Friday

சோனியாவிற்கு வேண்டுமென்றால் மகிழ்ச்சியாக இருக்கலாம்

மனசாட்சினா என்ன விலை எந்த கடையில கிடைக்கும் என்று கேட்கும் அளவிற்கு இன்றைய சமூக சூழ்நிலை மனிதர்களை மாற்றி இருக்கிறது. நான் நன்றாக இருந்தால் போதும் என் குடும்பம் நன்றாக இருந்தால் போதும் என்ற மனநிலையே இன்று எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது . மற்றவர்களை கடவுள் பார்த்து கொள்வார் என்று அந்த இடத்திலிருந்து கடவுள் மீது பழியை போட்டு தப்பித்து கொள்கிறார்கள் . 
அரசன் ஏழையாக இருந்தால் தான் மக்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்று சொல்வார்கள் ஆனால் இன்று மக்களை ஆளுகிறவர்கள் கோடீஸ்வரராக இருக்கிறார்கள் அப்படி இருக்கும் போது மக்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும் . அறிவியல் வளர வளர மனித குலமும் தங்கள் அறிவில் வளர்ந்து தன்னம்பிக்கையோடு மற்றவர்களை கையேந்தாமல் சுய உழைப்பில் வாழ வேண்டும் ஆனால் இன்றோ சூழ்நிலை மாறி விட்டது . ஏதோ ஒன்றுக்கு அடிமையாவது போல் தமிழக மக்கள் இலவசங்களுக்கு அடிமையாகி விட்டனர் . அரசும் மக்களை கவுரவ பிச்சைகாரர்கள் ஆக்கி விட்டது . பிச்சைக்காரனுக்கு பிச்சை போட்டால் அவன் எப்படி நமக்கு அடிமையாக இருப்பானோ அதே நிலை போல் ஓட்டு மொத்த தமிழகமும் மாறி விட்டதோ என தோன்றுகிறது . 



ஜனநாயகத்தின் ஒரு தூணாக விளங்குகின்ற பத்திரிகைகள் இன்று நடிகைகளின் கவர்ச்சி படங்களோடு தங்கள் வருமானத்தை ஈட்டி கொள்கின்றனர் . தமிழக பத்திரிகைகள் கள்ள காதலனால் காதலி கொலை என்ற சம்பவங்கள் இருந்தால் முதல் பக்கத்தில் போட்டு ஐந்து பத்தி வரை அவன் அவளை முதலில் சந்தித்த போது அப்படி உறவு நடந்தது , பின்னர் அங்கெ உறவு நடந்தது என்று பலனா புத்தகங்களுக்கு ஈடாக கதை எழுதுவார்கள் . அதை படிப்பவர்களுக்கோ கொலை செய்த குற்றம் தெரிவதை விட எப்படி அவன் அவளோடு தொடர்பு கொண்டான் என்ற சிந்தனை தான் இருக்கும் . உரிமை மீறல்கள் போர் குற்றங்கள் இவற்றை பதிவு செய்து மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை உண்டாக்கும் எண்ணம சற்றும் இல்லாமல் இருக்கின்றன .

இப்போது சானல் 4 தொலைக்காட்சியில் இலங்கை ராணுவத்தால் கற்பழித்து கொலை செய்த காணொளிகள் ஒளிபரப்ப பட்டன . கற்பிற்கு மரியாதை கொடுக்கும் தமிழ் சமூகத்தில் இப்படி ஒரு கொடூரம் நடந்திருக்கிறது என்றால் அதை செய்தவர்கள் மனித பிறவிகளாக இருக்க முடியுமா . கோவையில் இளம் பெண்ணை கடத்தி கற்பழித்து கொலை செய்த கொடூரன் மீது ஏற்பட்ட கோபம் ஏழு தமிழ் பெண்களை உடம்பில் ஒரு துணி இல்லாமல் கொடூரமான முறையில் கொலை செய்த சிங்கள இனவெறியர்கள் மீது ஏன் வர வில்லை . காசுக்க்காகவும் பதவிக்காகவும் தமிழ் இனத்தையே காட்டி கொடுத்து என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என காட்டும் அரசியல் தலைவர்களும் தமிழ் சமுதாயத்தில் மட்டும் தான் இருக்க முடியும் .

உலகத்திலே  மிக பெரிய அரக்கனாகவும் போர் குற்றவாளியாகவும் திகழும் மனித குலத்திலே சேர்க்க முடியாத சிங்கள இனவெறியன் ராஜபட்சே செல்லும் இடமெல்லாம் விரட்ட புலம் பெயர் தமிழர்கள் தயாராகி விட்டனர் . அதன் எதிரொலி தான் எதற்காக லண்டனுக்கு இந்த அரக்கன் சென்றானோ அதை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது . இங்கிலாந்தில் புலி கொடியேந்தி போராட அந்நாட்டு காவல் துறை அனுமதி கொடுக்கிறது . ஆனால் தமிழர் பிரச்சனைக்காக தமிழர்கள் போராடினால் கைது செய்கிறது தமிழக அரசு மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத அரசு என்ன அரசு . 

உலக மக்கள் பார்வையில் தூக்கிலிட பட வேண்டியவன் தான் இந்த ராஜ பட்சே . ஆனால் இந்திய அரசோ அவனை கவுரவ படுத்துகிறது . இங்கிலாந்து காவல் துறை ராஜ பக்சேவை கைது செய்யலாமா என ஆராய்ந்து வருகிறது . ஹிட்லர் , முசோலினி , இடி அமின் போன்ற சர்வாதிகாரிகளுக்கு அடுத்த படியாக அதை விட பல மடங்கு போர் குற்றங்கள் புரிந்த போர் குற்றவாளியை இந்தியாவில் கவுரவ படுத்தியது இந்தியாவிற்கே அவமானம் . சோனியாவிற்கு சோனியாவிற்கு வேண்டுமென்றால் மகிழ்ச்சியாக இருக்கலாம் . ஏனெனில் முசோலினி பிறந்த மண்ணில் பிறந்தவள் தானே. தமிழர்களின் கலாசாரம் கற்பு பற்றி என்ன தெரியும் .   

புலம் பெயர் தமிழர்களோடு தமிழக தமிழர்களும் ஓன்று பட்டு போராடினால் இன்னும் சில காலங்களில் தமிழ் பெண்களை கற்பழித்தும் போர் குற்றங்கள் புரிந்த சிங்கள இனவெறியர்களை தண்டிக்க முடியும் அதற்கான உதாரணம் தான் ராஜபட்சேவிற்கு தமிழர்களால் லண்டனில் ஏற்பட்ட அவமானம் . ஓடாத மானும போராடாத இனமும் நிம்மதியாய் வாழ முடியாது . இதே நிலை நாளை நமக்கும் வரலாம் . ஏன் காங்கிரஸ் தோழர்களுக்கு கூட வரலாம் .....

1 கருத்துக்கள்:

raja said...

நண்பனே பிஹாரில் ராகுலின் கீழ்உடை அவிழ்ந்து மானம் கப்பலெறிவிட்டது.. ஸ்பெக்ட்ரம் 60% பணத்தை ஒதுக்கிய சோனியா... விரைவில் பாரளுமன்ற கூட்டுக்குழுவிடம் அகப்படுவார்.. அப்பொழுது அவரை ரோம் சென்றுதான் கைது செய்யவேண்டியிருக்கும்.. கவலைபடாதீர்கள் நம் விடுதலைவீரர்கள் வீராங்கனைகள் தியாகங்கள், அப்பாவிமக்களின் உயிர்ப்பலிகள் யாரையும் சும்மாவிடாது.. தளராதீர்கள் காலம் திரும்பும்..அதுவே இயற்கை.

Post a Comment

Send your Status to your Facebook