Saturday

இலங்கை செல்லும் குழுவால் தமிழர்களுக்கு நன்மையா ?

இன்று திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் குழு இலங்கை சென்று முகாம்களில் சிறை படுத்த பட்டுள்ள மக்களை பார்வையிட செல்கிறது . சிங்கள இனவெறி அதிபர் ராஜ பக்ஷேவையும் சந்திக்கும் நிகழ்ச்சி நிரல் தயாரிக்க பட்டுள்ளது .

ஐந்து நாட்கள் சுற்று பயணம் செல்லும் இந்த எம்பிக்கள் குழு வதை முகாம்களில் உள்ள மக்களை நேரில் பார்வையிடுகிறது . இதன் மூலம் தமிழர்களுக்கு நன்மை ஏற்படுமா ? ஏற்கனவே காங்கிரஸ் ,திமுக கட்சிகளால் அங்கே அமைதி நிலவி விட்டது மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என பிரசாரங்கள் முன்னெடுக்க பட்ட நிலையில் இந்த பயணம் தமிழர்களுக்கு சாதகமாக இருக்குமா ?






புலம் பெயர் தமிழர்களால் அனுப்பப்பட்ட வணக்காமன் கப்பல் பொருட்கள் பல மாதங்களாக கொழும்பிலே நிற்கிறது . அதையும் எங்கள் முயற்சியால் தமிழர்களுக்கு அனுப்பி விட்டோம் என பிரச்சாரம் செய்த தமிழக அரசு அது உரியவர்களிடம் போய் சேர்ந்ததா என்பதை பற்றி கவலை பட வில்லை . ஆனால் இன்று வரை அந்த பொருட்கள் உரிய மக்களுக்கு இன்னும் சென்று சேரவில்லை .

அதிகமான உலக நாடுகள் இலங்கை முகாம்களை பற்றிய தவறான செய்திகளை தெரிவித்து இலங்கை அரசுக்கு கண்டனம் செய்த போதும் இந்தியாவோ தமிழக அரசோ இலங்கையை புகழ்வதிலேயே குறியாக இருந்தது . தமிழகத்தில் உள்ள எம்பிக்கள் குழு செல்வதில் எதிர் கட்சிகளை சேர்ந்த ஒரு எம்பிக்கள் கூட இல்லை. இவர்கள் அங்கே நடை பெறுகின்ற உண்மை நிலையை மக்களுக்கும் இந்திய அரசுக்கும் தெரிவித்து மக்களின் மீள் குடியேற்றம் , தமிழர்களின் சுய நிர்ணய உரிமை போன்றவற்றிற்கு நடவடிக்கை எடுப்பார்களா ? இல்லை இலங்கையை சுற்றி பார்த்தோம் வந்தோம் என்று இருந்து விடுவார்களா ?

ஏற்கனவே போர் நடந்து கொண்டிருக்கும் போது மழை நின்றும் துவானம் விடவில்லை என சொன்னதை போல் தான் சொல்வார்களா ? சட்ட மன்றத்திலே நிறைவேற்றிய தீர்மானங்களை போல் செல்லாத காசாக்குவார்களா ? என்ற பல கேள்விகள் மக்கள் மத்தியில் வருகின்றன .


6 கருத்துக்கள்:

அருள் said...

அனைத்துக் கட்சிக் குழு என்று சொல்லிவிட்டு இப்போது தனியே திமுக காங்கிரஸ் கூட்டணியினரே செல்கின்றனர்.ஏன் எதிர்க்கட்சிகள் இல்லை ?
திருமாவும் போகிறார் ,ஆனால் அவரது சமீபத்திய பேச்சுகள் அவரில் முன்பிருந்த நம்பிக்கையைத் தகர்க்கின்றன.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் ராஜபக்சேயின் பிரதிநிதியான டக்லஸ் தேவானந்தாவின் விருந்தினராக இவர்கள் ஊர்வலம் செல்கிறார்களாம்,பின்பு அவரது விருந்தை உண்பார்களாம்
பிறகு வவுனியாவுக்கு போய்விட்டு, அங்கு இலங்கை அரசினால் முன்கூட்டியே திட்டமிட்டபடி சிலரைச் சந்தித்துவிட்டு இந்தியாவுக்கு வந்து இலங்கை அரசு கடினமான சூழலில் நன்றாக நடத்துகிறார்கள், ஆனால் பாவம் அவர்களுக்கு பணம் போதாது என்று சொல்லி இந்தியஅரசு பணம் கொடுத்து ராஜபக்சாவிற்கு உதவுமாறு சிபாரிசு செய்வார்கள் இந்தியா கோடிக்கணக்கில் (இந்தப்பணத்தில் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணமும் அடங்கும்)இலங்கைக்கு பணம் கொடுக்கும் ,அந்தப் பணத்தை சிங்களக் குடியேற்றத்துக்கும் தமிழர்களை இம்சைப்படுத்தவும் இலங்கை அரசு பயன்படுத்தும்
இதுதான் நடக்கப்போகிறது.

S.A. நவாஸுதீன் said...

எந்த விதத்தில் பயனுள்ளதாக் இருக்கும் என்று சென்று வந்தால்தான் தெரியும். (நமக்கு இவர்கள் மேல் நம்பிக்கை இல்லை என்பது வேறுவிஷயம்). எப்படியாவது ஒரு விடியல் பிறக்கட்டும் என்று வேண்டிக்கொள்வோம்

ஆ.ஞானசேகரன் said...

//ஏற்கனவே போர் நடந்து கொண்டிருக்கும் போது மழை நின்றும் துவானம் விடவில்லை என சொன்னதை போல் தான் சொல்வார்களா ? சட்ட மன்றத்திலே நிறைவேற்றிய தீர்மானங்களை போல் செல்லாத காசாக்குவார்களா ? என்ற பல கேள்விகள் மக்கள் மத்தியில் வருகின்றன .//


பொருத்திருந்து பார்ப்போம் ஏதாவது நல்லது நடக்குமா? என்று

Sureraja said...

Idhellaam verum pammaathhu. Makkal varippanaththil ilangaiyaich chutrippaarkka oru vetri vaayppu. Miruga veri Raaja Paksevukkuth theriyum ivargalidam eppadi kadhaippathu endru.

புரட்சிகர தமிழ்தேசியன் said...

இந்த தே... பயலுங்க எதுக்கு போறாங்க தோழர்!

முன்னர் உண்ணாவிரதம் நாடகம் நடத்தியதை போல்.. போய் வந்து அனைவரையும் சந்தித்தோம்...திருட்டு முதேவிகள் கழக..ஆட்சியில் தமிழீன தலைவர் தலைமையில் அனைத்தும் நன்றாக வே இருக்கிறது.. முகாம்களில் எங்களை நன்றாக வே சிங்களர்வர் பார்த்து கொள்ளுகிறார்கள் என தமிழீழ தமிழர்கள் சொன்னதாக அறிக்கை வர போகிறது..அதை கொலைஞர தொல்லைகாட்சியில் பார்க்கும் அனைத்து சூடு சொரனை அற்ற ..எதற்கு வாழ்கிறோம் என தெரியாத குவாட்டர் கோழி பிரியாணி கோஸ்டிகளும்.. தலிவர் வாழ்க ! வாழும் வள்ளுவர் அவர்..என எடுத்து விடும் அடிப்பொடிகளும் இருக்கும் வரை.. சிறிது சிந்திக்க தெரிந்த நாம் தான் நம்மை நொந்து கொள்ள வேண்டும்.. எவனுக்கு இங்கே சூடு சொரனை உள்ளது..இப்படி பட்ட ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் இவனுங்களை ஒரு சுனாமி அல்ல.. எத்தனை முறை வந்து அடித்தாலும் நாம் சந்தோச படவேண்டும்.. காங்கிரசு களவாணிகள் தான் தமிழனித்தின் முதல் எதிரி நம் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்கு இவர்களே காரணம் என சில அடிப்படை அறிவு கூட இல்லாத மீனவர்களை வைத்து கொண்டு என்ன செய்வது தோழர்... அசன் அலி காங்கிரசு களவாணிகள் சார்பில் ராமேசுவரத்தில் ஜெயித்த காங்கிரசு எம்.எல்.ஏ.. சுட்டு கொல்லப்டும் மீனவர்களுக்கே தேர்தல் நாளில் குவாட்டரும் கோழிபிரியாணியும் தான் முக்கியமென்றால் நாம் ஏன் இவர்களுக்காக அழ வேண்டும்.. நான் சாதாரண ஒருவன் எனக்கு உ.பி(ஊருக்கு பிறந்தவன்) நேரெதிர் பாணியில் இவர்கள் தந்திரபடி செயலலிதாவை இழுக்கவேண்டாம்.. ஏன் கருநாகம் ஒருவேளை ஆரியர்கள் நம் பங்காளிகள் அவருக்கு பெண் கொடுத்து உதவுங்கள் என சொன்னால்..உ.பிக்கள் தங்கள் அக்கா தங்கையை இந்திகாரனுக்கு கூட்டி கொடுக்க தயாராக உள்ளார்களா? இந்து ராம் குடும்பத்தில் பெண் எடுத்திருக்கிறார்களே தமிழ் ஈனதலைவர் குடும்பத்தார் அதே வழியை இவர்களும் செய்வார்களா?? தமிழர் நாட்டில் தமிழ் தேசிய ராணுவம் நிற்கும் வரை எதையும் எவருடைய வாழ்வாதாரத்தையும் எவரும் உறுதிபடுத்த முடியாது இதுவே இன்றுள்ள உண்மை நிலவரம்...

Suresh Kumar said...

கருத்து தெரிவித்த அனைத்து தோழர்களுக்கும் நன்றிகள்

Post a Comment

Send your Status to your Facebook