Thursday

அய்யா கலைஞர் அடுத்து எப்போ எதிர்பார்க்கலாம்

இப்போ எல்லாம் கலைஞர் காமெடி கிங்கா வலம் வந்து கொண்டிருக்கிறார் ( வயசு கோளாறு என்று நீங்க நினைத்தால் நான் ஒன்றும் பண்ண முடியாது ) தினம் ஒரு காமெடி அடிக்கவில்லை என்றால் அவரால நிம்மதியாவே இருக்க முடியாது .

மூன்று நாட்களுக்கு முன்னர் தான் சின்னதா ஒரு காமெடி அடிச்சி அந்த சிரிப்பு அடங்கும் முன்னரே அடுத்த சிரிப்பு . நீங்க முன்னால எல்லாம் பல காமெடி அடிச்சிருந்தாலும் அப்போ உங்க உடன் பிறப்புகள் அத ஒரு சீரியஸ் மேட்டராக்கி கடைசிலா எல்லா படத்துல வடிவேலு அடிவாங்குற நிலைமையில் நீங்க ஆனீங்க அது என்னவோ உண்மை தான் . இப்போ தீடீர்னு  வேலை நிறுத்தம் அறிவிச்சீங்க .

அது எப்படி தல நீங்க தான் தமிழகத்தில முதல்வர் காங்கிரஸ் கட்சி தான் மத்தியில ஆட்சி செய்கிறது . உங்ககிட்ட நாங்க போர் நிறுத்தம் கேட்டோம் நீங்க வேலை நிறுத்தம் செய்தீங்க .  நீங்க அறிவிச்ச சில மணி நேரத்தில தங்கபாலுவும் ஆதரவு தந்தாரு . போர் நிறுத்தத்தில நடந்த கூத்த ஏற்கனவே பல பதிவர்கள் பதிந்து விட்டார்கள் .

நீங்க ஈழ தமிழர்களுக்காக வேலை நிறுத்தம் என்கிறீர்கள் உங்க மகன் ஸ்டாலின் சொல்றாரு ஈழ பிரச்னை ஒரு பிரச்சனையே இல்லை என்று .

யாருக்கு கோரிக்கை வச்சீங்க ? சிதம்பரம் வேற சொல்லியிருக்கிறார் இது மத்திய அரசுக்கு எதிராக இல்லை சும்மா வருத்தம் தெரிவிக்க தான் . நீங்களே ஆயுதம் கொடுத்து கொலை செய்து விட்டு வருத்தம் தெரிவிக்க விடுமுறை விட்டீங்களா ? எப்படி உங்களால இதெல்லாம் முடியுது . உங்களா மாதிரி ஒரு தலைவர் எங்களுக்கு கிடைக்க நாங்க பல புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும் . வேறு எந்த இனத்திற்கும் இப்படி ஒரு தலைவர் கிடைக்க  மாட்டாரு .

ஆமா இந்த காமெடிய நீங்க அடிக்கிறீங்களா இல்ல உங்கள வச்சி சோனியா காந்தி தான் காமெடி பண்ணுறாங்களா ? உன்ன்னாவிரதம் இருக்கும் பெண்களை மட்டும் அத்துமீறி உங்க காவல் துறைய வச்சி கைது செய்யும் நேரம் எப்படி உங்களுக்கு சுயநினைவிருக்கிறது . ஈழ போராட்டங்களைஎல்லாம் நல்ல விபரமாவே அடக்குறிங்களே    அப்போ எல்லாம் நீங்க நல்லா தானே இருக்கீங்க இப்போ மட்டும் என்ன ஆச்சு .

ஓன்று மட்டும் புரிகிறது நீங்கள் காமெடி அடிக்கவில்லை . ஆனால் துரோகம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து விட்டீர்கள் அதை நேர்த்தியாக செய்கிறீர்கள் . கட்டபொம்மனுக்கு எட்டப்பன் எப்படியோ அதே போல் நீங்கள் தமிழ் இனத்திற்கும் தமிழ் ஈழ தேசிய தலைவருக்கும் . ஒரே வருத்தம் வரலாற்றில் நீங்கள் துரோகியாய் இடம் பிடிக்க போகிறீர்களே .

எப்படியோ காவல் துறையை வச்சி ஒரு போது வேலை நிறுத்தத்தை நடத்தி விட்டீர்கள் . அடுத்து எப்போ ..................................?

1 கருத்துக்கள்:

Raj Selvaraj said...

Thamizhaga arasiyal vadhigal anaivarume dhrogigal dhaan, Jayalalitha nenjil kuttrinar, Karunanidhi mudhugil kuttrinar.

Post a Comment

Send your Status to your Facebook