Monday

பிளாஷ் நியுஸ் :கொழும்பில் தகவல் தொடர்புகள் துண்டிப்பா ?

முல்லைத்தீவு நகரத்தை இராணுவம் கைப்பற்றியதாக அறிவித்திருந்தாலும் மற்ற பகுதிகளில் விடுதலை புலிகளுக்கும் ராணுவத்திற்கும் கடுமையான சண்டைகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது . இதில் புலிகள் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிகிறது .

கொழும்பு நகர் முழுவதும் பதட்டம் நிலவுகிறது . கொழும்பு நகரம் உசார் படுத்தப்பட்டுள்ளது . கொழும்பில் தகவல் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

இந்த நிலையில்  " மக்கள் பாதுகாப்பு வலயம் " மீது கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல் : 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி , 100 க்கும் மேற்பட்டோர் படுகாயம் !      


source : Daily thanthi Latest News

5 கருத்துக்கள்:

Anonymous said...

இந்த தகவல் உண்மை இல்லை. நான் கொழும்பில் உள்ள நண்பருக்கு தொலைபேசியில் பேசினேன்.

Suresh Kumar said...

தகவலுக்கு நன்றி தோழரே . கொழும்பில் இருக்கும் தமிழ் தோழர்கள் அங்கெ காணப்படும் சூழ்நிலையை சொல்வார்களா என்ற ஆவல் இருக்கிறது . அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை மூடிமறைக்க இப்படி பட்ட பொய் செய்திகளை இந்தியாவில் பரப்புகிறார்களோ என்ற சந்தேகம் இருக்கிறது .

Anonymous said...

Dont belive this is flake news suresh it is from shit Srilanka Govt do like this.

now Europe decide remove banne Tamil Tiger their countries.

mailvannan

Suresh Kumar said...

கண்களையும் காதுகளையும் மூடியிருக்கும் உலகத்தின் கண்களையும் காதுகளையும் நம் போராட்டங்களால் திறக்க வைப்போம் . மனித அவலங்களை அவர்கள் முன்னாள் எடுத்துரைப்போம் . தடைகள் ஒருநாள் நீங்கும் . நன்றி நண்பரே

Anonymous said...

pls pls tell every one about our ppl dieing in vanni. pls. it is a genocide. நாளை வரலாற்றுத் தவற்றை செய்த பாவம் வேண்டம். இந்திய திருநாட்டில் கொண்டாட்டம். ஈழத்தமிழன் தின்டாட்டம். இந்திய மத்திய அரசின் திட்டமிடலில் தான் இந்த கொலைகள் நடக்கின்றன. இந்திய தமிழர்களே ஈழத்தில் எமது சகோதரர்கள் படும் பாடு பாருங்கள். பலஸ்தீனத்தில் இறந்தால் இந்தியாவில் அனைத்து செய்திகளிலும் காட்டுகிறார்கள். ஈழத்தில் நடப்பது ஏன் என்டிடிவி சிஎன்என் பொதிகையில் வருவதில்லை. திட்டமிட்டு நடத்தப்படும் கடபநாடகம். இதில் காங்கிரஸ் மட்டும காரணமல்ல. தில்லிக்கு தமிழன் கிள்ளுக்கீரை. ராஜபக்சவுடன் சேர்ந்து தமிழனை கொல்லும் மத்திய அரசை. இந்திய வெளியுவுகொள்கை வகுப்பாளர்களை எதிர்போம். ஈழத்தமிழளை காப்பாற்றுவோம்.

Post a Comment

Send your Status to your Facebook