Thursday

ஒரு வார கால இடைவெளியில் நான்

சுமார் ஒரு வார காலத்திற்கு மேலான நாட்களாக வலையுலக பக்கம் வராமல் இருந்து விட்டேன் . பதிவுலக நண்பர்களை விட்டு விலகி சென்றோமோ என்ற ஏக்கம் மனதிலே ஓடி கொண்டிருந்தது . ஒரு வார கால இடைவெளியில் வாழ்கையில் ஏதோ இழந்த ஒரு பிரம்மை .

எப்படி தான் சொந்த ஊருக்கு வந்த சுகம் ஒரு புறம் இருந்தாலும் இணைய பக்கம் வராத ஏக்கம் இப்போது தான் கொஞ்சம் குறைகிறது . கடந்த வெள்ளி கிழமை மாலைதீவிலிருந்து இந்தியாவிற்கு வந்திருந்தாலும் . வரும் முன்னால் இரண்டு மூன்று நாட்களாக இந்தியாவிற்கு வருவதற்கான ஆயத்த பணிகளில் கவனம் செலுத்தியமையாலும் அப்படியே இரண்டு மூன்று நாட்களை தவற விட்டேன் .

நண்பர்களிடம் தினமும் பேசுகிறோமோ இல்லையோ பதிவுகள் தினமும் போடுகிறோமோ இல்லையோ . இணைய பக்கம் வந்து நண்பர்களின் பதிவுகளை படித்து பிடித்திருந்தால் பின்னூட்டமிட்டு வருவது ஒரு வகையில் இனிமையானது என்பது கூட இப்போது தான் தெரிகிறது எனக்கு .

ஒவ்வெரு நாழும் வேண்டாம் ஒவ்வெரு மணி நேரமும் கடந்து போகும் போது எண்ணற்ற செயல்கள் கடந்து போகின்றன . ஆனால் இப்போதோ ஒரு வாரம் கடந்து போய் விட்டது . என்னவெல்லாமோ கடந்து போயிருக்கும் பதிவுலகத்தில் . ஒரு வார பதிவுலகத்தை தவற விட்டேன் . பல மாதங்களுக்கு பிறகு சொந்த ஊரில் பக்கத்து வீட்டு திருமணங்கள் நண்பர்களின் திருமணங்களில் பங்கேற்பது ஒரு வகையான மகிழ்ச்சி . வெளியிடங்களுக்கு செல்லும் போது நாம் இழந்தவற்றை இப்போது அனுபவிப்பதில் ஒரு வித மகிழ்ச்சி .

வாழ்கையே இப்படி நகர்ந்து கொண்டிருக்கிறது ஒன்றை இழந்து தான் இன்னொன்றை பெற முடியும் நான் மட்டும் விதி விலக்கா . .................

11 கருத்துக்கள்:

vasu balaji said...

வாங்க வாங்க சுரேஷ். :D

வால்பையன் said...

கூல் கூல்!

ஒரு பிரச்சனையும் இல்ல எல்லாம் அமைதியா போய்கிட்டு இருக்கு!
சந்தோசமா எஞ்சாய் பண்ணிட்டு வாங்க!

sakthi said...

நிம்மதியாக விடுமுறையை அனுபவித்து வாருங்கள் சுரேஷ்

கலையரசன் said...

வெல்கம் பேக் சுரேஷ்... திரும்ப பவரோட வந்துயிருக்கீங்க!!

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் சுரேஷ்...
நல்ல ஜாலியா இருங்க... பின் சந்திக்கலாம்... ஊரில் எல்லோரும் எப்படியிருக்கின்றார்கள்?

Suresh Kumar said...

Blogger வானம்பாடிகள் said...

வாங்க வாங்க சுரேஷ். :D ////////////

நன்றி வானம் பாடிகள் ( பாலா )

Suresh Kumar said...

வால்பையன் said...

கூல் கூல்!

ஒரு பிரச்சனையும் இல்ல எல்லாம் அமைதியா போய்கிட்டு இருக்கு!
சந்தோசமா எஞ்சாய் பண்ணிட்டு வாங்க!////////////

நன்றி வால்பையன்

Suresh Kumar said...

sakthi said...

நிம்மதியாக விடுமுறையை அனுபவித்து வாருங்கள் சுரேஷ்//////////

ன்றி சக்தி அக்கா உங்கள் கருத்திற்கு

Suresh Kumar said...

கலையரசன் said...

வெல்கம் பேக் சுரேஷ்... திரும்ப பவரோட வந்துயிருக்கீங்க!!///////////////

நன்றி கலையரசன்

Suresh Kumar said...

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் சுரேஷ்...
நல்ல ஜாலியா இருங்க... பின் சந்திக்கலாம்... ஊரில் எல்லோரும் எப்படியிருக்கின்றார்கள்//////////

ஊரில் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள் . நீங்கள் நலமாக இர்க்கிறீர்களா ? நன்றி

பித்தன் said...

welcome back

Post a Comment

Send your Status to your Facebook