Wednesday

ஆளில்லா பேருந்துகளை ஓட்டும் தமிழக அரசு

தமிழகத்தில் இன்று இலங்கை பாதுகாப்பு பேரவை அறிவித்த பொது வேலை நிறுத்தத்தை எப்படியாவது தடுக்க வேண்டும் என கலைஞரின் தலைமையிலான அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தது .

தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன் படுத்துவதாக கூட அறிவித்திருந்தது . பொது வேலை நிறுத்தம் சட்ட விரோதம் என தலைமை செயலாளர் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கடிதம் அருப்பியிருந்தார்கள் . ஆனால் நேற்றே உயர் நீதி மன்றம் தடை விதிக்க மறுத்து விட்டது . சட்ட விரோதமில்லை மக்களின் உணர்வை காட்ட இதுவும் ஒரு போராட்டம் தான் என உயர்நீதி மன்றம் தெரிவித்திருந்தது .

இதிலும் தோற்று போய் விட்ட திமுக அரசு காவல் துறை பாதுக்காப்போடு இன்று பேருந்துகளை இயக்கி வருகிறது . மக்கள் பயணங்களை தவிர்த்துள்ள காரணத்தால் பேருந்துகள் பெரும்பாலும் காலியாகவே சென்று கொண்டிருக்கிறது .

தொண்ணூறு சதவீதமான கடைகள் தமிழ் நாடு முழுவதும் அடைக்க பட்டுள்ளன .
ஆட்டோக்கள் , வேன் , போன்ற தனியார் வாகனகள் பெரும்பாலும் இயங்கவில்லை . சில இடங்களில் பேருந்துகளின் மீது கல்லேரியபட்டுள்ளது . நாகர் கோவிலில் இலங்கை தேசியக்கொடி , ராஜபக்ஷே உருவ பொம்மை எரித்த பலரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர் . ரயில் மறியல் செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டுள்ளார் .

எப்படியும் அரசின் மிரட்டலையும் மீறி சுய வேலைமறுப்பு போராட்டம் மக்கள் ஆதரவோடு வெற்றி பெற்றுள்ளது .

9 கருத்துக்கள்:

நாமக்கல் சிபி said...

//தொண்ணூறு சதவீதமான கடைகள் தமிழ் நாடு முழுவதும் அடைக்க பட்டுள்ளன //

ஆம்!

WE WILL COME BACK said...

WE WILL WIN WITH YOUR SUPPORT......THIS IS THE WITNESS

Anonymous said...

அரசின் மிரட்டலையும் மீறி சுய வேலைமறுப்பு போராட்டம் மக்கள் ஆதரவோடு வெற்றி பெற்றுள்ளது .

Suresh Kumar said...

Namakkal Shibi சொன்னது…
//தொண்ணூறு சதவீதமான கடைகள் தமிழ் நாடு முழுவதும் அடைக்க பட்டுள்ளன //

ஆம்!
///////////////

நாமக்கல் சிபி அய்யா என்ன சொல்ல வாறீங்க ............. சென்னை நகரத்தில் காவல் துறையினரின் பாதுகாப்போடு கடைகள் திறந்திருக்கிறது . மாற்ற படி புற நகரங்கள் அனைத்திலும் கடைகள் அடைக்கப்பட்டிருக்கிறது .

Suresh Kumar said...

http://thatstamil.oneindia.in/news/2009/02/04/tn-general-strike-begins.html

சென்னை: இலங்கைத் தமிழர் இனப்படுகொலையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று நடந பந்த்துக்கு பெரும்பாலான பகுதிகளில் ஆதரவு கிடைத்தது. மாநிலம் முழுவதும் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. 50க்கும் மேற்பட்ட பஸ்கள் சேதப்படுத்தப்பட்டன. 1000 பேர் வரை கைது செய்யப்பட்டனர். பஸ், ரயில் போக்குவரத்தில் பாதிப்பு அவ்வளவாக இல்லை.

Anonymous said...

//மக்கள் பயணங்களை தவிர்த்துள்ள காரணத்தால் பேருந்துகள் பெரும்பாலும் காலியாகவே சென்று கொண்டிருக்கிறது ...

பல இடங்களில் பேருந்துகளின் மீது கல்லேரியபட்டுள்ளது...

எப்படியும் அரசின் மிரட்டலையும் மீறி சுய வேலைமறுப்பு போராட்டம் மக்கள் ஆதரவோடு வெற்றி பெற்றுள்ளது //


????

Anonymous said...

sila naaigal loosuthanamana comment kodukkum adhai ellam kandukkadhinga... really we will win!

எறும்பு said...

//ஆளில்லா பேருந்துகளை ஓட்டும் தமிழக அரசு
//

தலைப்பை படித்துவிட்டு ஏதோ புதிய அறிவியல் கண்டுபிடிப்போனு நெனச்சேன்.
உள்ளே வந்த அரச்ச மாவு..

அசோசியேட் said...

//ஆளில்லா பேருந்துகளை ஓட்டும் தமிழக அரசு
//
.
மக்களுக்கு அரசு
பாடம் நடத்தியது போதும்.
- உண்மையில் அரசு பாடம் கற்க வேண்டும்!

Post a Comment

Send your Status to your Facebook