Wednesday

வதந்திகள் வலம் வரும் உலகமடா ?

இன்று இரவு தொலை காட்சிகளில் தேசிய தலைவர் பிரபாகரன் பேசுகிறார் என்று குறுஞ்செய்தி மூலமாகவும் இணைய தளம் மூலமாகவும் ஒரு செய்தி பரவி கொண்டிருக்கிறது . இது எந்த அளவிற்கு உண்மை என்றே தெரியாத நிலையில் சிலர் தளராமல் பரப்பி வருகின்றனர் .

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு  தேசிய தலைவர் இறந்து விட்டார் என்றும் . அவருடைய உடல் கருகி விட்டது என்றும் சிங்கள அரசுகள் சொல்லி வந்தன . இதை விடுதலை புலிகள் மறுத்த நிலையில் தேசிய தலைவரை போன்ற உடலை காட்டினார்கள் . இதில் காட்ட பட்ட உடல் தலைவரின் உடல் இல்லை என்பதும் இது சிங்களத்தின் போலியான நாடகம் எனவும் ஆதாரபூர்வமான சந்தேகங்களால் வெளிக்காட்டினார்கள் தமிழ் உணர்வாளர்கள் .


சிங்கள ராணுவம் திட்டமிட்டே மனித உயிர்களின் இன படுகொலையை மறைக்கவே தலைவர் பிரபாகரன் இறந்ததாக பொய் செய்திகளை பரப்பியது . சிங்கள அரசின் நாடகத்திற்கு பலியாகி மனம் தளர்ந்து தங்களின் போராட்ட வலிமையை குறைக்க செய்ய சிங்களம் இப்படியான ஜோடிக்கப்பட்ட பொய் கதைகளை கட்டவிழ்த்து விடுகிறது .

அந்த நிலையில் தான் சிலர் இன்று இரவு தேசிய தலைவர் தொலை காட்சிகளில் தோன்றி பேசுகிறார் என ஒரு செய்தியை பரப்புகிறார்கள் . எதற்கு அந்த குறிப்பிட்ட தொலை காட்சிகளுக்கு விளம்பரமா இல்லை சிங்கள அரசின் மற்றொரு உளவியல் போரா என சிந்திக்க தோன்றுகிறது ? அப்படியே தேசிய தலைவர் பிரபாகரன் பேசுவதாக இருந்தாலும் பேசிய பின்னர் நாம் இதை பற்றி எழுதலாமே . ஒரு செய்தி உறுதியாக தெரியும் முன்னால் நாம் அதை பரப்புவதை நிறுத்துவோம் .

வதந்திகள் வதந்திகளாகவே இருக்கட்டும் சிங்கள அரசின் இனபடுகொலைக்கு எதிராகவும் தமிழர்களின் உரிமையை பெறவும் மனம் தளராமல் போராடுவோம் தேவையான நேரத்தில் தலைவர் பிரபாகரன் மக்கள் முன் வருவார்

2 கருத்துக்கள்:

Venkatesh said...

உங்கள் தளத்தை திறந்தவுடன்
Malware Detected என வருகிறது பார்க்கவும்

வெங்கடேஷ்

கலையரசன் said...

கள்ள சிங்கள நரிகளை வீழ்த்த..
புலிகள் புத்துயிர் பெற்று திரும்பி வர..
இறைவன் என்று ஒருவன் இருந்தால் பிரார்த்திப்போம்.
-இப்படிக்கு,
சொரனை இல்லாத தமிழன்.

Post a Comment

Send your Status to your Facebook