இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Showing posts with label பாசிசம். Show all posts
Showing posts with label பாசிசம். Show all posts
Thursday
கையாலாகாதவன் கையிலெடுப்பது பாசிசமா ?
எழுதியது
Suresh Kumar
Labels:
இலங்கை,
தமிழ் ஈழம்,
பாசிசம்,
பிரபாகரன்,
விடுதலை புலிகள்
எழுதிய நேரம்
Thursday, July 09, 2009
பாசிசம் என்ற வார்த்தையை கேட்டாலே கையாலாகாதவன் சொல்லும் வார்த்தை போலாகி விட்டது . திடீரென ஒரு இணைய பக்கத்திற்கு போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது அங்க பொய் பார்த்தல் இரயாகரன் - சமர் என்று ஒரு பிரிவு காணப்படுகிறது . நான் அதை பார்த்தவுடனே இராயகவன் இலங்கை சிங்கள இனவெறிக்கு எதிராக களமாடிய சமர் என நினைத்து அதை கிளிக் பண்ணி பார்த்தல் தான் தெரிகிறது தமிழ் மொழியாலே தமிழர்களுக்கு எதிராக இணையத்தில் களமாடிவருகிறார் என்பது .
சிங்கள இனவெறி அரசால் ஏற்பட்ட தோல்வியிலிருந்து மீண்டு அடுத்த கட்ட போராட்டத்திற்கு எழுந்து விட்ட தமிழர்களுக்கு எழாத சந்தேகங்கள் இவர்களுக்கு எழுகிறது . அவங்க இணையதளத்தை ஓட்ட வேண்டுமென்றால் தினம் ஒரு செய்தி தேசிய தலைவரை பற்றி வெளியிட்டாக வேண்டும் . சிங்கள இனவெறி அரசு இனவெறியோடு நடந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிந்தும் சிங்கள இனவெறி அரசை கண்டிப்பதை விட தமிழ் ஈழ தாயகத்திற்காக களம் கண்டு மாண்ட ஆயிரக்கான தமிழர்களை கொண்ட பிரபாகரன் தலைமையிலான விடுதலை புலிகள் அமைப்பை குறித்து தவறான பிரச்சாரம் செய்ய வேண்டும் இது தான் இவர்கள் வேலை .
ராணுவரீதியில் விடுதலை புலிகள் தோற்கடிக்கபட்டார்கள் என்று சிங்கள இனவேறியர்களோடு ஆட்டம் போட்ட இராயகன் கும்பலுக்கு கிடைத்த மிக பெரிய அடி தமிழ் ஈழ விடுதலை புலிகளால் அறிவிக்கப்பட்ட நாடு கடந்த தமிழ் ஈழம் . விடுதலை புலிகளின் அனைத்துலக தொடர்புகள் துறையால் தலைவர் வீரமரணம் அடைந்து விட்டார் என அறிவித்தும் ஈழ ஆதரவாளர்களும் தமிழர்களும் நம்ப மறுக்கின்றனர் . இதையே வாய்ப்பாக பயன்படுத்தி ஒரு வேளை பிரபாகரன் உயிருடன் இருப்பாரோ என்ற பயத்தின் மூலம் தவறான நம்பக தன்மையற்ற தகவல்களை கட்டுரையாக பாவித்து தமிழர்களுக்கு எதிராக மகிந்தாவுடன் கூட்டு சேர்ந்து சமராடுகிரார் .
இராயகவன் கும்பலின் செய்திகளை படித்தாலே தெரிகிறது கையாலாகதவர்கள் என்பது எந்த லட்சியத்திற்காக பிரபாகரன் அவர்களால் விடுதலை புலிகள் இயக்கம் துவக்கபட்டதோ அதில் எந்த விட்டு கொடுப்பிற்கும் இடமளிக்காமல் அந்த லட்சியம் இன்றும் உயிரோடிருக்க செய்த தலைவனை விமர்சிக்க கையாலாகாத இராயகவன் கும்பல்களுக்கு தகுதியிலை என்பதை என்னால் சொல்லமுடியும் . போர் முடிந்தது உங்கள் விருப்பம் போல் விடுதலை புலிகளை இல்லாமல் ஆக்கிவிட்டாச்சு இனி தமிழர்களுக்காக உரிமைகளை பெற்று தருவது தானே உங்கள் நோக்கமாக இருக்கவேண்டும் . அதை விட்டு விட்டு கீழ்த்தரமான வேலைகளில் ஏன் ஈடுபடுகிறார்கள் .
தேசிய தலைவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதமும் தேவையில்லை எப்படி இறந்தார் என்ற ஆராச்சியும் தேவையில்லை மக்கள் உள்ளங்களில் குடிகொண்ட தமிழ் ஈழம் இன்னும் உயிருடனே இருக்கிறது . தமிழ் ஈழம் உயிருடன் இருக்கும் வரை பிரபாகரன் வாழ்ந்து கொண்டிருப்பார் . பிரபாகரன் ஒரு வரலாற்று நாயகன் .
Subscribe to:
Posts (Atom)

