• பேய், பிசாசு உடம்பினுள்...

    இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....

  • உங்கள் மேல் எதற்கு ...

    தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் ...

  • யூத் புல் விகடனில் ...

    யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் ...

Showing posts with label ஐக்கிய நாடுகள். Show all posts
Showing posts with label ஐக்கிய நாடுகள். Show all posts

Friday

கைது செய்ய கூடும் என்ற அச்சத்தால் லண்டன் பயணம் ரத்து செய்த ராஜபக்சே

லண்டன் பயணத்தின் போது கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தால் லண்டன் பயணத்தை ரத்து செய்துள்ளதாக தெரிகிறது. இலங்கையில் சிங்கள இனவெறியர்களால் நடத்தப்பட்ட இன படுகொலையில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர். இதில் ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் பலர் ஈவு இரக்கமின்றி சர்வதேச போர் விதிகளை மீறி ஒரு மிக பெரிய இன படுகொலையை திட்டமிட்டு நடத்தியது.

உலகம் முழுவதும் இலங்கை ராணுவத்தின் போர் விதி மீறலுக்கு எதிராகவும் இனபடுகொலைக்கு எதிராகவும் புலம் பெயர் தமிழர்களால் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சிங்கள இனவெறியன் ராஜபக்சே வை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் அமைப்புகள் முன்னெடுத்து போராடுகின்றனர் .

இந்த நிலையில் ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபை தலைவர் பாண் கீ மூன் அவர்களால் இலங்கை மீதான போர் குற்றங்கள் விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது . தமிழ் அமைப்புகளாலும் ராஜபக்ஷேவை கைது செய்து விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என தமிழர் அமைப்புகளால் வழக்கு தொடர பட்டிருக்கிறது. தமிழர் அமைப்புகள் ராஜபக்சே லண்டன் வந்தால் நீதிமன்றத்தை அணுகவும் தீர்மானித்துள்ளதாக உளவு துறை தகவல் கொடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் லண்டன் சென்றால் லண்டன் காவல் துறை மூலம் கைது செய்ய கூடும் என்ற அச்சத்தால் லண்டன் பயணத்தை ரத்து செய்துள்ளதாக தெரிகிறது. தப்பு செய்தவன் தண்டனை பெற்று தான் தீர வேண்டும் . இது தான் நியதி காலம் தாண்டினாலும் தண்டனை தாண்டாது . உலக தமிழர்கள் ஒற்றுமையுடன் ஒரே பாதையில் இலங்கை இனவெறியனுக்கு எதிராக போராடும் பட்சத்தில் சிங்கள இனவெறியர்களுக்கு தண்டனையும் கிடைக்கும். தமிழர்களின் உரிமையும் வெற்றி பெறும் . நம்பிக்கையோடு போராடுவோம் .
Read More

Tuesday

ஐநாவும் டீக்கடை பெஞ்சும்

இரண்டாம் உலக போரையடுத்து 1945 ஆம் ஆண்டு  உலக நாடுகள் சேர்ந்து உலக நாடுகளை கொண்ட அமைப்பாக உருவாக்கப்பட்டது ஐக்கிய நாடுகள் சபை . இதில் உலகின் அனைத்து நாடுகளும் உறுப்பினராக உள்ளன . ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கமே சர்வதேச சட்ட திட்டங்கள் , சர்வதேச பாதுகாப்பு , சர்வதேச பொருளாதார மேம்பாடு , சமூக சேவைகள் , மனித உரிமைகளை நிலை நாட்டுவது , மனித உரிமை மீறல்களை தடுப்பது , உலகத்தில் அமைதியை ஏற்படுத்துவது போன்ற காரணங்களுக்காக தொலை நோக்கு பார்வையோடு உருவாக்கப்பட்டது . உலக நாடுகளால் ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு செயலாளர் தேர்ந்தெடுக்க படுவார் .

இதில் பொதுச்சபை( General Assembly  ) , பாதுகாப்பு சபை(Security Council), பொருளாதார மற்றும் சமூக சபை( Economic and Social council) ,அனைத்துலக நீதிமன்றம்(International Court of Justice ) போன்ற உள்  அமைப்புகள் காணபடுகின்றன . பாதுகாப்பு சபையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்க படுகின்றன ஆனால் அமெரிக்க , சைனா , ரசியா , இங்கிலாந்து ,பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கின்றன . அது மட்டுமல்லாது இந்த ஐந்து நாடுகளுக்கும் பாதுகாப்பு சபையில் தனி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது .

உலகத்தில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் பாதுகாப்பு சபையில் விவாதம் நடைபெற்று முடிவுகள் எடுக்க படும் . ஒரு சிறுபான்மை இனம் தாக்கபட்டாலோ அத்துமீறி இன்னொரு நாட்டின் மீது ஒரு நாடு படைஎடுத்தாலோ விவாதங்கள் நடத்தி குறிப்பிட்ட நாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க படும் . ஆனால் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் நினைத்தால் சிறுபான்மையினரை ஒடுக்கலாம் மனித பேரவலம் ஏற்படுத்தலாம் .

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையை பார்த்தால் ஐக்கிய நாடுகள் சபை மூலம் ஒவ்வெரு மனிதன் ஒவ்வெரு இனம் இவைகளின் உரிமைகள் நிலை நாட்ட படும் என்று மேலோட்டமாக இருக்கும் . ஆனால் ஐக்கிய நாடுகள் சபை ஒரு டீக்கடை பெஞ்சு ரேஞ்சிக்கு தான் இருக்கிறது . உலகத்தின் கண்களுக்கு முன்னாலே லட்சகணக்கான மக்கள் இனவெறி அரசால் கொல்ல   பட்ட போது  ஐக்கிய நாடுகளும் அதன் செயலாளரும் அறிக்கை மட்டுமே கொடுத்து கொண்டிருந்தனர் . ஆனால் கண் முன்னே இறந்து கொண்டிருக்கும் உயிர்களை காப்ப்பாற்ற காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்க வில்லை .

இலங்கையில் பெரும்பான்மை மக்களால் பறிக்க பட்ட தமிழர்களின் உரிமைகளை பெற்று கொடுக்கவும் இல்லை . உலகத்திலே மிக பெரிய மனித பேரவலம் இலங்கை தீவிலே நடைபெற்ற போதும் , நடைபெற்றிருக்கின்ற போதும் ஐக்கியி நாடுகள் சபையால் ஒன்றுமே செய்ய முடியவில்லை . ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் இலங்கை பேரவலத்தை நீங்கள் ஏன் தடுக்க வில்லை என்பதற்கு நான் இருபதுக்கு மேற்பட்ட கண்டன அறிக்கையை கொடுத்து விட்டேன் ஒரு ஐக்கிய நாடுகள் சபை பொது செயலாளராக என்னால் இதைதான் செய்ய முடியும் என்கிறார் .( இதைதான் நம்மூரு முதல்வரும் சொல்லுகிறார் )

இப்படி எதுவுமே செய்ய முடியாத ஐக்கிய நாடுகள் சபையினால் மனிதர்களுக்கு என்ன பயன் . டீக்கடையில் டீ குடித்து கொண்டிருக்கும் போது நடைபெறும் விவாதம் போன்றது தான ஐக்கியாய நாடுகள் சபையா ? உலகத்திற்கு தெரிந்தே ஒரு இனவெறி நாடு இன்னொரு இனத்தின் மீது படுகொலை நடத்தும் போது தடுக்க முடிய வில்லையெனில் ஐக்கிய நாடுகள் சபையே தேவையில்லை தானே .
Read More

Send your Status to your Facebook