Saturday

தமிழகம் சிறையிலிருந்து விடுபடுமா ?

தமிழகத்தில் இரண்டு முதல்வர்கள், இருவருமே சிறைக்குள் இருக்கிறார்கள் என்பது போன்று விமர்சனங்கள்,  கிண்டல்கள்  சமூக உடகங்களில் வந்த வண்ணம் உள்ளன.  

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா சிறை சென்ற  நாள் முதலே தமிழக அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை. நான்கு ஆண்டுகளும் நூறு கோடி ருபாய் அபராதமாக தண்டனை விதிக்க பட்ட காரணத்தால் அந்த நேரம் முதலே சட்ட மன்ற உறுப்பினர் , முதல்வர் பதவியை ஜெயலலிதா துறக்க வேண்டிய கட்டயாம் ஏற்பட்டது.  

இதையடுத்து புதிய முதல்வர் பொறுப்பேற்க வேண்டிய சூழல் உருவானது. இந்நிலையில் அம்மாவின் நம்பிக்கையான அடிமை தமிழக முதல்வரானார். சினிமாவை மிஞ்சும் அழுகை காட்சிகளோடு பதவியேற்ற முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் தாடியோடு வளம் வந்து கொண்டிருக்கின்றன.  

ஆனால் இன்றும் தமிழகத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலை உருவாகி உள்ளது. அரசு நிர்வாகம் செயலிழந்து காணப்படுகிறது. தமிழக முதல்வர்   பதவி பறி போன ஜெயலலிதாவை ஜெயா டிவி மூலமாக மக்களின் முதல்வர் என்று அழைக்க துவங்கினர். அதிமுக அடிமைகள் மட்டுமல்லாது சில்லறை கட்சிகளாக இருக்கும் வேல்முருகன் போன்றோர்கள் கூட இந்த அளவிற்கு ஒரு ஊழல் குற்றவாளிக்கு ஆதரவாக செயல் படுவது அனைவர் முகத்தையும் சுளிக்க செய்தது..  

பன்னீர் செல்வம் முதல்வரானதும் அம்மாவின் ஆணைகினங்க பால் விலை உயர்த்த பட்டது . இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மதிமுக சார்பில் வைகோ தலைமையில் ஆவின்  பால் விலையுயர்வை கண்டித்தும் , அப்பாவி தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்ததை கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டத்தில் வைகோ பேசும் போது  "தமிழகத்தில் இரண்டு முதல்வர்கள்; உள்ளனர். ஒருவர் நீதிமன்றத்தால் சிறை தண்டனை விதிக்கப்பட்டு  தற்காலிக ஜாமீனில் வீட்டு சிறையில் உள்ளார் . இன்னொருவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிறையில் இருக்கிறார் " என்றார்..  

வைகோவின் இந்த பேச்சு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் சிறையிலிருந்து விடுபடுமா ? 

0 கருத்துக்கள்:

Post a Comment

Send your Status to your Facebook