• பேய், பிசாசு உடம்பினுள்...

    இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....

  • உங்கள் மேல் எதற்கு ...

    தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் ...

  • யூத் புல் விகடனில் ...

    யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் ...

Showing posts with label அரசியல் காங்கிரஸ். Show all posts
Showing posts with label அரசியல் காங்கிரஸ். Show all posts

Monday

பேச்சு வார்த்தை தொடருமாம் ...அட சீ ...வெட்கம் கெட்டவர்களே

காங்கிரஸ் திமுக உறவு முறிந்து போனது என ஜால்ரா மணி ,தொல் திருமா எல்லோரும் சேர்ந்து கூவி கொண்டிருக்கையில் பேச்சுவார்த்தை இன்னும் தொடரும்னு தயாநிதி மாறன் தெருவித்திருக்கிறார்.  
சுயமரியாதை என்ன விலை என கேட்கும் வீரமணி திமுக இனி இதற்கு மேல் சுயமரியாதை இழக்க கூடாது என அறிக்கை விட , திமுக தலைவர் உயர்நிலை கூட்டத்தை கூட்டி திமுக மந்திரிகள் ராஜினமா செய்வார்கள் என சொல்ல ரண்டு நாளா இவங்க நாடகத்திற்கு கிளைமாக்ஸ் எப்ப வரும் எப்பப வரும்னு மக்கள் எதிர் பார்த்து கொண்டிருந்தார்கள் . 

ராஜினமா செய்யணும்னு முடிவெடுத்தால் அனற்றைக்கே கடிதம் அனுப்பியிருக்கலாம் தகவல் தொழில்நுட்ப துறை வளர்ச்சியில் கடிதம் கிடைக்க நேரமாகாது . முக்கியமான பிரச்சனைகள் தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கொல்ல பட்டாலும் . ஈழ தமிழர்கள் சிங்கள படைகளால் கொள்ளப்பட்டாலும் கடிதம் எழுதும் கருணாநிதி மந்திரிகள் ராஜினமா செய்யும் போதும் கடிதம் அனுப்பியிருக்கலாம் . அல்லது அன்றைக்கே விமானம் மூலம் சென்று ராஜினமா கடிதம் கொடுத்திருக்கலாம் . அதையெல்லாம் விட்டு திங்கள் ராஜினமா கடிதம் கொடுக்க படும் என அறிவித்தார்கள் .  சரி ஓகே அப்படி ராஜினமா கடிதம் கொடுக்க போனா கொடுத்து விட்டு வர வேண்டியது தானே . அதை விட்டு விட்டு அவங்க கிட்ட போய் கெஞ்சி இருக்காங்க . இப்போ ஒரு வழியா பேச்சுவார்த்தை நாளை தொடரும் என அறிவித்தும் விட்டார்கள் . அப்போ ராஜினமா கிடையாது . 

ஆட்சிய விட்டு பிடிச்சி தள்ளினாலே அதில ஏதாவது கேப் கிடைக்குமான்னு பார்க்கிற இந்த பதவி வெறியர்களாவது ராஜினமா செய்யவது என்பது நடக்காத காரியம் .  காங்கிரஸ் கட்சியை கருணாநிதி எவ்வளவு கேவல படுத்த முடியுமோ அவ்வளவு கேவல படுத்தியாச்சு. கருணாநிதியை காங்கிரஸ் கட்சியால் எவ்வளவு கேவல படுத்த முடியுமோ அவ்வளவு கேவல படுத்தியாச்சு . இதுக்கு மேல இவங்க  துணிய உருவி விட்டு அம்மணமா நடக்க விடுறதுக்கு எதுவும் இல்ல . இப்பவும் ஏதாவது வாய்ப்பு உண்டானு தான் பார்கிறாங்க. இப்படி ஒரு அதிசய பிறவிகளை தமிழர்கள் எங்கேயும் காண முடியாது . இவன் ரெம்ப நல்லவன்ட எவ்வளவு அடிச்சாலும் தான்கிகிறான் என்ற விடிவேலுவின் சினிமா வசனம் தான் நினைவிற்கு வருகிறது . 


இவர்களால் பதவி இல்லாமல் ஒரு நாள் இல்லி ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது . இவர்கள் செய்த கொடுமைகள் ஏராளம் ஒவ்வெரு கொடுமைகளும் இவர்களை காவு வாங்கும் .     கனிமொழிக்கு மட்டுமல்லாது தயாளு அம்மாவுக்கு சேர்த்து ஏற்கனவே ஜெயிலில் இடம் புக் பண்ணி விட்டதாக செய்திகள் வருகின்றன .   அப்படியிருக்கும் போது எப்படி இவர்களால் ராஜினமா செய்ய முடியும் ......? ஏற்கனவே ஈழ தமிழர்கள் கொல்லப்படும் போது எம்பிக்கள் ராஜினமா செய்வார்கள் என அறிவித்த பின்னர் அனைத்து எம்பிக்களும் கருணாநிதியிடம் ராஜினமா கொடுத்து நாடகமாடியது  ஊரறிந்த கதை ......^^^^^^^^^

சரி அத விடுவோம் இந்த ஜால்ரா மணி ஸாரி வீரமணி திருமாவளவன் எல்லாம் என்ன அறிக்கை எழுதி வச்சிருக்காங்களோ ? ............ ஏதாவது வச்சிருப்பாங்க இவனுங்களுக்கும் வெட்கம், மானம், சூடு ,சொரணை இதில எதுவும் இல்லையே ...........  பாவம் திமுக தொணடர்கள்
Read More

Send your Status to your Facebook