• பேய், பிசாசு உடம்பினுள்...

    இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....

  • உங்கள் மேல் எதற்கு ...

    தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் ...

  • யூத் புல் விகடனில் ...

    யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் ...

Showing posts with label தாலி. Show all posts
Showing posts with label தாலி. Show all posts

Saturday

கலாச்சாரத்தின் அடையாளமா தாலி ?

திருமணத்தின் போது மாப்பிளை பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவது நம்மிடையே இருந்து வருகிற மரபு . அவரவர் வழக்கப்படி தாலி கட்டுவது நடந்து வருகிறது . பெரும்பான்மையானோர் தாலியை புனிதமாக கருதி வருகின்றனர் . திருமணம் ஆனதற்கு அடையாளமாக தாலி பெண்ணின் கழுத்தில் தாலி இருக்கிறது . சில வாரங்களுக்கு முன்னால் விஜய் டிவியில் நீயா? நானா ?நிகழ்ச்சிகள் இந்த தலைப்பில் விவாதித்திருந்தார்கள் அதனுடைய தாக்கம் தான் இந்த பதிவு .

தாலி கட்டும் பழக்கம் தவிர்க்க முடியாத ஓன்று என்று இருந்த் கால கட்டம் மாறி இன்று மிக பெரிய விவாத களம் திறக்க பட்டிருக்கிறது . தந்தை பெரியார் காலத்திலேயே தாலி மீதான விவாதம் துவங்கி தந்தை பெரியார் தாலியை எதிர்த்து , இது பெண்ணடிமை தனத்திற்காக கொண்டு வரப்பட்டது . பெண்ணுக்கு தாலி கட்டுவதில் ஆணாதிக்கம் தான் மேலோங்கி நிற்கிறது என்று தாலி இல்லாத சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைத்தார் .

தந்தை பெரியார் உட்பட பலரும் சமூக மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்றாலும் அந்த காலங்களை விட இன்று மூட நம்பிக்கைகள் அதிகமாகி விட்டன . இன்றைய காலகட்டங்களில் மனிதர்களின் பேராசைகளால் மூட நம்பிக்கைகள் அங்கீகாரம் பெற தொடங்குகின்றன . வீடு கட்டுவது முதல் பெயர் வைப்பது வரை .


தாலி கட்டுவது என்பது ஆணாதிக்கத்தால் பெண்களுக்குள் திணிக்க பட்ட ஒரு மூட நம்பிக்கை தான் . திருமணம் ஆனவர்கள் அந்த தாலி பெண்ணின் கழுத்தில் இருக்கும் வரை கணவன் ஆரோக்கியமாக இருப்பதாக நம்புகிறார்கள் . கடந்த பல நூற்றாண்டுகளாக தாலி விவகாரத்தில் மக்களை வேறு எதையும் சிந்திக்காத வண்ணம் மூடர்களாகவே வைத்திருக்கிறார்கள் .

தாலி வந்ததன் காரணமே ஆண்களின் சுயநலமே இன்று வழக்கத்தில் உள்ள மொழி " தாலி பெண்ணின் வேலி" என்ன வேலி அந்த வேலி ஏன் ஆணுக்கு இல்லை . நாம் எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம் ஆனால் நமக்கு அமைய பேகும் பெண் என்றுமே நமக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் தாலி .

தாலி மீதான புனிதம் , சாஸ்திரங்கள் ஏழைகளுக்கு இல்லாமல் போய் விடுகிறது . திருமணத்தின் போது தங்கத்தில் தாலி செய்து போட்டு கொள்கிறார்கள் . பின்னர் பண தேவைகள் வரும் போது அந்த தாலியை கழற்றி அடகு வைக்கவும் தயங்கவில்லை . அப்படிப்பட்ட மக்களுக்கு தாலி என்றால் கஷ்டத்தை தேவைக்கு பயன் பட்டதே என்று தான் இருக்கும் . இன்றைய சினிமாக்கள் அனைத்துமே தாலிக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறது . மறைந்திருந்தோ , மயக்கத்தில்ருக்கும் போதோ அந்த பெண்ணுக்கு தெரியாமலோ , விருப்பம் இல்லாமலோ தாலி கட்டி விட்டால் அந்த பெண் அவனோடு வாழ வேண்டும் என்ற கேவலமான காட்சிகளை சினிமாக்கள் காட்டுகின்றன .

இன்று மக்கள் கலாச்சாரம் எது என்றே தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள் . ஆனால் அதை தான் கலாசாரம் என்றும் சொல்லி வருகிறார்கள் . ஆண்களும் மனைவியின் கழுத்தில் கிடக்கும் தாலி மீது வைக்கும் நம்பிக்கையை மனைவியின் மீது வைக்கவில்லை .பெண் எப்போது சமூகத்தில் தனக்கு வரும் பிரச்சனைகளையும் தானே எதிர் கொள்கிறாளே அன்றும் , சமூகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான உரிமைகள் வரும் போதும் தாலி என்பதே காணாமல் போய்விடும் .
Read More

Send your Status to your Facebook