Thursday

தேர்தல் முடிவுகள் தெரிய இரண்டு நாட்களே உள்ள நிலையில் எக்சிட் போல் கருத்து கணிப்பு தேவையா?

எக்சிட் போல் கருத்து கணிப்புகளில் கலங்கி போயிருக்கின்றன பெரிய கட்சிகள் . சனிகிழமை வாக்குகள் எண்ண படும் அன்றே முடிவுகள் தெரிந்து விடும் அதுக்கு முன்னால எதுக்கு ஒரு கருத்து கணிப்பு என்று நாம் நினைத்தால் தவறு .

 ஜனநாயகத்தில் தூண் போன்று விளங்கும் பத்திரிகைகள் இப்போது நடுநிலை என்ற தன்மைகளை இழந்து ஏதோ ஒரு கட்சிக்கோ அல்லது ஏதோ ஒரு அமைப்புக்கோ துணை போகின்ற வகையிலே கருத்துக்களை வெளியிடுகின்றன . சில பத்திரிகைகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும் சில எதிர் கட்சிக்கு ஆதரவாகவும் செயல் படுகின்றன .

ஐந்து கட்ட தேர்தல் முடியும் முன்னால் ஒட்டு போட்ட பின்னர் எடுக்கப்படும் கருத்து கணிப்புகளை வெளியிட கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது . நேற்று கடைசி கட்ட தேர்தல் முடிவடைந்து விட்டது . கருத்து கணிப்புகளும் வெளியிடப்பட்டன . அதில் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாகவும் பாஜகவிற்கு சாதகமாகவும் கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது .  அதில் முக்கியமாக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு உள்ள வித்தியாசங்கள் 20 முதல் 30 வரை இருக்கிறது .

பத்திரிகைகள் கருத்து கணிப்புகளை சொன்னாலும் , தேர்தல் முடிவுகள் சனி கிழமை தெரிந்தாலும் இந்த இரண்டு நாட்கள் கூட காட்சிகளுக்கு ஒரு மினி தேர்தல் தான் . தேசிய அளவில் தெரிந்து விட்டது எந்த கூட்டணிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காது . காங்கிரஸ் அல்லது பாஜக காட்சிகளுக்கு தான் ஆட்சியமைக்க அதிக வாய்ப்புகள் இருக்கறது . 

இந்த இரண்டு நாட்களும் இந்த கூட்டணி தலைவர்கள்  யாரை மடக்கலாம் . அடுத்து அந்த கட்சிய கூப்பிடலாமா இல்ல இந்த கட்சிய கூப்பிடலாமா என்று தங்கள் அடுத்த கட்ட பிரச்சாரத்தை ஆரம்பிப்பார்கள் ( ஆரம்பித்திருப்பார்கள் ) . இப்போ தான் எக்சிட் போலில்  நிறைய சீட் கிடைக்கும் என்று சொன்ன கட்சிக்கு பூஸ்ட் குடிக்கிறமாதிரி இருக்கும் . மற்ற கட்சிக்கு .................................

அதனால தான் பாஜக தனியா எக்சிட் போல் நடத்தியிருக்கு .

9 கருத்துக்கள்:

ராஜ நடராஜன் said...

தொங்கும் பாராளுமன்றம் என்பது மட்டும் உறுதி.ஆனால் இனி குதிரை பேரத்தில் யார் ஜெயிக்கிறார்கள்,புதிய அரசியல் ஸ்டண்ட்கள் என நிறைய அரங்கேறப் போகிறது.

(இந்தக் கவனத்தில் ஈழ மக்களைப் பற்றியும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும்)

Suresh Kumar said...

ராஜ நடராஜன் கூறியது...

தொங்கும் பாராளுமன்றம் என்பது மட்டும் உறுதி.ஆனால் இனி குதிரை பேரத்தில் யார் ஜெயிக்கிறார்கள்,புதிய அரசியல் ஸ்டண்ட்கள் என நிறைய அரங்கேறப் போகிறது.////////////

அதில் எந்த மாற்றமும் இல்லை அது தான் இப்பவே ஸ்டாண்ட் ஆரம்பிச்சிட்டாங்களே

(இந்தக் கவனத்தில் ஈழ மக்களைப் பற்றியும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும்) ////////////

தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தான் ஈழ பிரச்சனையில் எந்த மாற்றமாக இருந்தாலும் வரும் . நம் எண்ணமே ஈழ பிரச்னை தான் என்றுமே சுதந்திர தமிழ் ஈழம் கிடைக்கும் வரை ஈழத்தின் மீதான கவனம் சிதறாது . நன்றி

Anonymous said...

தமிழ்நாடு எக்ஸிட் போல் அதிமுக அணிக்கு ஆப்பு அடிக்கிறதே நண்பர்.

Suresh Kumar said...

பெயரில்லா கூறியது...
தமிழ்நாடு எக்ஸிட் போல் அதிமுக அணிக்கு ஆப்பு அடிக்கிறதே நண்பர்.//////////

16 தேதி தானே நண்பா தெரியும் யாருக்கு ஆப்புன்னு

Anonymous said...

16ந்தேதி அதிமுகவுக்கு ஆப்பு சொருகபட்டால் நீங்கள் தலைமறைவு ஆகிடுவீங்களா நண்பா.

Suresh Kumar said...

பெயரில்லா கூறியது...
16ந்தேதி அதிமுகவுக்கு ஆப்பு சொருகபட்டால் நீங்கள் தலைமறைவு ஆகிடுவீங்களா நண்பா.//////////

ஏன் புடிச்சு உள்ள போட்டுருவாங்களோ ?

Suresh Kumar said...

பெயரில்லா கூறியது...
16ந்தேதி அதிமுகவுக்கு ஆப்பு சொருகபட்டால் நீங்கள் தலைமறைவு ஆகிடுவீங்களா நண்பா ////////////

நீங்க ஏன் இப்பவே தலை மறைவா இருக்கீங்க நண்பரே (பெயரில்லா )

மதிபாலா said...

என்ன தலைவரே அதுக்குள்ள புலம்ப ஆரம்பிச்சிட்டீங்க போல இருக்கு.

டெம்ப்ளேட் சூப்பர்.

Suresh Kumar said...

மதிபாலா கூறியது...
என்ன தலைவரே அதுக்குள்ள புலம்ப ஆரம்பிச்சிட்டீங்க போல இருக்கு.//////////////

எக்சிட் போலில் கிடைக்கும் பூஸ்ட் எண்ணும் பொது மாறலாம் அல்லவா ?அதற்காக இரண்டு பக்கம் யாராக இருந்தாலும் அதுக்கு தயாராக வேண்டுமல்லவா ?

டெம்ப்ளேட் சூப்பர்.///////////

நன்றி மதிபாலா அண்ணே நம்ம பக்கம் பல நாட்களுக்கு பிறகு வந்திருக்கிறீங்க

Post a Comment

Send your Status to your Facebook