இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Showing posts with label கற்பனை. Show all posts
Showing posts with label கற்பனை. Show all posts
Monday
சோனியா காந்தியை கண்டித்து தங்கபாலு உன்ன்னாவிரதம்
எழுதியது
Suresh Kumar
Labels:
இந்தியா,
இலங்கை,
கலைஞர்,
கற்பனை,
தமிழகம்,
திமுக கூட்டணி,
தேர்தல்2009
எழுதிய நேரம்
Monday, April 27, 2009
இலங்கையில் போர் நிறுத்தம் வலியுறுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி சாகும் வரை உண்ணாவிரதம் துவங்கியிருக்கிறார் . இது வரை காலமும் விடுதலை புலிகளை எதிர்த்து வந்த ஜெயலலிதா வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் ஜி இலங்கைக்கு சென்று அங்கு நடைபெறுகின்ற மனித அவலங்களை சொன்ன பின்னர் தமிழ் ஈழம் ஓன்று தான் தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியும் என சொல்லி நானே போராடி பெற்று தருவேன் என நேற்று அறிவித்தார் .
இதையடுத்து திமுக ஆதரவிலான மத்திய அரசு தான் இலங்கையில் போரை நடத்தி வருகிறது என தமிழ் இன ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர் . எப்போது தமிழகத்தில் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக எழுச்சி ஏற்படும் போதெல்லாம் அதை தேசிய பாதுகாப்பு சட்டம் , கைது , நாடகம் போன்றவற்றால் தடுத்து வந்தார் கருணாநிதி . இந்த நிலையில் தேர்தல் நெருங்கும் வேளையில் திமுக காங்கிரஸ் காட்சிகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட தயாராகிவிட்டனர் .
இந்த வேளையில் திடீரென கருணாநிதி காலவரையற்ற உண்ணாவிரதத்தை மத்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாவை எதிர்த்தும் போர் நிறுத்தம் வலியுறுத்தியும் துவங்கி விட்டார் . இதையடுத்து தமிழகம் முழுவது உடன்பிறப்புகள் பஸ் மறியல் செய்து வருகின்றனர் . தமிழ்நாட்டில் போக்குவரத்து ஸ்தம்பித்தது .
திடீரென காங்கிரஸ் மாநில தலைவர் தங்கபாலு சோனியாவை எதிர்த்து சேலத்தில் உண்ணாவிரதம் இருக்கிறார் . தமிழகம் முழுவதும் சோனியாவுக்கு எதிராகவும் தமிழ் ஈழத்திற்கு ஆதரவான ஒரு நிலைப்பாடு தமிழக காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது .
Subscribe to:
Posts (Atom)