Friday

உலக ஆளுங்கட்சி தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக

கலைஞர் டிவி அலுவலகத்தில் நேற்று இரவு முதலே சிபிஐ சோதனை நடந்து வருகிறது.  2 G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில்   ஒரு லட்சத்தி எழுபத்தாறு கோடி ருபாய் ஊழல் நடந்துள்ளது நூறு கோடி மக்கள் மத்தியிலும் மிக பெரிய அதிர்ச்சி அலையை உருவாக்கி இருக்கிறது. தமிழ் நாட்டிற்கு இரண்டு ஆண்டுகள் பட்ஜெட் போடகூடிய பணம் ஊழல் செய்ய பட்டுள்ளது என்றால் யாருக்கு தான் அதிர்ச்சி உருவாகாது. 

தமிழ் தொலை காட்சிகள் பொதுவாகவே உலக வரலாற்றில் முதன் முறையாக  என்ற வார்த்தைகளை புதிய படங்கள் ஒளிபரப்பும் பொது பயன்   படுத்தும். அதே போல இந்த ஊழலும் உலக வரலாற்றில் முதன் முறையாக ஒரு தமிழனால் செய்யபட்டிருக்கு என்னும் போது வெட்க படாமல் வேறு என்ன செய்ய. மிக பெரிய கோடீஸ்வரர்களால் கூட இரண்டு மாதங்களில்  உருவாக்க முடியாத தொலைக்காட்சி சேனலை இருபது நாட்களில் கருணாநிதி கலைஞர் டிவி என்று உருவாக்கிய போது எல்லோரும் ஆச்சரிய பட்டார்கள்.  அதை தொடர்ந்து பல சேனல்கள் உருவாக்க பட்டு அனைவரையையும் ஆச்சச்சரியத்தில் ஆழ்த்தியது கலைஞர் டிவி நிர்வாகம் . 
வேறு எந்த வித வருமானமும் இல்லாத கருணாநிதி , கனிமொழி , தயாளு அம்மாள் ஆகியோரால் இத்தனை கோடி பணம் எங்கிருந்து வந்தது? இப்போது தான் ஒவ்வென்றாக வெளிச்சத்திற்கு வருகிறது. இந்தியாவை கொள்ளையடித்து மிக பெரிய ஊழலுக்கு எல்லாம் சவால் விட்டு இமாலய ஊழல் செய்து கலைஞர் டிவி உருவாக்க பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாது இன்னும் பல கோடி ஊழல் பணம் இந்த குடுமத்தில் அங்காங்கே இருக்கும்.  

சோனியா தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2004  பதவி ஏற்றது முதலே இந்தியா முழுவதும் ஊழல் செய்யும் வழியை ஒவ்வெரு அமைச்சராக தேடி பிடித்தனர். ராஜா ஊழல் செய்துள்ள இதே துறையில் முதலில் அமைச்சராக இருந்த முரசொலி மாறனின் மகனும் கருணாநிதியின் பேரனுமாகிய தயாநிதி மாறன் செய்த ஊழல்கள் இன்னும் விசாரிக்க படவில்லை . காங்கிரஸ் கட்சியும் தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பது போல ஆதர்ஷ் ஊழல் , காமன் வெல்த் ஊழல் , இஸ்ரோ ஊழல் என்று பல ஊழல்களை செய்து மக்களை திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறது. 

இந்த வலக்கை எப்படியெல்லாம் மூடிவிடலாம் என காங்கிரஸ் கட்சி திட்டமிட்டது. ஆனால் எதிர்கட்சிகளின் நெருக்குதலாலும் , உச்சநீதிமனற்றத்தின் உத்தரவுகளாலும் விசாரிக்க வேண்டிய நிலைக்கு சிபிஐ தள்ள பட்டுள்ளது. ஒரு ஆளுங்கட்சி தொலை காட்சி சிபிஐ    விசாரணைக்கு உள்ளாவது இதுவே முதன் முறை என்றே நினைக்கிறேன். இத்தனை கேவலங்களை தாண்டி எந்த முகத்தில் திமுக மக்கள் மத்தியில் வாக்கு கேட்கும் . காங்கிரஸ் கட்சியும் ஊழல் கட்சி தான். திருவாளர் பரிசுத்தம் என்று தன்னை காட்டி கொண்ட சோனியா இப்போது காங்கிரஸ் கட்சியினர் செய்யும் ஊழலால் தலை குனிந்து நிற்கிறார். இந்த இரண்டு ஊழல் கட்சிகளுக்கும் மக்கள் சாட்டையடி கொடுப்பது நிச்சயம். 

ஊழல் பணத்தில் உருவாக்கிய கலைஞர் டிவியை தடை செய்து அதை அரசாங்கம் கைப்பற்ற வேண்டும். மக்கள் காறி துப்ப தொடக்கி விட்டார்கள் கலைஞர் அவர்களே உங்கள் முகத்தில் படுவதற்குள் நீங்களாகவே பதவியை விட்டு இரங்கி செல்வது நல்லது. 


சோனியா காந்தியால் ஈழத்திலே கொல்ல பட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின்  ஆவி தான் அதற்கு துணை நின்ற தமிழின துரோகி கருணாநிதியை ஆட்டுவிக்கின்றதோ ?

2 கருத்துக்கள்:

Anonymous said...

JJ tv pola Kalaignar tv moodumaa?

MANO நாஞ்சில் மனோ said...

என்னத்தை சொல்ல மக்கா இவனுகளை...

Post a Comment

Send your Status to your Facebook