பயன்படுத்துங்கள் , மனிதனுக்கு மனிதன் உதவுங்கள், மனிதாபிமானம் மண்ணில் வளர்ந்தால் மதம் நமக்கு தேவையில்லை.
மனநோய் மாறட்டும் மனிதநேயம் பரவட்டும்.
Tweet
7 கருத்துக்கள்:
நல்லா சொன்னீர்கள், இன்றைய போலி - மதத்தின் நிலையை.
எல்லா மதத்தினரும், அவர்களின் மதவிளக்கத்தை ஒழுங்காக படித்து அதன் படி அமைதி வழி நடந்தால் எந்த பிரச்னையும் இல்லை, யாருக்கும் மனநோயும் இல்லை.
ayyaa கொஞ்சம் பத்தி பிரித்து இடம் விட்டு எழுதவும். அயர்ச்சியை தவிர்க்கும்
//நம்பிக்கை என்பது உங்கள் மேல் வையுங்கள், உங்கள் மதம் சொல்லியிருக்கும் நல்லதை மட்டும் வாழ்க்கைக்கு பயன்படுத்துங்கள் , மனிதனுக்கு மனிதன் உதவுங்கள், மனிதாபிமானம் மண்ணில் வளர்ந்தால் மதம் நமக்கு தேவையில்லை///
மதம் மதம் பிடிக்கும் அளவுக்கு செல்லக்கூடாது!!!
தேவா...
ayyaa கொஞ்சம் பத்தி பிரித்து இடம் விட்டு எழுதவும். அயர்ச்சியை தவிர்க்கும்///////////
உங்கள் ஆலோசனைக்கு நன்றி அடுத்த பதிப்பில் உங்கள் ஆலோசனையை கவனத்தில் எடுக்கிறேன். உங்கள் பெயரை சொல்லியிருந்தால் இன்னும் மகிழ்ச்சியாய் இருந்திருக்கும்.
well done i accept you!
now a days new new couples interduce themself they have special power!! e..g
Amma bahavan!!
எல்லா மதத்தினரும், அவர்களின் மதவிளக்கத்தை ஒழுங்காக படித்து அதன் படி அமைதி வழி நடந்தால் எந்த பிரச்னையும் இல்லை, யாருக்கும் மனநோயும் இல்லை.///////////
யாருக்கும் மனநோய் வரக்கூடாது என்பது தான் நம் விருப்பம்
//மனநோய் மாறட்டும் மனிதநேயம் பரவட்டும் //
மதம் மறந்தாலே மனநோய் மாறிவிடும்..
Post a Comment