Monday

போர்நிறுத்தத்தை வலியுறுத்தி நாளை நடைபெறும் மனித சங்கிலியில் அணிதிரள்வோம்

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நாளை (17-02-09 ) சென்னை முதல் குமரி வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெறவிருக்கிறது . இதில் நாம் கலந்து கொண்டு போர்நிறுத்தத்தை வலியுறுத்துவோம் .

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கமானது போர்நிறுத்தத்தை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது . அதில் ஒரு பகுதியாக நாளை மனித சங்கிலி போராட்டத்தை நடத்தவிருக்கிறது .

இதில் அரசியலுக்கு அப்பாற்பட்ட பல இயக்கங்கள், அரசியல் கட்சிகள் மாணவர்கள் , இளைஞர்கள் , பெரியோர்கள், சிறியோர்கள் என பலர் கலந்து கொள்ளவுள்ளனர் . சிங்கள அரசின் திட்டமிட்ட இனபடுகொலைகளை காட்டும் படங்களை தாங்கி மனித சங்கிலியில் பெருமளவில் மக்கள் கலந்துகொண்டு போர்நிறுத்தத்தை வலியுறுத்தவிருக்கின்றனர் .

இதில் நாம் அனைவரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு அலைகடலென திரண்டு மனித சங்கிலி மூலம் நம் எதிர்ப்பை ஒரே குரலில் பதிவு செய்வோம் . சாவின் விழிம்பில் இருக்கும் ஈழ தமிழர்களுக்காக நாம் மனித சங்கிலியில் இணைவோம் .

0 கருத்துக்கள்:

Post a Comment

Send your Status to your Facebook