• பேய், பிசாசு உடம்பினுள்...

    இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....

  • உங்கள் மேல் எதற்கு ...

    தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் ...

  • யூத் புல் விகடனில் ...

    யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் ...

Showing posts with label வதந்தி. Show all posts
Showing posts with label வதந்தி. Show all posts

Wednesday

வதந்திகள் வலம் வரும் உலகமடா ?

இன்று இரவு தொலை காட்சிகளில் தேசிய தலைவர் பிரபாகரன் பேசுகிறார் என்று குறுஞ்செய்தி மூலமாகவும் இணைய தளம் மூலமாகவும் ஒரு செய்தி பரவி கொண்டிருக்கிறது . இது எந்த அளவிற்கு உண்மை என்றே தெரியாத நிலையில் சிலர் தளராமல் பரப்பி வருகின்றனர் .

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு  தேசிய தலைவர் இறந்து விட்டார் என்றும் . அவருடைய உடல் கருகி விட்டது என்றும் சிங்கள அரசுகள் சொல்லி வந்தன . இதை விடுதலை புலிகள் மறுத்த நிலையில் தேசிய தலைவரை போன்ற உடலை காட்டினார்கள் . இதில் காட்ட பட்ட உடல் தலைவரின் உடல் இல்லை என்பதும் இது சிங்களத்தின் போலியான நாடகம் எனவும் ஆதாரபூர்வமான சந்தேகங்களால் வெளிக்காட்டினார்கள் தமிழ் உணர்வாளர்கள் .


சிங்கள ராணுவம் திட்டமிட்டே மனித உயிர்களின் இன படுகொலையை மறைக்கவே தலைவர் பிரபாகரன் இறந்ததாக பொய் செய்திகளை பரப்பியது . சிங்கள அரசின் நாடகத்திற்கு பலியாகி மனம் தளர்ந்து தங்களின் போராட்ட வலிமையை குறைக்க செய்ய சிங்களம் இப்படியான ஜோடிக்கப்பட்ட பொய் கதைகளை கட்டவிழ்த்து விடுகிறது .

அந்த நிலையில் தான் சிலர் இன்று இரவு தேசிய தலைவர் தொலை காட்சிகளில் தோன்றி பேசுகிறார் என ஒரு செய்தியை பரப்புகிறார்கள் . எதற்கு அந்த குறிப்பிட்ட தொலை காட்சிகளுக்கு விளம்பரமா இல்லை சிங்கள அரசின் மற்றொரு உளவியல் போரா என சிந்திக்க தோன்றுகிறது ? அப்படியே தேசிய தலைவர் பிரபாகரன் பேசுவதாக இருந்தாலும் பேசிய பின்னர் நாம் இதை பற்றி எழுதலாமே . ஒரு செய்தி உறுதியாக தெரியும் முன்னால் நாம் அதை பரப்புவதை நிறுத்துவோம் .

வதந்திகள் வதந்திகளாகவே இருக்கட்டும் சிங்கள அரசின் இனபடுகொலைக்கு எதிராகவும் தமிழர்களின் உரிமையை பெறவும் மனம் தளராமல் போராடுவோம் தேவையான நேரத்தில் தலைவர் பிரபாகரன் மக்கள் முன் வருவார்
Read More

Send your Status to your Facebook