• பேய், பிசாசு உடம்பினுள்...

    இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....

  • உங்கள் மேல் எதற்கு ...

    தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் ...

  • யூத் புல் விகடனில் ...

    யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் ...

Showing posts with label கலைஞர் குடும்பம். Show all posts
Showing posts with label கலைஞர் குடும்பம். Show all posts

Friday

உலக ஆளுங்கட்சி தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக

கலைஞர் டிவி அலுவலகத்தில் நேற்று இரவு முதலே சிபிஐ சோதனை நடந்து வருகிறது.  2 G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில்   ஒரு லட்சத்தி எழுபத்தாறு கோடி ருபாய் ஊழல் நடந்துள்ளது நூறு கோடி மக்கள் மத்தியிலும் மிக பெரிய அதிர்ச்சி அலையை உருவாக்கி இருக்கிறது. தமிழ் நாட்டிற்கு இரண்டு ஆண்டுகள் பட்ஜெட் போடகூடிய பணம் ஊழல் செய்ய பட்டுள்ளது என்றால் யாருக்கு தான் அதிர்ச்சி உருவாகாது. 

தமிழ் தொலை காட்சிகள் பொதுவாகவே உலக வரலாற்றில் முதன் முறையாக  என்ற வார்த்தைகளை புதிய படங்கள் ஒளிபரப்பும் பொது பயன்   படுத்தும். அதே போல இந்த ஊழலும் உலக வரலாற்றில் முதன் முறையாக ஒரு தமிழனால் செய்யபட்டிருக்கு என்னும் போது வெட்க படாமல் வேறு என்ன செய்ய. மிக பெரிய கோடீஸ்வரர்களால் கூட இரண்டு மாதங்களில்  உருவாக்க முடியாத தொலைக்காட்சி சேனலை இருபது நாட்களில் கருணாநிதி கலைஞர் டிவி என்று உருவாக்கிய போது எல்லோரும் ஆச்சரிய பட்டார்கள்.  அதை தொடர்ந்து பல சேனல்கள் உருவாக்க பட்டு அனைவரையையும் ஆச்சச்சரியத்தில் ஆழ்த்தியது கலைஞர் டிவி நிர்வாகம் . 
வேறு எந்த வித வருமானமும் இல்லாத கருணாநிதி , கனிமொழி , தயாளு அம்மாள் ஆகியோரால் இத்தனை கோடி பணம் எங்கிருந்து வந்தது? இப்போது தான் ஒவ்வென்றாக வெளிச்சத்திற்கு வருகிறது. இந்தியாவை கொள்ளையடித்து மிக பெரிய ஊழலுக்கு எல்லாம் சவால் விட்டு இமாலய ஊழல் செய்து கலைஞர் டிவி உருவாக்க பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாது இன்னும் பல கோடி ஊழல் பணம் இந்த குடுமத்தில் அங்காங்கே இருக்கும்.  

சோனியா தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2004  பதவி ஏற்றது முதலே இந்தியா முழுவதும் ஊழல் செய்யும் வழியை ஒவ்வெரு அமைச்சராக தேடி பிடித்தனர். ராஜா ஊழல் செய்துள்ள இதே துறையில் முதலில் அமைச்சராக இருந்த முரசொலி மாறனின் மகனும் கருணாநிதியின் பேரனுமாகிய தயாநிதி மாறன் செய்த ஊழல்கள் இன்னும் விசாரிக்க படவில்லை . காங்கிரஸ் கட்சியும் தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பது போல ஆதர்ஷ் ஊழல் , காமன் வெல்த் ஊழல் , இஸ்ரோ ஊழல் என்று பல ஊழல்களை செய்து மக்களை திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறது. 

இந்த வலக்கை எப்படியெல்லாம் மூடிவிடலாம் என காங்கிரஸ் கட்சி திட்டமிட்டது. ஆனால் எதிர்கட்சிகளின் நெருக்குதலாலும் , உச்சநீதிமனற்றத்தின் உத்தரவுகளாலும் விசாரிக்க வேண்டிய நிலைக்கு சிபிஐ தள்ள பட்டுள்ளது. ஒரு ஆளுங்கட்சி தொலை காட்சி சிபிஐ    விசாரணைக்கு உள்ளாவது இதுவே முதன் முறை என்றே நினைக்கிறேன். இத்தனை கேவலங்களை தாண்டி எந்த முகத்தில் திமுக மக்கள் மத்தியில் வாக்கு கேட்கும் . காங்கிரஸ் கட்சியும் ஊழல் கட்சி தான். திருவாளர் பரிசுத்தம் என்று தன்னை காட்டி கொண்ட சோனியா இப்போது காங்கிரஸ் கட்சியினர் செய்யும் ஊழலால் தலை குனிந்து நிற்கிறார். இந்த இரண்டு ஊழல் கட்சிகளுக்கும் மக்கள் சாட்டையடி கொடுப்பது நிச்சயம். 

ஊழல் பணத்தில் உருவாக்கிய கலைஞர் டிவியை தடை செய்து அதை அரசாங்கம் கைப்பற்ற வேண்டும். மக்கள் காறி துப்ப தொடக்கி விட்டார்கள் கலைஞர் அவர்களே உங்கள் முகத்தில் படுவதற்குள் நீங்களாகவே பதவியை விட்டு இரங்கி செல்வது நல்லது. 


சோனியா காந்தியால் ஈழத்திலே கொல்ல பட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின்  ஆவி தான் அதற்கு துணை நின்ற தமிழின துரோகி கருணாநிதியை ஆட்டுவிக்கின்றதோ ?
Read More

பாட்ஷா பட ஸ்டைலில் கருணாநிதி

தமிழகத்தின் துணை முதல்வராக கருணாநிதியின் இளைய மகன் ஸ்டாலின் நியமிக்க பட்டுள்ளார் . இன்னொரு மகன் மற்றும் பேரன் மத்திய மந்திரி ஆகி விட்டார்கள்  .இனி கனி மொழி மட்டும் தான் மந்திரி ஆக வேண்டியதில பாக்கி . இருந்தாலும் அவங்க எம்பி ஆகிட்டாங்க .

தமிழக முதலமைச்சர் கருணாநிதி
தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் ( கருணாநிதி மகன் )
மத்திய ஜவுளி துறை அமைச்சர் தயாநிதி மாறன் ( கருணாநிதியின் பேரன் )
மத்திய உரம் மற்றும் ரசாயன துறை அமைச்சர் அழகிரி ( கருணாநிதியின் இன்னொரு மகன் )
மேல்சபை எம்பி கனி மொழி ( கருணாநிதியின் இன்னொரு மனைவியின் மன்னிக்கவும் துணைவியாரின் மகள் )

பாட்ஷா படத்தில ரஜினி  தன் தந்தையின் இறுதி ஆசைக்கு இணங்க தம்பி தங்கைகளை நல்ல நிலையில் கொண்டு வந்து ஒவ்வெரு விளக்காக பற்ற வைப்பார் . அது தான் நினைவுக்கு வருகிறது கருணாநிதி குடும்ப உறுப்பினர்களுக்கு பதவி கொடுப்பது .

ஆரிய திராவிட போராட்டம் மீண்டும் துவங்க வேண்டும் என்று கருணாநிதி சொன்னது எதற்கு என்பது இப்ப தான் தெரியுது . பழைய காலங்களில் பார்பனர்கள் திராவிடர்களை அடிமையாக்கி வைத்து கொண்டதை போல் இப்போது கருணாநிதி உடன்பிறப்புகளை அடிமையாக்கி கொண்டார் . இனி உடன்பிறப்புகள் காலம் காலமாக கருணாநிதியின் குடும்பத்துக்கு உழைத்து கொடுக்க வேண்டியது தான்  .

நாயை கொண்டு நடுகடலில் விட்டாலும் அது நக்கி தான் தண்ணி குடிக்குமாம் அதை சரியாக புரிந்து கொண்டவர் தான் கருணாநிதி .


Read More

Send your Status to your Facebook