Monday

தோழர்களுக்கு ஓர் அன்பு அழைப்பு ! வாருங்கள் தோழர்களே

வருகின்ற ஆவணி திங்கள் 3 - ஆம் நாள் ( 19-08-2010 வியாழக்கிழமை ) குமரி மாவட்டம் தக்கலை அருகே முட்டைகாடு C.S.I சபையில் வைத்து எனக்கு திருமணம் நடைபெறவுள்ளது. அதற்கு பின்னர் காலை 11 மணியளவில் முட்டைகாடு பத்மம் திருமண மண்டபத்தில் உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவரும் தமிழர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவருமான தமிழின போராளி வைகோ அவர்கள் பங்கேற்கும் வாழ்த்தரங்க நிகழ்ச்சியும் நடைபெறவிருக்கிறது .

மேற்கண்ட நிகழ்ச்சியில் பதிவுலக நண்பரகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்போடு கேட்டுக்கொள்கிறேன் . இதுவரை ஒரு சில பதிவர்களை தவிர வேறு யாரையும் நேரில் சந்த்தித்திராத நிலையில் உங்களை நேரில் சந்திக்க இதை ஒரு வாய்ப்பாக கருதி உரிமையோடு அழைக்கிறேன் .



மீண்டும் அழைக்கிறேன் வாருங்கள் தோழர்களை . மின்னஞ்சலில் அழைப்பிதழ் பெறாதவர்கள் இதையே அழைப்பிதழாக நினைத்து பங்குபெற கேட்டு கொள்கிறேன் . அன்புடன் உங்கள் வரவை எதிர்பார்க்கும் சுரேஷ் குமார்

4 கருத்துக்கள்:

Menaga Sathia said...

அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள் சுரேஷ்!!...இல்லறம் சிறக்க என்றும் துணையோடு இனித்திருக்க வாழ்த்துக்கள்!!

Mugundan | முகுந்தன் said...

சுரேசு,

தங்களின் இல்வாழ்க்கை ஆரம்ப அழைப்பிதழ் கண்டேன்.

விழாவும்,இல்வாழ்வும் சிறக்க வாழ்த்துகள்.

அன்புடன்,
முகு, கடலூர்

வால்பையன் said...

அட்வான்ஸ் வாழ்த்துக்கள் தல!

sakthivel said...

வாழ்த்துகள் சுரேஷ். இல்லறம் இனிதாக அமைய வாழ்த்துகள்.

Post a Comment

Send your Status to your Facebook