இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Showing posts with label முல்லை பெரியாறு. Show all posts
Showing posts with label முல்லை பெரியாறு. Show all posts
Friday
முல்லை பெரியாறு அணை போராட்ட களம் காண வாய்ப்பில்லாதவர்களுக்கு ஒரு வாய்ப்பு
எழுதியது
Suresh Kumar
Labels:
கேரளா,
தமிழகம்,
போராட்டங்கள்,
முல்லை பெரியாறு
எழுதிய நேரம்
Friday, December 23, 2011
தமிழகத்தின் ஐந்து மாவட்ட வாழ்வாதாரத்தை காக்க நாள் தோறும் லட்ச கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி கொண்டிருக்கின்றனர். நம்மில் பலர் இந்த போராட்டங்களில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்க வில்லையே என்ற கவலை இருக்கும். முல்லை பெரியாறு அணையில் நம் பக்க நியாயங்களை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
பாராமுகமாய் இருக்கும் மத்திய மன்மோகன் அரசுக்கு ஓட்டு மொத்த தமிழர்களும் அணையை காக்க உணர்வுடன் போராடுகிறார்கள் என்பதை காட்ட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். தமிழகத்தின் மீதும் தமிழ் மக்கள் மீதும் கொண்ட காள்புணர்வே கேரளா ஆட்சியாளர்களின் மன நிலை முல்லை பெரியாறு அணையை மட்டும் கைப்பற்றி விட்டால் ஐந்து மாவட்ட மக்களின் எதிர் காலத்தையும் தலைமுறையையும் வறுமைக்கு கொண்டு செல்ல சிறிது சிறிதாக திர்ட்டமிடுகிறது கேரளம்.
மக்கள் மத்தியில் நாளை வரும் ஆபத்துக்களை அயராது தளராது விளக்கி வைகோ, அப்பாஸ் , நெடுமாறன் போன்றோர்களின் பிரச்சாரங்கள் தான் இன்று மக்களை தன்னெழுச்சியாக போராட வைத்திருக்கிறது. இன்று இளைஞர்கள் முதல் எல்லா தரப்பும் முல்லை பெரியாறு அணையை காக்க உறுதி எடுத்திருப்பதை நினைக்கும் போது தமிழகம் உணர்வினை இழந்து போகவில்லை என்ற நிம்மதி கிடைக்கிறது.
முல்லை பெரியாறு அணையை காக்க என் பங்கிற்கு என்ன செய்யலாம் என நினைத்தது கொண்டிருக்கும் தமிழகத்தின் மீது அக்கறை கொண்ட நல்லோர்களுக்கு போராட்டத்தில் பங்கு பெற ஒரு வாய்ப்பு . கீழ் வரும் அலைபேசி எண்ணில் உங்களுடைய அலைபேசி மூலம் ஒரு தவறிய அழைப்பு (Missed Call )கொடுங்கள் உங்கள் நண்பர்கள் உறவினர்கள் ஆகியோரிடம் சொல்லி தவறிய அழைப்பை கொடுக்க வையுங்கள் . நம் எதிர் பார்ப்பு ஒரு கோடி அழைப்புகள் இதன் மூலம் ஓட்டு மொத்த தமிழகமும் அணையை காக்க உறுதியாக இருக்கிறது என்பதை உணர்ச்சியற்ற மத்திய அரசுக்கு நம் உணர்வுகளால் தெரிவிக்க முடியும்.
செயல் படுங்கள் தோழர்களே தவறிய அழைப்பு விடுங்கள் மறந்தும் தவறிய அழைப்பு(Missed Call) விட தவறி விடாதீர்கள். காலம் தாழ்த்த வேண்டாம் இன்றே செய்வோம் இப்போதே செய்வோம் . Missed Call கொடுக்க வேண்டிய அலை பேசி எண் - 928 1000 152.
Wednesday
உரிமைக்காக மதுரை நிரம்பி வருகிறது - நேரடி ரிப்போர்ட்
எழுதியது
Suresh Kumar
Labels:
தமிழகம்,
முல்லை பெரியாறு,
வைகோ
எழுதிய நேரம்
Wednesday, August 17, 2011
மதுரை காளவாசல் இதுதான் இன்றைய மதுரை மக்களின் பேச்சாக இருக்கிறது . ஆம் உரிமைக்காக மதுரை மக்களால் நிரம்பி வருகிறது . முல்லை பெரியாறு அணையை உடைக்க நினைக்கும் கேரளா அரசை கண்டித்தும் தமிழகத்திற்கு துரோகம் செய்யும் மத்திய அரசை கண்டித்தும் , முல்லை பெரியாறில் உரிமை காக்க தமிழக அரசு விரைந்து செயல்பட வலியுறுத்தியும் வைகோ தலைமையில் மதுரை காளவாசல் பகுதியில் பிரமாண்டமான உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது .
இங்கிலாந்து பொறியாளர் பென்னிகுயக் அவர்களால் தமிழர்களுக்காக தமிழர்களின் வியர்வையும் ரத்தமும் சிந்தி கட்ட பட்டது. 999 ஆண்டுகளுக்கு உரிமை பட்ட அணையை கேரள அரசு சதி செய்து உடைக்க முற்படுகிறது . கடந்த திமுக ஆட்சி தமிழர்களுக்கு எதிராக செயல் பட்ட காரணத்தால் தமிழர்களுக்கு சாதகமாக இருந்த நிலை இன்று கேரளாவிற்கு சாதகமாக ஆகி இருக்கிறது .
கேரளா அரசு இந்திய இறையாண்மைக்கு எதிராக போட்ட தீர்மானத்தை ஆதரித்து மத்திய அரசும் அதே போல் ஒரு தீர்மானத்தை போட முற்படுகிறது . இந்த நிலையில் இதுவரை காலமும் முல்லை பெரியாறில் தமிழர் உரிமைக்காக போராடி வருகிற வைகோ இன்று மீண்டும் உண்ணாவிரதம் இருக்கிறார் . முன்னர் நடந்த போராட்டங்கள் போல் அல்லாமல் இன்று மிக பெரிய எழுச்சி மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது .
மக்கள் வெள்ளம போல் திரண்டு உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்று வருகிறார்கள் . இதுவரை நேரம் வரை பதினையாயிரம் பேர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர் . பேரணி போன்று கட்சி கொடிகளை ஏந்தி வந்து கொண்டிருக்கிறார்கள் . இந்த போராட்டத்தை கொளத்தூர் மணி துவங்கி வைத்தார் . கத்தோலிக்க அமைப்புகள் இந்திய கம்முனிஸ்ட் கட்சி தலைவர்கள் விவசாய அமைப்புகள் வைகோவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அப்பாஸ் அவர்கள் முன்னிலை வகித்து வருகிறார்கள் .
Subscribe to:
Posts (Atom)





