இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Showing posts with label தமிழர். Show all posts
Showing posts with label தமிழர். Show all posts
Friday
தமிழர்களின் தன்னிகரற்ற தலைவனுக்கு இன்று பிறந்த நாள்
எழுதியது
Suresh Kumar
Labels:
உலக தமிழர்கள்,
தமிழர்,
தமிழ் ஈழம்,
மாவீரன் பிரபாகரன்
எழுதிய நேரம்
Friday, November 26, 2010
தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசின் காட்டுமிராண்டி தனமான இன படுகொலைகளை கண்டு தன் சிறு வயதிலிருந்து ஆயுதமேந்தி சிங்கள இனவெறி அரசுகளை ஒவ்வெரு கட்டத்திலும் எதிர் கொண்டு வீர தமிழர்களை எதிரியின் கோட்டையில் சென்று தாக்கும் புலி படைகளை உருவாக்கியவன். துயருற்ற தமிழர்கள் ஒடுங்கி கிடந்த நேரத்தில் புயலாய் புறப்பட்ட வீர தமிழன். ஒவ்வெரு கால வரலாற்றிலும் ஒவ்வெரு சிறுபான்மை இனத்தை பெரும்பான்மை இனங்கள் அடக்கி ஒடுக்கி அவர்கள் மீது போர் தொடுத்து கொண்டே வந்திருக்கின்றன . அந்த அதில் ஒரு தலைவன் தோன்றி அந்த மக்களை மீட்பதை வரலாற்றில் படித்திருக்கின்றோம் . அந்த வரலாறை நாம் நிகழ் காலத்தில் தமிழர்கள் வாழ்வில் எற்பட்ட்த்தை கண்டு கொண்டிருக்கிறோம் .
ஒவ்வெரு கால கட்டத்திலும் காட்டி கொடுப்புகள் துரோகங்கள் இருந்தது போல் நம் இந்த காலகட்டங்களிலும் துரோகங்களின் மத்தியில் தான் தமிழினம் போராடி கொண்டிருக்கிறது . ஒவ்வெரு போராட்டங்களிலும் ஒரு சில நாடுகள் உதவி புரிந்திருக்கிறது . ஆனால் தமிழ் ஈழ போராட்டத்தில் மட்டும் தான் உலக நாடுகள் அனைத்துமே சிங்கள இனவெறிக்கு ஆதரவாக செயல் பட்டு கொண்டிருக்கிறது . எந்த உலக நாடுகளின் உதவியும் இல்லாமல் உலக வரலாற்றில் முப்படைகளையும் கொண்ட ஓர் விடுதலை போராட்ட அமைப்பு என்றால் அது தமிழ் ஈழ விடுதலை புலிகள் தான் . தமிழர்களை உலகமே ஆச்சரியத்தோடு பார்க்க, தமிழர்களின் பெருமையை உலகம் முழுமைக்கும் கொண்டு சென்ற பெருமை மாவீரன் பிரபாகரனையே சாரும் .
இந்திய ராணுவத்திற்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் நடை பெற்ற போரில் தலைமை இந்திய ராணுவ தலைமை தளபதி எழுதிய புத்தகத்தில் பிரபாகரன் மட்டும் இந்திய ராணுவத்திற்கு தலைமை தளபதியாக இருந்தால் உலகத்திலே இந்திய ராணுவம் தான் மிக பெரிய ராணுவமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார் .ஒரு மிக பெரிய நாட்டின் ராணுவ தளபதியே வியக்கும் வண்ணம் விடுதலை ரானுவத்தையை கட்டமைத்த பெருமை ஒரு தமிழனுக்கு சார்ந்தது.
தமிழ் ஈழ தமிழர்களை மட்டுமல்லாது உலக தமிழர்களை தன்மானத்தோடு வாழ வைத்து, உலக தமிழர்களின் பெருமையை உலகுக்கு உணர்த்திய தமிழ் தலைவன் மாவீரன் பிரபாகரனுக்கு இன்று பிறந்த நாள். இன்று பிறந்த நாள் காணும் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம் நாங்கள் .
Sunday
தமிழ் புத்தாண்டும் அரசின் குழப்பமும்
தை ஒன்றாம் தேதி (பொங்கல் திருநாள் ) அன்று தமிழ் புத்தாண்டு என்று உத்தரவு பிறப்பித்த கலைஞர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் . தமிழர் திருநாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்த பின்னர் எதற்கு வடமொழி வருடத்தின் பெயர்.
காலம் காலமாக நம் மீது ஆட்சி செய்தவர்கள் விட்டு சென்ற பழக்கவழக்கங்களை நம் கலாச்சாரம் என நினைத்து பல ஆண்டுகள் கொண்டாடினோம். இப்போதும் கொண்டாடி வருகிறோம். "கல் தோன்றா மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி தமிழ் குடி" என்ற பெருமைக்குரிய தமிழர்கென்றுஒரு தனி கலாசாரம் இல்லையா என்ற கேள்வி எழும் போது வரும் விடைகள் தான் . நம்முடைய கலாச்சாரங்களில் நம்மை ஆதிக்கம் செலுத்தியவர்கள் உருவாக்கிய கலப்படம்.
நம் நடைமுறையில் இருந்த தமிழ் வருட பிறப்பு அறுபது வருடங்கள் சுழற்சி முறையில் வருகிறது. அந்த அறுபது வருடங்களில் ஒரு வருடத்தின் பெயர் கூட தமிழில் இல்லை. மேலும் இந்த அறுபது ஆண்டு முறையைப் புகுத்திய ஆரியத்தின் விளக்கமும் மிகுந்த ஆபாசம் நிறைந்த பொருள் கொண்டதாகும். அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ம் பக்கத்தில்
கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.
“ஒருமுறை நாரதமுனிவர், கிருஷ்ணமூர்த்தியை ‘நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு கன்னிகையாவது தரலாகாதா?’ என்று கேட்டார். அதற்குக் கண்ணன், ‘நான் இல்லாத பெண்ணை வரிக்க’ என்றான். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதினாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கண்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கண்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு அவரை நோக்கி ‘நான் தேவரீரிடம் பெண்ணாக இருந்து ரமிக்க எண்ணம் கொண்டேன்’ என்றார். கண்ணன் நாரதரை யமுனையில் ஸ்நானம் செய்ய ஏவ, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். இவருடன் கண்ணன் அறுபது வருடம் கூடி, அறுபது குமாரர்களைப் பெற்றார். அவர்கள் ‘பிரபவ முதல் அட்சய’ இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமாகும் பதம் பெற்றார்கள்.”
இப்போது நாம் கூறி வருகிற வருட பிறப்பு என்பது கூட தவறு புத்தாண்டு என்பது தான் சரியானது. இந்த நிலையில் தான் தமிழக அரசு அடுத்த ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்களை அறிவித்து இருக்கிறது. அதில் பொங்கல் தினத்தில் தமிழ் புத்தாண்டையும் சேர்த்து அறிவித்திருக்கிறது. அந்த அறிவிப்பு வெளியிட்ட நாளை குறிப்பதற்கு சர்வதாரி என்ற சமஸ்கிரத ஆண்டின் பெயரை போட்டதுஅரசின் குழப்பத்தை காட்டுகிறதா? இல்லை அதிகாரிகள் அதை தமிழ் ஆண்டின் பெயர் என்று நினைத்து விட்டார்களா ?
இதை சரி செய்யாத பட்சத்தில் மீண்டும் மக்களுக்கு தமிழ் புத்தாண்டு பற்றிய குழப்பம் இருந்து கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை தமிழா தை முதல் தேதி உன் புத்தாண்டு சித்திரையல்ல . புத்தாண்டு பிறக்கட்டும் புதுவாழ்வு மலரட்டும்
Read More
காலம் காலமாக நம் மீது ஆட்சி செய்தவர்கள் விட்டு சென்ற பழக்கவழக்கங்களை நம் கலாச்சாரம் என நினைத்து பல ஆண்டுகள் கொண்டாடினோம். இப்போதும் கொண்டாடி வருகிறோம். "கல் தோன்றா மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி தமிழ் குடி" என்ற பெருமைக்குரிய தமிழர்கென்றுஒரு தனி கலாசாரம் இல்லையா என்ற கேள்வி எழும் போது வரும் விடைகள் தான் . நம்முடைய கலாச்சாரங்களில் நம்மை ஆதிக்கம் செலுத்தியவர்கள் உருவாக்கிய கலப்படம்.
நம் நடைமுறையில் இருந்த தமிழ் வருட பிறப்பு அறுபது வருடங்கள் சுழற்சி முறையில் வருகிறது. அந்த அறுபது வருடங்களில் ஒரு வருடத்தின் பெயர் கூட தமிழில் இல்லை. மேலும் இந்த அறுபது ஆண்டு முறையைப் புகுத்திய ஆரியத்தின் விளக்கமும் மிகுந்த ஆபாசம் நிறைந்த பொருள் கொண்டதாகும். அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ம் பக்கத்தில்
கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.
“ஒருமுறை நாரதமுனிவர், கிருஷ்ணமூர்த்தியை ‘நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு கன்னிகையாவது தரலாகாதா?’ என்று கேட்டார். அதற்குக் கண்ணன், ‘நான் இல்லாத பெண்ணை வரிக்க’ என்றான். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதினாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கண்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கண்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு அவரை நோக்கி ‘நான் தேவரீரிடம் பெண்ணாக இருந்து ரமிக்க எண்ணம் கொண்டேன்’ என்றார். கண்ணன் நாரதரை யமுனையில் ஸ்நானம் செய்ய ஏவ, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். இவருடன் கண்ணன் அறுபது வருடம் கூடி, அறுபது குமாரர்களைப் பெற்றார். அவர்கள் ‘பிரபவ முதல் அட்சய’ இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமாகும் பதம் பெற்றார்கள்.”
இப்போது நாம் கூறி வருகிற வருட பிறப்பு என்பது கூட தவறு புத்தாண்டு என்பது தான் சரியானது. இந்த நிலையில் தான் தமிழக அரசு அடுத்த ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்களை அறிவித்து இருக்கிறது. அதில் பொங்கல் தினத்தில் தமிழ் புத்தாண்டையும் சேர்த்து அறிவித்திருக்கிறது. அந்த அறிவிப்பு வெளியிட்ட நாளை குறிப்பதற்கு சர்வதாரி என்ற சமஸ்கிரத ஆண்டின் பெயரை போட்டதுஅரசின் குழப்பத்தை காட்டுகிறதா? இல்லை அதிகாரிகள் அதை தமிழ் ஆண்டின் பெயர் என்று நினைத்து விட்டார்களா ?
இதை சரி செய்யாத பட்சத்தில் மீண்டும் மக்களுக்கு தமிழ் புத்தாண்டு பற்றிய குழப்பம் இருந்து கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை தமிழா தை முதல் தேதி உன் புத்தாண்டு சித்திரையல்ல . புத்தாண்டு பிறக்கட்டும் புதுவாழ்வு மலரட்டும்
Subscribe to:
Posts (Atom)
