Wednesday

திமுக ஆட்சியில் பேருந்து கட்டணம் கூடவேயில்லை நம்புங்கப்பு

ஒரே பொய்யை பலமுறை சொல்லி அதையே சட்டமன்ற அவை புத்தகத்திலும் பதிய வைப்பதில் திமுக மந்திரிகள்  யாருமே சளைத்தவர்கள் இல்லை . இன்று நடந்த போக்குவரத்து மானிய துறை மீதான விவாதத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் கே . என் . நேரு மீண்டும் மீண்டும் சத்திய பிரமாணம் எடுத்து கொள்வது போல் பேருந்து கட்டணத்தை உயர்த்த வில்லை என சொல்லுகிறார் .



சரி ஏதோ பணத்தை வாங்கி ஒட்டு போட்டோம் என்பதற்காக இந்த பொய்ய எல்லாம் சகிக்கணுமா அப்படீன்னு கொஞ்சமாவது மானம் ரோசம் உள்ளவர்களால் கேட்கிறார்கள்  . கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி வந்தவுடனே பேருந்து கட்டணத்தை உயர்த்த வில்லை இப்படியே சொல்லி சொல்லி ஏமாற்றி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது .

பேருந்திற்கு வண்ணம் பூசி மறைமுகமாக டிக்கெட் விலையை அதிக படியாக கூட்டியது திமுக அரசு . சிவப்பு வண்ணத்திற்கு 4 ருபாய் கூட்டினார்கள் என்றால் பச்சை வண்ணத்திற்கு 5 ருபாய் என பேருந்து கட்டணத்தை மறைமுகமாக ராக்கெட் வேகத்திற்கு உயர்த்தியது  . பல முறை எதிர் கட்சிகள் சொல்லி காட்டி போராட்டத்தை நடத்தினால் தவறான தகவல் பரப்புபவர்கள் மீது கடுமையான சட்டம் பாயும் எனவும் மிரட்டியது .  கேட்டால் நாங்கள் டிக்கெட் விலையை கூட்டவே  இல்லை என்பார்கள் .

கடந்த ஆட்சி கடைசி கட்டத்தில் நாகர் கோவிலிலிருந்து சென்னைக்கு 260 ருபாய்  மட்டுமே . ஆனால் இப்போது 450 ரூபாய்க்கு குறைந்த பேருந்து கிடையாது . அப்படியென்றால் எவ்வளவு ருபாய் கூடியிருக்கிறது என்பதை நீங்களே பார்த்து கொள்ளுங்கள் . இப்படி ஒவ்வெரு வழி தடங்களிலும் கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள் . நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் விழித்து கொள்வார்களோ என பயந்து கூட்டிய கட்டணங்களை எந்த ஒரு முன்னறிவிப்பின்றி குறைத்தார்கள் . அப்போதும் இதே கே . என் . நேரு நாங்க டிக்கெட் கட்டணத்தை குறைக்கவில்லை என்றால்  . தேர்தல் கமிசன் தலைமை செயலாளரை கூப்பிட்டு கண்டித்த பின்னர் குறைத்த கட்டணத்தை ரத்து செய்தார்கள் .

இப்போது தேர்தல் முடிவடைந்து விட்டது இப்போ தேர்தல் கமிசன் தலையிட முடியாது உங்கள் விருப்பத்திற்கு கட்டணத்தை குறைக்கலாம் என்றால் மீண்டும் பொய் சொல்லுகிறார்கள் நாங்கள் கட்டணத்தை உயர்த்தவே இல்லை என்று நம்புக்கப்பு . 

2 கருத்துக்கள்:

ஆ.ஞானசேகரன் said...

//சரி ஏதோ பணத்தை வாங்கி ஒட்டு போட்டோம் என்பதற்காக இந்த பொய்ய எல்லாம் சகிக்கணுமா அப்படீன்னு கொஞ்சமாவது மானம் ரோசம் உள்ளவர்களால் கேட்கிறார்கள் //

யாருப்பா அந்த ரோசமானவங்க

Suresh Kumar said...

ஆ.ஞானசேகரன் said...

//சரி ஏதோ பணத்தை வாங்கி ஒட்டு போட்டோம் என்பதற்காக இந்த பொய்ய எல்லாம் சகிக்கணுமா அப்படீன்னு கொஞ்சமாவது மானம் ரோசம் உள்ளவர்களால் கேட்கிறார்கள் //

யாருப்பா அந்த ரோசமானவங்க ////////////

யாருமே இல்லைன்னு சொல்ல வாறீங்க அப்படி தானே என கொடுமை பார்த்தீங்களா ?

Post a Comment

Send your Status to your Facebook