Monday

திட்டமிட்டு வெளிநாடுகளில் பரப்பப்படும் பொய் செய்திகள்

ஒரு புறம் அப்பாவி தமிழ் மக்களை கூண்டோடு அழிக்க திட்டமிட்ட சிங்கள அரசானது வெளியுலகத்திற்கு தெரியாதவாறு இருப்பதற்காகவும் , தமிழர்களுக்கு ஒரு போதையை ஏற்றி விடும் நோக்கில் திட்டமிட்டே வதந்திகளை பரப்பி வருகிறது .

குறிப்பாக இந்திய பத்திரிக்கைகளில் இந்த பொய் செய்திகள் வருமளவிற்கு இலங்கை இனவெறி அரசு பார்த்து கொள்கிறது . முதலில் கல்மடு குளம் உடைந்ததில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் இறந்தார்கள் என்ற ஒரு செய்தியும் . அதே நேரம் பாதுகாப்பு வலயப் பிரதேசம் மீது படையினர் நேற்றும் தொடர் எறிகணை தாக்குதல்: 22 பொதுமக்கள் பலி; 60 பேர் படுகாயம்

இன்று கொழும்பில் தகவல் தொடர்புகள் துண்டிப்பு என்றும் , கொழும்பு பரபரப்பாக இருப்பது போன்றும் , விடுதலை புலிகள் ராணுவத்தை விரட்டி விரட்டி வருவதாகவும் பொய் செய்திகளை வெளியிட்டு வருகிறது . இந்த நிலையில் " மக்கள் பாதுகாப்பு வலயம் " மீது கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல் : 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி , 100 க்கும் மேற்பட்டோர் படுகாயம் ! இப்படி பட்ட மனித அவலங்களை தமிழ் சமூகமும் உலகும் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காகவே இந்த செய்திகள் பரப்பப்படுகிறது .

உலக தமிழர்களை போதை ஏற்றிவிட்டு ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தையும் கூண்டோடு அழிக்க சிங்கள இனவெறி அரசு முடிவு செய்து விட்டது . நாம் விழித்திருந்து சிங்கள அரசின் அவலத்தை வெளியில் தெரியப்படுத்தி உடனடியாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்த சிங்கள அரசுக்கு அழுத்தம் கொடுக்க முயல வேண்டும் .

தமிழினமே விழித்துக்கொள் இனியும் தாமதித்தால் நாளை ஈழ தமிழினம் இருக்காது .

அரசியல் வாதிகளே ஈழ தமிழனின் பிணத்தில் அரசியல் செய்தது போதும் . தாயக தமிழர்களே நம் சொந்தங்களை இனியும் காப்பற்ற தவருவோமேன்றால் நம்மை காலம் மன்னிக்காது . பக்கத்திலே ஆறுகோடி தமிழன் இருந்து என்ன பயன் .

2 கருத்துக்கள்:

Anonymous said...

தமிழக முதல்வர் கருணாநிதியும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஜெயலலிதாவும் யாழ்ப்பாணத்துக்கும் வன்னிக்கும் விஜயம் செய்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ் மக்களை விடுவிக்குமாறு புலிகளுக்குத் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுக்கலாமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.- Asian Tribune Mon, 2009-01-26 08:15

Suresh Kumar said...

நானும் படித்தேன் நண்பரே மஹிந்த ஒருபுறம் தமிழர்களை கொலை செய்து விட்டு மற்றொரு புறம் நல்லவர்களை போல் நாடமாடுகிறார் . நம் தமிழக தலைவர்களின் கையாலாகாத தனத்தையே இது காட்டுகிறது .

Post a Comment

Send your Status to your Facebook