Thursday

இனி எந்த முகத்தில் செய்தி வெளியிடுவீர்கள் நக்கீரன் கோபால் அவர்களே

நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே சங்க கால புலவரின் வரிகளோடும் பெயரோடும் தமிழகத்தில் வீறு நடை போட்டு கொண்டிருக்கிறது நக்கீரன் . ஆனால் இந்த நக்கீரனின் உண்மை முகம் பலருக்கு தெரிவதில்லை. பத்திரிக்கையின் விற்பனையை அதிகரிக்க பொய் செய்திகளை போடுவதில் கில்லாடி பத்திரிகை தான் இந்த நக்கீரன் . 
கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் நானும் ஒரு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழருமாக  பேசி கொண்டிருந்த பொது நக்கீரன் பற்றிய பேச்சு வந்தது . தோழர் சொன்னார் நக்கீரன் நடுநிலை தவறாத பத்திரிகை உண்மை செய்திகளை போடுவதில் நக்கீரன் மட்டுமே இன்று முன்னோக்கி நிற்கிறது, அரசியல் விமர்சனங்கள் மிகவும் நாடு நிலையோடு இருக்கும் என்று என்னோடு சொன்னார் . நான் அவரோடு விவாதம் செய்தேன் நக்கீரன் தன்னுடைய நடுநிலையை இழந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது .இருந்தாலும் அவர் வாதத்தில் விட்டு கொடுக்காமல் நக்கீரனை புகழ்ந்து பேசி கொண்டிருந்தார் . நான் அந்த நிலையில் ஒரு நாள் நீங்களும் புரிந்து கொள்வீர்கள் தோழரே என்று சொல்லி விட்டு அத்தோடு அந்த விவாதங்களை முடித்து கொண்டோம் . 

 பின்னர் சில ஆண்டுகள் கழித்து நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர் ஒரு நாள் பேசி கொண்டிருக்கும் போது நக்கீரன் இப்போது வாங்குகிறீர்களா என்றேன் . இல்லை அதன்   விமர்சனங்கள் இப்போது ஒரு பக்க சார்பாக இருக்கிறது . நடுநிலை என்பதே இல்லை என்றார் . உடனே நான் சொன்னேன் நீங்கள் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வந்த பின்னர் தான் நக்கீரனின் லட்சணம் உங்களுக்கு தெரிந்திருக்கிறது . நக்கீரன் பல ஆண்டுகளுக்கு முன்னரே நடுநிலை இழந்து விட்டது .நீங்கள் திமுக கூட்டணியில் இருந்ததால் சில நேரங்களில் உங்களை புகழ்ந்து எழுதிய நக்கீரன் நீங்கள் கூட்டணியை விட்டு வெளியே வந்தவுடன் நேர்மாறாக உங்களை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் )பற்றி தவறாக எழுதியது  அது தான் உண்மை. 
எப்போது அரசு பணம் திமுக சார்பாக நக்கீரனுக்கு கைமாறியதோ அப்போதிலிருந்தே நக்கீரன் தடம் மாறி விட்டடது .  கூட்டணி மாறும் அரசியல் தலைவர்களை பற்றி தவறான செய்திகளை போடுவதில் மிக முக்கியமான இடத்தில் இருப்பது இந்த பத்திரிகை . பொய்யான தகவல்களை பக்கத்தில் இருந்து பார்த்தது போல் செய்தி வெளியிடுவதில் வல்லவர் தான் இந்த கோபால் . திமுக கூட்டணியை விட்டு யார் வெளியே வந்தாலும் பல கொடிகள் கைமாறியதாக செய்திகள் போட்டு மக்களை குழப்புவதில் முதலிடம் நக்கீரனுக்கு தான் . 

ஒவ்வெரு தேர்தலிலும் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர் ஒரு புகை படம் இந்த பத்திரிகைகளில் வரும் ஜெயலலிதாவும் சசிகலாவும் சேர்ந்து நின்று ஒரு எஸ்டேட் பார்த்து கை காட்டுவது போல் அதில் இருக்கும் . கீழே செய்தி இப்போது ஜெயா வாங்கிய எஸ்டேட் . நான் மூன்று தேர்தலுக்கு இதே புகை படத்தை நக்கீரன் பத்திரிகையில் பார்த்திருக்கிறேன் .  அடுத்த சட்ட மன்ற தேர்தலில் கூட அந்த புகைப்படம் வரலாம் .புலானாய்வு என்ற பெயரில் தலைவர்களை மிகவும் கீழ் தரமாக விமர்சிப்பதில் முதலிடம் வகிக்கும் அதே பத்திரிகை இப்போது 2G  அலை வரிசை ஒதுக்கீட்டில்  ஊழல் செய்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் பினாமி தான் இந்த  நக்கீரன் இணை ஆசிரியர் காம ராஜ். பல நாட்களுக்கு முன்னரே பலருக்கு தெரிந்த இந்த பினாமி கதை சி பி ஐ நடத்திய சோதனை மூலமாக இப்போது தமிழகம் முழுவதும் தெரிந்து விட்டடது . நூறு கோடி ரூபாய்க்கு மேல் காமராஜிடம் ராஜா ஊழல் செய்த பணம் கைமாறியதாக தெரிகிறது .

ஒரு பத்திரிகை வைத்திருந்தால் போதும் அதன் மூலமாக கூட கொள்ளையடிக்கலாம் என்பதை செய்து காட்டியது நக்கீரன். இதன் விளைவாக தான் ராஜாவை அனைத்து பத்திரிக்கைகளும் ஊழல் நாயகன் என்று சொல்லி வந்த போதும் நக்கீரன் மட்டும் ராஜா நல்லவர் என்று திரும்ப திரும்ப சொல்லி வந்தது . மிக வேகமாக செய்திகளை கொடுக்கும் நக்கீரன் நேற்று நடைபெற்ற சோதனையை பற்றி தங்கள் இணைய தளத்தில் எந்த செய்தியும் போடவில்லை .   பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான் என சொல்வார்கள் இவ்வளவு நாளும் வேறு யாரையெல்லாமோ திருடன் என்று சொன்னவனே இன்று மிக பெரிய திருடனாக பிடி பட்டிருக்கிறான் . 



இனி எந்த முகத்தில் செய்தி வெளியிடுவீர்கள் நக்கீரன் கோபால் அவர்களே. ஜனநாயகத்தின் நான்காவது பெரிய தூண் பத்திரிகைகள் ஆனால் இன்று பத்திரிகைகள் ஆளும் கட்சிகள் போடு எச்சிலையை பொறுக்கி தின்று ஜால்ரா அடிப்பதாகவே இருக்கிறது . ஏற்கனவே அனைத்து மீடியாக்களும் ஒரு குடும்பத்தின் கையில் இருக்கும் போது நம்பி இருந்த நக்கீரன் பத்திரிக்கையும் இப்படி ஆகி விட்டதே என மக்கள் நக்கீரன் முகத்தில் காரி துப்புகிறார்கள் . 

30 கருத்துக்கள்:

Anonymous said...

சரியாக சொன்னீர்கள் நக்கீரன் கருணாநிதியோட பினாமி.

Yoga.s.FR said...

நக்கீரன் கோபால் மட்டுமல்ல அருட்திரு?!ஜெகத் கஸ்பார் அடிகளாரும் தான் பினாமி!!!பணமென்றால் பிணமும்.......................................................................................!!!!!!!

Anonymous said...

தினமலத்தின் நாற்றத்திற்கு முன் நக்கீரன் கொஞ்சம் பரவாயில்லை.தரமான நடு நிலைப் பத்திரிக்கையென்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே இல்லை என்பது தான் கணிப்பு. இலங்கையரசிற்குக் கைக்கூலியான் இந்து முதல் எந்த பத்திரிக்கையும் பல்லிளிக்கும் மாதிரிதான் உள்ளது.யாருக்கு என்பது கொஞ்சம் மாறும்,அவ்வளவு தான்.

Anonymous said...

அவருக்கு எங்கே இருக்கிறது முகம்?அது தான் முக்கால் வாசியை மீசை மூடி விட்டதே??????????????

bandhu said...

பொது வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா..

தாராபுரத்தான் said...

சரியாக சொல்லியுள்ளீர்கள்.

Anonymous said...

well said.

Anonymous said...

அட அடா யாரைத் தான் நம்புவதோ? பணத்திற்காக எதுவும செய்ய நினைக்கும் இவர்களை புறமதள்ளுவோம்.

Anonymous said...

தினமலர் எவனுக்கு ஜால்ரா அடித்தது? எவன் காசை கொள்ளை அடித்தது? எவனை ஏமாற்றியது? எவனுடன் கூட்டுக் களவாணி செய்தது?

சும்மாவாச்சும் 3/4 பசங்க தினமலரை திட்டுகிறார்கள்.

Suresh Kumar said...

Yoga.s.FR said...

நக்கீரன் கோபால் மட்டுமல்ல அருட்திரு?!ஜெகத் கஸ்பார் அடிகளாரும் தான் பினாமி!!!பணமென்றால் பிணமும்.......................................................................................!!!!!!!
//////////////////

சரியாக சொன்னீர்கள் இந்த 2G பணத்திற்காக தான் ஈழ தமிழர்கள் இன படுகொலை செய்ய பட்ட போது கருணாநிதிக்கு வக்கலாத்து வாங்கி கொண்டிருந்தார்கள் .

sivakumar said...

ஆம் மிகவும் உணமை.

மிகவும் திறமையாக, ஈழப்போர் நடக்கும்போது பரபரப்பான பொய்ச்செய்திகளாக வெளியிட்டுக் காசு பார்த்தது நக்கீரன். விளம்பரத்துக்காக பொய்யை செய்தியை வெளியிடுவதில் நக்கீரன் ஒரு சன் தொலைக்காட்சிக்கு நிகரானது.

Suresh Kumar said...

தமிழ் வினை said...

ஆம் மிகவும் உணமை.

மிகவும் திறமையாக, ஈழப்போர் நடக்கும்போது பரபரப்பான பொய்ச்செய்திகளாக வெளியிட்டுக் காசு பார்த்தது நக்கீரன். விளம்பரத்துக்காக பொய்யை செய்தியை வெளியிடுவதில் நக்கீரன் ஒரு சன் தொலைக்காட்சிக்கு நிகரானது.
//////////////////////

ஏதோ ஒரு அதிசயம் நடக்க போவது போல் செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் போராட்ட குணத்தை மழுங்கடித்த்தில் முதன்மையாக திகழ்ந்தது . திமுகவின் நேரடி பார்வையில் எதிர் கட்சிகளின் போராட்டங்களை திசை திருப்பும் வகையில் செய்திகளை வெளியிட்டதில் முதன்மையாக திகழ்ந்தது .

கோவி.கண்ணன் said...

நக்கீரன் பற்றிய உங்கள் கருத்து மிகச்சரி. திமுக ஜால்ரா பத்திரிக்கையாகிவிட்டது, காலத்தின் கட்டாயம் இவர்களைப் போன்றோருக்கும் வரும் போல. நான் மூன்றாடுகளாக நக்கீரன் காசு கொடுத்து வாங்கிப்படிப்பதை நிறுத்திவிட்டேன்

Suresh Kumar said...

கோவி.கண்ணன் said...

நக்கீரன் பற்றிய உங்கள் கருத்து மிகச்சரி. திமுக ஜால்ரா பத்திரிக்கையாகிவிட்டது, காலத்தின் கட்டாயம் இவர்களைப் போன்றோருக்கும் வரும் போல. நான் மூன்றாடுகளாக நக்கீரன் காசு கொடுத்து வாங்கிப்படிப்பதை நிறுத்திவிட்டேன்
////////////////////////

காசு வாங்கி விட்டு ஒரு பொய்யை உண்மை ஆக்குவதில் கில்லாடி பத்திரிகை இப்போது அதன் முகமூடி கிழிந்து விட்டது . நன்றி

Mugundan | முகுந்தன் said...

அவர்களுக்கு "பொய்" தானே முகம்.
அதனால் சூடு,சொரணை இருக்காது.

தமிழனின் தலையெழுத்து, நல்ல நாளேடு இல்லை,
உண்மையைச் சொல்ல ஊடகங்களும் இல்லை.

guna said...

தினமலர் எவனுக்கு ஜால்ரா அடித்தது? எவன் காசை கொள்ளை அடித்தது? எவனை ஏமாற்றியது? எவனுடன் கூட்டுக் களவாணி செய்தது?

சும்மாவாச்சும் 3/4 பசங்க தினமலரை திட்டுகிறார்கள்.ஆம் மிகவும் உணமை.
நக்கீரன் கோபால் மட்டுமல்ல அருட்திரு?!ஜெகத் கஸ்பார் அடிகளாரும் தான் பினாமி!!!பணமென்றால் பிணமும்.......................................................................................!!!!!!!

Suresh Kumar said...

எண்ணத்துப்பூச்சி said...

அவர்களுக்கு "பொய்" தானே முகம்.
அதனால் சூடு,சொரணை இருக்காது.

தமிழனின் தலையெழுத்து, நல்ல நாளேடு இல்லை,
உண்மையைச் சொல்ல ஊடகங்களும் இல்லை.
///////////////////////////////

நடுநிலை என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு தமிழக பத்திரிகைகள் இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும் நடுநிலை தவறாது பத்திரிக்கைகள் வர வேண்டும் மக்கள் அவற்றை இனங்கண்டு ஆதரிக்க வேண்டும் . இது போன்ற மஞ்சள் பத்திரிக்கைகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் .

Suresh Kumar said...

guna said...

தினமலர் எவனுக்கு ஜால்ரா அடித்தது? எவன் காசை கொள்ளை அடித்தது? எவனை ஏமாற்றியது? எவனுடன் கூட்டுக் களவாணி செய்தது?

சும்மாவாச்சும் 3/4 பசங்க தினமலரை திட்டுகிறார்கள்.ஆம் மிகவும் உணமை.
நக்கீரன் கோபால் மட்டுமல்ல அருட்திரு?!ஜெகத் கஸ்பார் அடிகளாரும் தான் பினாமி!!!பணமென்றால் பிணமும்.......................................................................................!!!!!!!
////////////////////

நீங்கள் சொன்ன கடைசி வாக்கியங்களை ஏற்று கொள்ளலாம் . ஆனால் தினமலர் யாருக்கும் ஜால்ரா அடிக்க வில்லை உண்மை தான் . ஆனால் ஈழ படுகொலை நடைபெற்ற போது முழுவதுமாக சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவாக செயல் பட்டது. தின மலரை ஒரு தமிழ் பத்திரிகை என்றே சொல்ல முடியாது . தலைப்பு செய்தியே ஆங்கிலத்தில் தான் இருக்கும்

venkat said...

//இனி எந்த முகத்தில் செய்தி வெளியிடுவீர்கள் நக்கீரன் கோபால்\\


சாயம் வெளுத்துவிட்டது .

Suresh Kumar said...

venkat said...

//இனி எந்த முகத்தில் செய்தி வெளியிடுவீர்கள் நக்கீரன் கோபால்\\


சாயம் வெளுத்துவிட்டது .
///////////////////


எவ்வளவு நாள் தான் சாயத்திலே இருக்க முடியும். என்றோ ஒரு நாள் வெளுத்து தானே ஆகும். அது இப்போது நடந்திருக்கு .
நன்றி

விடுதலை said...

நக்கீரன் கோபால் மட்டுமல்ல அருட்திரு?!ஜெகத் கஸ்பார் அடிகளாரும் தான் பினாமி!!!பணமென்றால் பிணமும்.......................................................................................!!!!!!!
//////////////////

திமுகாவின் அரசியல் பத்திரிக்கைதான் நக்கி ரான்

Suresh Kumar said...

விடுதலை said...

நக்கீரன் கோபால் மட்டுமல்ல அருட்திரு?!ஜெகத் கஸ்பார் அடிகளாரும் தான் பினாமி!!!பணமென்றால் பிணமும்.......................................................................................!!!!!!!
//////////////////

திமுகாவின் அரசியல் பத்திரிக்கைதான் நக்கி ரான்
/////////////////////


நடுநிலை என்ற முகமூடி அணிந்து வந்ததால் மக்களுக்கு தெரியாமல் இருந்தது . இப்போது ஊர் ஊராக நக்கீரனின் லட்சணம் நாறுகிறது.

ராவணன் said...

நக்கீரன் கோபாலா? அருப்புக்கோட்டையில் மாமா வேலை பார்த்தவர்.எனக்குப் பல ஆண்டுகளாக இந்த கோவாலைத் தெரியும். இந்த நக்கீரன் நிருபர்கள் எப்படி செய்தி சேகரிப்பார்கள் தெரியுமா? எங்கும் செல்லாமலே வீட்டில் இருந்தே அனைத்தையும் எழுதுவார்கள். நான் சென்னையில் நேரடியாகக் கண்டுள்ளேன்.கோவாலுக்கு கருணாநிதி கும்பலுடன்,குறிப்பாக ராசாத்தி கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டவுடன் அசுர வளர்ச்சி. அந்த கோவாலுவின் பத்திரிக்கை பின்ன எப்படி இருக்கும்.

Anonymous said...

Junior Vikatan for Amma

Nakkeeran for Ayya

ஜெறின் said...

நிஜத்தை மட்டுமே போட்டாலும் பத்திரிக்கை நடத்த முடியாது,,,

மக்கள் இப்போது பொய்யை தான் நம்புகிறார்கள் என்பதை நன்கு அறிந்து கொண்டு அவர்கள் தன் பணியை தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.


நக்கீரன் கொட்டத்தை வெளிபடுத்தியது இந்த பதிவு...

வாழ்த்துக்கள்...

Suresh Kumar said...

பொய்யை போட்டு பத்திரிகை ஓட வைப்பதில்லை வாங்கிய பணத்திற்கு பத்திரிக்கை மூலம் வேலை செய்வது . இந்தியாவிலே மிக பெரிய ஊழல் இதில் ஒரு பத்திரிக்கையும் சம்மந்த பட்டிருக்கிறது என்றால் எங்கே நம்பக தன்மை இருக்கிறது . நன்றி ஜெரின்

Anonymous said...

தினமலர் எவனுக்கு ஜால்ரா அடித்தது? எவன் காசை கொள்ளை அடித்தது? எவனை ஏமாற்றியது? எவனுடன் கூட்டுக் களவாணி செய்தது?// boss for how long you are reading dinamalar??? for the last few months it supports dmk. before that it was against dmk. when tamil people died in lanka, both dinamalar and hindu didnt open their bloody mouth..... also the english news channels.

Anonymous said...

as a sensible persons we should not depend on magazines. we should judge all the actions based on politicians activities. WE...THE EDUCATED AND PURE PEOPLE ARE THE REAL JUDGES..

Anonymous said...

for more news about naakeran visit http://www.savukku.net/

Anonymous said...

dinamar pola oru tamilina virotha pathirikai veru ethuvum kidaiyathu .athu oru pacchonthi pathirikai.ippa jayavukku jaalraa adikirathu.rajive gandhi to present 2011 avargalukku etthanai mugam?????????

Post a Comment

Send your Status to your Facebook