Monday

விடுதலை புலிகள் வேறு ஈழ தமிழர்கள் வேறு


மார்க்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரந்தா காரத் அவர்கள் சொல்லுகிறார்கள் விடுதலை புலிகள் வேறு ஈழ தமிழர்கள் வேறு .

அப்படியென்றால் விடுதலை புலிகள் வேற்று கிரகத்திலிருந்து வந்திருப்பார்களோ? இருந்தாலும் இருக்கும் ஏனெனில் சொன்னது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் .

கம்யூனிஸ்ட் கட்சி இப்போது எந்த நிலையில் இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும் . கம்யூனிஸ்ட் காட்சியில் வலது இடது என இரண்டு கட்சிகள் இருக்கிறது. முதலில் இந்திய கம்யூனிஸ்ட் என்று ஒரு கட்சி தான் இருந்தது. பின்னர் இந்தியாவுக்கும் சைனாவுக்கும் போர் ஏற்பட்ட காலத்தில் கருத்து வேறுபாடுகளால் பிரிந்த கட்சி தான் மார்க்ஸ்ட் கம்யூனிஸ்ட் .

இந்த மார்க்ஸ்ட் கம்யூனிஸ்ட் அதாவது இடது கம்யூனிஸ்ட் இந்தியாவில் கட்சி நடத்தினாலும் உலக கம்யூனிஸ்ட் கட்சி என்றே நினைத்து இந்தியாவில் கட்சி நடத்துவார்கள் . உலகத்தில் உள்ள எந்த ஒரு கம்யூனிஸ்ட் நாடுகளோ மற்ற நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகளோ தவறு செய்தாலும் . இது கட்சியின் கொள்கை என்றே வாதிடுவார்கள்.

இந்தியாவுக்கு எதிராக இந்த கம்யூனிஸ்ட் நாடுகள் செயல் பட்டால் கூட அதையும் நியாயபடுத்துபவர்கள் தான் இடது கம்யூனிஸ்டுகள் .

இந்தியாவுக்கு செல்ல வேண்டாம் தமிழ் நாட்டில் இடது கம்யூனிஸ்ட் செயல்பாட்டை பார்த்தாலே போதும் தெரிந்து விடும். தோழர் ஜீவா அவர்கள் தமிழ் நாட்டின் மாநில செயலாளராக இருந்த போது தமிழகத்து உரிமைக்கு எதிராக குரல் கொடுத்த கேரளா மாநில கம்யூனிஸ்ட்க்கு எதிராக தீர்மானம் போட்டது வரலாறு. அந்த ஜீவாவின் வழியில் வந்த தோழர்கள் தான் இன்றும் இந்திய கம்யூனிஸ்ட் என்ற பெயரில் இருக்கிறார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் தோழர்கள் துவக்கம் முதலே நாட்டு பற்று மொழி பற்று கொண்டவர்கள். ஆனால் இடது கம்யூனிஸ்ட் கட்சியினர் எப்போதும் இந்திய அளவில் எடுத்து கொண்டால் சைனாவுக்கு ஆதரவாக பேசுவார்கள் . மாநில அளவில் எடுத்து கொண்டால் கேரளாவுக்கு ஆதரவாக பேசுவார்கள். அந்த நிலையில் தான் விடுதலை புலிகள் வேறு ஈழ தமிழர்கள் வேறு என பேசியிருக்கிறார்.

பாலஸ்தீனத்தில் ஹமாஸ் இயக்கத்தை மக்கள் ஆதரித்த போது அந்த இயக்கமும் மக்களுக்காக போராடும் இயக்கம் என்றார்கள். இதை தான் தமிழ் ஈழ மக்கள் எத்தனை முறை நிரூபித்து விட்டார்கள். எத்தனை தேர்தல்களில் எங்களையும் விடுதலை புலிகளையும் பிரிக்க முடியாது. என கூறி விட்டார்கள் மீண்டும் ஏன் தமிழனின் சுதந்திரத்தை தடுக்க பார்க்கிறீர்கள்.

உங்களுக்கு ஒரு நோக்கம் இருக்கும் பிராபாகரன் ஏன் நான் ஒரு கம்யூனிஸ்ட் என சொல்லவில்லை. அப்படி சொல்லியிருந்தால் நீங்கள் ஆதரித்திருப்பீர்கள். ஆனால் மக்கள் ஆதரித்திருக்க மாட்டார்கள். அதை தான் புரட்சி மூலம் வென்ற க்யுபா அதிபர் பெடல் காஸ்ட்ரோ உலகத்திற்கு காட்டினார். பிடல் காஸ்ட்ரோ தான் புரட்சியை மேற்கொண்ட போது அவர் ஒரு கம்யூனிஸ்ட் இல்லை. கம்யூனிஸ்ட் கட்சி என்றாலே புரட்சியை வேக படுத்தாது மாறாக புரட்சியை மந்த படுத்தும் என்பதை உணர்ந்து கம்யூனிஸ்ட் இல்லாதா ஒரு தலைவனாக புரட்சியை முன்னெடுத்து வென்றார் என்பது வரலாறு . ஆட்சியை கைப்பற்றிய பின்னர் தான் கம்யூனிஸ்ட் காட்சியில் இணைந்தார்.

அன்பார்ந்த கம்யூனிஸ்ட் (இடது ) தோழர்களே தமிழ் ஈழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் முப்பது ஆண்டுகளாக மக்கள் ஆதரவோடு ஒரு போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக இல்லை என்றாலும் அந்த போராட்டத்தை கொச்சை படுத்தாதீர்கள். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் இனவிரோத கொள்கைக்கு தான் துணை நிர்பீர்களே என்றால் உங்களை காலம் மன்னிக்காது.



உங்கள் ஓட்டுகளை மறக்காமல் தமிழ்மணத்திலும் தமிளிஷிலும் குத்துங்கோ

5 கருத்துக்கள்:

Anonymous said...

அம்மாடியோவ்!
இந்தியர்கள் வேறு!
தமிழர்கள் வேறு என்று ஒரேயடியாகச் சொல்லி விடுங்களேன்.

Anonymous said...

Tamils for Obama.
petition to stop the war against eelam tamils.
This group is collecting electronic signatures
from tamils all over the world to ask president obama and secretary of state Hilary Clinton to take action to stop the genocidal war against eelam tamils.
the group is aiming for 100,000 signatures.
please sign the petition.

Anonymous said...

the website address -www.tamilsforobama.com.
please go to this website and sign the petition.

Focus Lanka said...

Focus Lanka திரட்டியில் இணைந்துகொள்ளுங்கள்
http://www.focuslanka.com

Anonymous said...

உங்கள் பதிவுகளை மற்றவர்களும் வாசிக்க பயனடைய இங்கேயும் இனைப்புகொடுங்கள் இந்த கருத்து என்னால் இனைக்கப்பட்டுள்ளது
நன்றி

Post a Comment

Send your Status to your Facebook