Sunday

தமிழக விவசாயிகளை காப்பாற்றிய தென் மேற்கு பருவ மழை

கடந்த 25 ஆண்டுகளாக கர்நாடகத்திற்கும் தமிழகத்திற்கும் காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக பிரச்சனை . ஒவ்வெரு கட்சியும் ஆட்சிக்கு வரும் போது தங்களின் சுயநலத்திற்காக காவிரியையும் தமிழக விவசாயிகளின் வால்வாதாரதிலும் அரசியல் செய்வார்கள் . இதுவே கடந்த காலமாக நடந்து வருகிறது . இந்திய பாகிஸ்தான் சண்டையை விட இது மிக பெரிய சண்டையாக இருந்து வருகிறது . உச்ச நீதி மன்றம் , காவிரி நதி நீர் ஆணையம் போன்ற அமைப்புகள் தமிழர்களுக்கு நியாயமாக சேர வேண்டிய தண்ணீரை கொடுக்க வேண்டும் என தீர்ப்பளித்தாலும் கர்நாடக அரசு கொடுப்பதாக இல்லை . இதனால் ஒவ்வெரு ஆண்டும் காவிரி பிரச்சனை எழும்பி கொண்டிருக்கும் .

தமிழகத்திற்கு கர்நாடக மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான கேரளா , ஆந்திர வாலும் தண்ணீரால் பிரச்சனைகள் தான் . ஆந்திரா அரசு பாலாற்றின் குறுக்கே ஆணை கட்ட முயற்சிக்கிறது . கேரளா காலம் காலமாக பயன் படுத்தி வந்த முல்லை பெரியாறு அணையை பலமிளந்ததாக புரளியை கிளப்பி புதிய அணை கட்ட போகிறதாம் .

அனைத்து அண்டை மாநிலத்து தண்ணீர் பிரச்சனையிலும் உச்சநீதி மன்றம் தமிழ் நாட்டிற்கு ஆதரவாக தீர்ப்பளித்தாலும் அந்ததந்த மாநிலங்கள் நீதிமன்ற தீர்ப்பையே ஒரு பொருட்டாக மதிப்பதில்லை . ஏதோ எப்போதும் அரசியல் பண்ண அரசியல் வாதிகளுக்கு மேட்டர் கிடைக்குது . என்னவோ தெரியவில்லை மத்திய அரசை மிரட்டி தங்கள் தேவைகளை முடிக்கும் ஆட்சியாளர்களால் மக்கள் பிரச்சனை முடிக்க முடியவில்லை .

இந்த ஆண்டில் தென் மேற்கு பருவ மழை கேரளா மற்றும் கர்நாடகத்தில் கடந்த பத்து நாட்களாக பெய்து வருகிறது . பொதுவாகவே ஒவ்வெரு ஆண்டும் கர்நாடக அரசு உபரி தண்ணீரை மட்டுமே அனுப்பி வந்தது .கடும் மழையின் காரணமாக கர்நாடக காவிரி ஆற்றில் தண்ணீரை திறந்து விட்டிருக்கிறது . இதையடுத்து மேட்டூர் அணையும் வேகமாக நிரம்பி வருகிறது . இன்னும் சில தினங்களில் மேட்டூர் அணை விவசாயத்திற்கு திறந்து விட படும் என அறிவிக்க பட்டுள்ளது .

ஆண்டு தோறும் பருவமழை தவறாது பெய்தால் தண்ணீருக்கும் பஞ்சம் வராது மாநிலத்திற்கு மாநிலம் பிரச்சனை வராது . அரசியல் வாதிகளும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வைத்து அரசியல் செய்ய மாட்டார்கள் .

4 கருத்துக்கள்:

ஆ.ஞானசேகரன் said...

//அனைத்து அண்டை மாநிலத்து தண்ணீர் பிரச்சனையிலும் உச்சநீதி மன்றம் தமிழ் நாட்டிற்கு ஆதரவாக தீர்ப்பளித்தாலும் அந்ததந்த மாநிலங்கள் நீதிமன்ற தீர்ப்பையே ஒரு பொருட்டாக மதிப்பதில்லை .//

இங்குதான் சட்டங்கள் மதிக்கப்படுகின்றது. என்ன கொடுமை சார் இது,

ஆ.ஞானசேகரன் said...

தண்ணீரை சேமிக்க ஏன் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் இன்றுவரை தெரியவில்லை

Suresh Kumar said...

ஆ.ஞானசேகரன் on July 19, 2009 5:31 PM said...

//அனைத்து அண்டை மாநிலத்து தண்ணீர் பிரச்சனையிலும் உச்சநீதி மன்றம் தமிழ் நாட்டிற்கு ஆதரவாக தீர்ப்பளித்தாலும் அந்ததந்த மாநிலங்கள் நீதிமன்ற தீர்ப்பையே ஒரு பொருட்டாக மதிப்பதில்லை .//

இங்குதான் சட்டங்கள் மதிக்கப்படுகின்றது. என்ன கொடுமை சார் இது,///////////////////////////////

இறையாண்மை உள்ள நாட்டில இதெல்லாம் சகஜம்

Suresh Kumar said...

ஆ.ஞானசேகரன் said...

தண்ணீரை சேமிக்க ஏன் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் இன்றுவரை தெரியவில்லை .///////////////////////////////////

அரசியல் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் தொலை நோக்கு திட்டங்கள் எப்படி வரும் ஆட்சியாளர்களின் மூளைக்கு .

நன்றி நண்பா

Post a Comment

Send your Status to your Facebook