• பேய், பிசாசு உடம்பினுள்...

    இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....

  • உங்கள் மேல் எதற்கு ...

    தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் ...

  • யூத் புல் விகடனில் ...

    யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் ...

Showing posts with label புத்தர். Show all posts
Showing posts with label புத்தர். Show all posts

Sunday

புத்தர் உயிரோடிருந்தால் சிங்கள இனவெறிக்கு எதிராக ஆயுதமேந்தியிருப்பார்

புத்த நாடுகள் அனைத்தும் சேர்ந்து இலங்கையை காப்பாற்ற வேண்டுமாம் சிங்கள இனவெறி அரசின் தலைவர் மகிந்தா கோருகிறார் . ஒரு புறம் தமிழர்கள் பூமியை ஆக்கிரமித்து சிங்கள குடியேற்றங்களை அரங்கேற்றிவரும் சிங்கள இனவெறி அரசு இப்போது புத்த நாடுகள் சேர்ந்து இலங்கையை மேற்குலக நாடுகளின் சதியிலிருந்து காப்பாற்ற வேண்டும் என அறிக்கை விட்டிருக்கிறார் . 

முதலில்  விடுதலை புலிகளுக்கு எதிரான போர் என மேற்குலக நாடுகளின் துணையுடன் சேர்ந்து போர் நடத்திய சிங்கள இனவெறி அரசு 50,000 க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை கொலை செய்தது . மற்ற தமிழர்களை திறந்த வெளி சிறைகளில் அடைத்து சொந்த நிலத்திலே அகதியாகவும் ராணுவத்தின் கண் காணிப்பிலும் சிறை வைக்க பட்டனர் . போர் முடிவடைந்தது என்று உலக நாடுகளுக்கு அறிவித்த சிங்கள அரசு மக்களை தங்கள் சொந்த நிலத்தில் குடியேற்ற தயங்குகிறது . மாறாக சிங்கள மக்களை தமிழர்கள் பூமியில் குடியேற்றி வருகிறது .

யாழ் பாணம் தொன்று தொட்டு வரலாற்று சிறப்புமிக்க தமிழர் பூமி . இங்கே சிங்கள இனவெறி அரச தலைவரின் மனைவி மகன் சமீபத்தில் வந்து புத்த கோயிலுக்கு அடிக்கல் நாட்டி சென்றது குறிப்பிட தக்கது . கடைசி இரண்டு நாட்களில் முள்ளி வாய்க்கால் பகுதியில் நடைபெற்ற இன படுகொலையை போல் நிகழ் காலத்தில் உலகில் எங்கேயும் நடக்கவில்லை . நம் கண் முன்னே ஆயிர கணக்கான உறவுகளை சிங்கள இன வெறி அரசு கொலை செய்து வெளியுலகத்திற்கு தெரியாதவாறு எரித்து சாம்பலை நந்தி கடலிலே கலந்து விட்டது .

அகதி முகாம்கள் எல்லாம் வதை முகாம்கள் ஆக்க பட்டது . ஒரு இன படுகொலைகளை சர்வதேசத்தின் ஒத்துழைப்போடு நடத்தியது . புலம் பெயர் தமிழர்களின் போராட்டங்கள் அவர்கள் வாழும் நாடுகளை அசைக்கிறது . இதையடுத்து சில நாடுகள் மனிதாபி மான அடிப்படையில் போர் குற்றங்கள் விசாரிக்க பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன . ஏற்கனவே ரத்த கறை  படிந்த இந்தியா உட்பட சில நாடுகளின் ஒத்துழைப்போடு ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்ற பட விருந்த தீர்மானத்தை தோற்கடிக்க செய்தது . இப்போது அடுத்த கட்டமாக தான் இலங்கை ஒரு சிங்கள நாடு இலங்கை ஒரு புத்த தேசம் என உலகிற்கு உரக்க சொல்வது போல் புத்த நாடுகள் காப்பாற்ற வேண்டும் என அரச தலைவர் வேண்டுகிறார் .

புத்த நாடுகள் புத்தனின் கொள்கைகளிலிருந்து மாறுபட்டு விட்டது . புத்தர் உயிரோடிருந்திருந்தால் சிங்கள இனவெறிக்கு எதிராக ஆயுதமேந்தியிருப்பார் .
Read More

Send your Status to your Facebook