• பேய், பிசாசு உடம்பினுள்...

    இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....

  • உங்கள் மேல் எதற்கு ...

    தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் ...

  • யூத் புல் விகடனில் ...

    யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் ...

Showing posts with label கேரளம். Show all posts
Showing posts with label கேரளம். Show all posts

Wednesday

பதவி, பணம் தவிர மாற்ற அனைத்து நலன்களுக்கும் கேரளாவிற்கு தான் முன்னுரிமையா ?


இந்தியாவை ஆளுகிற மாநிலம் எது என்ற எண்ணம் ஏற்படுகிறது என கருணாநிதி கோபமாக ஓர் அறிக்கையை விட்டிருக்கிறார் . முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு கேரளா மாநிலத்திற்கு சாதகமாக நடப்பதாக சொல்லி இப்படி ஒரு அறிக்கையை விட்டிருக்கிறார் .

எதிர் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் முன்னரே எச்சரித்தும் அலட்சியமாக இருந்து விட்டு நிலைமை கிளைமாக்ஸ் கட்டத்திற்கு செல்லும் போது தூக்கத்தை கலைத்திருக்கிறார் . தமிழக அரசோ மத்திய அரசில் பதவி வாங்குவதிலும் அதன் மூலம் பணம் சம்பாதிப்பதிலும் குறியாக இருக்கும் போது கேரள அரசோ மத்திய அரசின் மூலமாக கேரளா மாநிலத்திற்கு என்ன வேண்டுமோ அதை சாதிக்கிறார்கள் . கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டிற்கு சாதகமாக இருந்த நிலை மாறி இப்போது கேரளா மாநில அரசுக்கு சாதகமாக மாறிய நிலை ஏற்படுகிறது .

கேரள அரசு புதிய அணை கட்டியே தீருவோம் என உறுதியாக இருக்கிறது சர்வே பணிகள் பெரும்பாலும் முடிவடைந்து விட்டதாக தெரிகிறது . இத்தனை காலமும் தமிழக அரசு என்ன செய்து கொண்டிருந்தது . முதலமைச்சருக்கு தான் வயதாகி விட்டது என்றாலும் அதிகார்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் , துணை முதல்வர் என்ன செய்து கொண்டிருக்கிறார் ? இப்படி பல கேள்விகள் எழுகின்றன .

பிரச்சனை நடக்கும் இடத்தில் காவல் துறை எல்லாம் முடிந்த பின்னர் வருவது போல் தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது . கேரள மாநில அரசை நடத்தும் கட்சியோ மத்திய அரசில் எந்த பதவியும் வகிக்க வில்லை காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவும் அழைக்க வில்லை ஆனால் அவர்கள் தேவை பூர்த்தியாகிறது . ஆனால் தமிழக திமுகவோ மத்திய காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கிறது . மத்திய அரசில் பங்கு வகிக்கிறது . ஆனால் நம் உரிமைகள் பறிபோகிறது .

கேரள மாநில அதிகாரிகள் மத்திய அரசை ஆட்டிவிக்கின்றனர் என்பது எல்லோரும் அறிந்ததே ஆனால் அது நமது கையாலாகாத தனம் தானே தவிர வேறொன்றுமில்லை . கேரள அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி தான் ஈழத்திலே இரண்டு லட்சம் மக்கள் சாவதற்கு இந்தியாவும் தமிழகமும் காரணமானது . அந்த நேரத்தில் சோனியாவும் , பதவியும் முக்கியம் என்று மௌநியாவே இருந்தோம் . அப்படி தமிழனுக்கு சூடு சொரணை இல்லை என்பதை தெரிந்து தானே மத்திய அரசு தமிழனுக்கு எதிராக மீண்டும் ஒரு துரோகம் செய்திருக்கிறது . பதவி வாங்க சட்டையை பிடித்த நாம் ஏன் உரிமைக்காக சட்டையை பிடிக்க முடியவில்லை இதை சிந்தியுங்கள் , மற்றும் நமது கையாலாகாத தனத்தையும் சிந்தியுங்கள் தமிழின உரிமை பறிபோகாது .


Read More

Send your Status to your Facebook