Friday

கைது செய்ய கூடும் என்ற அச்சத்தால் லண்டன் பயணம் ரத்து செய்த ராஜபக்சே

லண்டன் பயணத்தின் போது கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தால் லண்டன் பயணத்தை ரத்து செய்துள்ளதாக தெரிகிறது. இலங்கையில் சிங்கள இனவெறியர்களால் நடத்தப்பட்ட இன படுகொலையில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர். இதில் ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் பலர் ஈவு இரக்கமின்றி சர்வதேச போர் விதிகளை மீறி ஒரு மிக பெரிய இன படுகொலையை திட்டமிட்டு நடத்தியது.

உலகம் முழுவதும் இலங்கை ராணுவத்தின் போர் விதி மீறலுக்கு எதிராகவும் இனபடுகொலைக்கு எதிராகவும் புலம் பெயர் தமிழர்களால் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சிங்கள இனவெறியன் ராஜபக்சே வை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் அமைப்புகள் முன்னெடுத்து போராடுகின்றனர் .

இந்த நிலையில் ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபை தலைவர் பாண் கீ மூன் அவர்களால் இலங்கை மீதான போர் குற்றங்கள் விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது . தமிழ் அமைப்புகளாலும் ராஜபக்ஷேவை கைது செய்து விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என தமிழர் அமைப்புகளால் வழக்கு தொடர பட்டிருக்கிறது. தமிழர் அமைப்புகள் ராஜபக்சே லண்டன் வந்தால் நீதிமன்றத்தை அணுகவும் தீர்மானித்துள்ளதாக உளவு துறை தகவல் கொடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் லண்டன் சென்றால் லண்டன் காவல் துறை மூலம் கைது செய்ய கூடும் என்ற அச்சத்தால் லண்டன் பயணத்தை ரத்து செய்துள்ளதாக தெரிகிறது. தப்பு செய்தவன் தண்டனை பெற்று தான் தீர வேண்டும் . இது தான் நியதி காலம் தாண்டினாலும் தண்டனை தாண்டாது . உலக தமிழர்கள் ஒற்றுமையுடன் ஒரே பாதையில் இலங்கை இனவெறியனுக்கு எதிராக போராடும் பட்சத்தில் சிங்கள இனவெறியர்களுக்கு தண்டனையும் கிடைக்கும். தமிழர்களின் உரிமையும் வெற்றி பெறும் . நம்பிக்கையோடு போராடுவோம் .

0 கருத்துக்கள்:

Post a Comment

Send your Status to your Facebook