இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Showing posts with label தமிழர் பண்பாடு. Show all posts
Showing posts with label தமிழர் பண்பாடு. Show all posts
Sunday
தமிழ் புத்தாண்டும் அரசின் குழப்பமும்
தை ஒன்றாம் தேதி (பொங்கல் திருநாள் ) அன்று தமிழ் புத்தாண்டு என்று உத்தரவு பிறப்பித்த கலைஞர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் . தமிழர் திருநாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்த பின்னர் எதற்கு வடமொழி வருடத்தின் பெயர்.
காலம் காலமாக நம் மீது ஆட்சி செய்தவர்கள் விட்டு சென்ற பழக்கவழக்கங்களை நம் கலாச்சாரம் என நினைத்து பல ஆண்டுகள் கொண்டாடினோம். இப்போதும் கொண்டாடி வருகிறோம். "கல் தோன்றா மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி தமிழ் குடி" என்ற பெருமைக்குரிய தமிழர்கென்றுஒரு தனி கலாசாரம் இல்லையா என்ற கேள்வி எழும் போது வரும் விடைகள் தான் . நம்முடைய கலாச்சாரங்களில் நம்மை ஆதிக்கம் செலுத்தியவர்கள் உருவாக்கிய கலப்படம்.
நம் நடைமுறையில் இருந்த தமிழ் வருட பிறப்பு அறுபது வருடங்கள் சுழற்சி முறையில் வருகிறது. அந்த அறுபது வருடங்களில் ஒரு வருடத்தின் பெயர் கூட தமிழில் இல்லை. மேலும் இந்த அறுபது ஆண்டு முறையைப் புகுத்திய ஆரியத்தின் விளக்கமும் மிகுந்த ஆபாசம் நிறைந்த பொருள் கொண்டதாகும். அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ம் பக்கத்தில்
கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.
“ஒருமுறை நாரதமுனிவர், கிருஷ்ணமூர்த்தியை ‘நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு கன்னிகையாவது தரலாகாதா?’ என்று கேட்டார். அதற்குக் கண்ணன், ‘நான் இல்லாத பெண்ணை வரிக்க’ என்றான். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதினாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கண்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கண்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு அவரை நோக்கி ‘நான் தேவரீரிடம் பெண்ணாக இருந்து ரமிக்க எண்ணம் கொண்டேன்’ என்றார். கண்ணன் நாரதரை யமுனையில் ஸ்நானம் செய்ய ஏவ, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். இவருடன் கண்ணன் அறுபது வருடம் கூடி, அறுபது குமாரர்களைப் பெற்றார். அவர்கள் ‘பிரபவ முதல் அட்சய’ இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமாகும் பதம் பெற்றார்கள்.”
இப்போது நாம் கூறி வருகிற வருட பிறப்பு என்பது கூட தவறு புத்தாண்டு என்பது தான் சரியானது. இந்த நிலையில் தான் தமிழக அரசு அடுத்த ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்களை அறிவித்து இருக்கிறது. அதில் பொங்கல் தினத்தில் தமிழ் புத்தாண்டையும் சேர்த்து அறிவித்திருக்கிறது. அந்த அறிவிப்பு வெளியிட்ட நாளை குறிப்பதற்கு சர்வதாரி என்ற சமஸ்கிரத ஆண்டின் பெயரை போட்டதுஅரசின் குழப்பத்தை காட்டுகிறதா? இல்லை அதிகாரிகள் அதை தமிழ் ஆண்டின் பெயர் என்று நினைத்து விட்டார்களா ?
இதை சரி செய்யாத பட்சத்தில் மீண்டும் மக்களுக்கு தமிழ் புத்தாண்டு பற்றிய குழப்பம் இருந்து கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை தமிழா தை முதல் தேதி உன் புத்தாண்டு சித்திரையல்ல . புத்தாண்டு பிறக்கட்டும் புதுவாழ்வு மலரட்டும்
Read More
காலம் காலமாக நம் மீது ஆட்சி செய்தவர்கள் விட்டு சென்ற பழக்கவழக்கங்களை நம் கலாச்சாரம் என நினைத்து பல ஆண்டுகள் கொண்டாடினோம். இப்போதும் கொண்டாடி வருகிறோம். "கல் தோன்றா மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி தமிழ் குடி" என்ற பெருமைக்குரிய தமிழர்கென்றுஒரு தனி கலாசாரம் இல்லையா என்ற கேள்வி எழும் போது வரும் விடைகள் தான் . நம்முடைய கலாச்சாரங்களில் நம்மை ஆதிக்கம் செலுத்தியவர்கள் உருவாக்கிய கலப்படம்.
நம் நடைமுறையில் இருந்த தமிழ் வருட பிறப்பு அறுபது வருடங்கள் சுழற்சி முறையில் வருகிறது. அந்த அறுபது வருடங்களில் ஒரு வருடத்தின் பெயர் கூட தமிழில் இல்லை. மேலும் இந்த அறுபது ஆண்டு முறையைப் புகுத்திய ஆரியத்தின் விளக்கமும் மிகுந்த ஆபாசம் நிறைந்த பொருள் கொண்டதாகும். அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ம் பக்கத்தில்
கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.
“ஒருமுறை நாரதமுனிவர், கிருஷ்ணமூர்த்தியை ‘நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு கன்னிகையாவது தரலாகாதா?’ என்று கேட்டார். அதற்குக் கண்ணன், ‘நான் இல்லாத பெண்ணை வரிக்க’ என்றான். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதினாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கண்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கண்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு அவரை நோக்கி ‘நான் தேவரீரிடம் பெண்ணாக இருந்து ரமிக்க எண்ணம் கொண்டேன்’ என்றார். கண்ணன் நாரதரை யமுனையில் ஸ்நானம் செய்ய ஏவ, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். இவருடன் கண்ணன் அறுபது வருடம் கூடி, அறுபது குமாரர்களைப் பெற்றார். அவர்கள் ‘பிரபவ முதல் அட்சய’ இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமாகும் பதம் பெற்றார்கள்.”
இப்போது நாம் கூறி வருகிற வருட பிறப்பு என்பது கூட தவறு புத்தாண்டு என்பது தான் சரியானது. இந்த நிலையில் தான் தமிழக அரசு அடுத்த ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்களை அறிவித்து இருக்கிறது. அதில் பொங்கல் தினத்தில் தமிழ் புத்தாண்டையும் சேர்த்து அறிவித்திருக்கிறது. அந்த அறிவிப்பு வெளியிட்ட நாளை குறிப்பதற்கு சர்வதாரி என்ற சமஸ்கிரத ஆண்டின் பெயரை போட்டதுஅரசின் குழப்பத்தை காட்டுகிறதா? இல்லை அதிகாரிகள் அதை தமிழ் ஆண்டின் பெயர் என்று நினைத்து விட்டார்களா ?
இதை சரி செய்யாத பட்சத்தில் மீண்டும் மக்களுக்கு தமிழ் புத்தாண்டு பற்றிய குழப்பம் இருந்து கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை தமிழா தை முதல் தேதி உன் புத்தாண்டு சித்திரையல்ல . புத்தாண்டு பிறக்கட்டும் புதுவாழ்வு மலரட்டும்
Subscribe to:
Posts (Atom)