• பேய், பிசாசு உடம்பினுள்...

    இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....

  • உங்கள் மேல் எதற்கு ...

    தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் ...

  • யூத் புல் விகடனில் ...

    யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் ...

Showing posts with label தீக்குளிப்பு. Show all posts
Showing posts with label தீக்குளிப்பு. Show all posts

Saturday

முத்துக்குமார் வீர வணக்க நிகழ்வுகள் எமது ஊரில் மிகவும் எழுச்சியோடு நடை பெற்றது

ஓர் ஆண்டுக்கு முன்னர் ஈழத்திலே சிங்கள வெறியர்களால் தமிழினம் அழிக்க பட்ட போது கொதித்தெழுந்து தன்னுடைய தேக்கு மர தேகத்தை தீக்கு தின்ன கொடுத்த மாவீரன் முத்துக்குமார் உட்பட 19 வீர தியாகிகளுக்கு வீர வணக்க நிகழ்வுகள் மிகவும் எழுச்சியோடு நடை பெற்றது.


குமரி மாவட்டம் தக்கலை ஒன்றியத்தில் தக்கலை பேருந்து நிலையத்திற்கு முன்புறம் தக்கலை ஒன்றிய மதிமுக செயலாளர் அழகை J.P . சிங் தலைமையில் முத்துக்குமார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தமிழ் ஈழம் மலரும் வரை போராட உறுதி எடுத்து கொண்டனர். ஏராளமான மதிமுக தொண்டர்கள் மற்றும் தமிழ் இன ஆர்வலர்கள் கலந்து கொண்டனர் .


இதை தொடர்ந்து மதிமுக இளைஞர் அணி சார்பாக குமார புரம் சந்திப்பில் முத்துக்குமார் படத்திற்கு இளைஞர் அணியினர் மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் வீரவணக்க நிகழ்வு பொதுக்கூட்டம் நடை பெற்றது . இளைஞர் அணி அமைப்பாளர் சுரேஷ் குமார் தலைமை தாங்கினார் . கூட்ட்டத்திற்கு தக்கலை ஒன்றிய செயலாளர் , குருந்தன் கொடு ஒன்றிய செயலார் , குளச்சல் நகர செயலாளர் மற்றும் நிவாகிகள் கலந்து கொண்டனர் . தலைமை கழக பேச்சாளர் சிலம்பை டென்னிசன் சிறப்புரையாற்றினார் .
Read More

Monday

பிளாஷ் நியூஸ் : ஈழ தமிழர்களுக்காக காங்கிரஸ் பிரமுகர் தீக்குளிக்க முயற்சி

வக்கீலும் மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளருமான கோசல் ராம் இன்று மண்ணெண்ணெய் கேனுடன் நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு வந்தார் . இலங்கை தமிழர்களுக்காக தான் தீக்குளிக்க போவதாக கூறினார் .

அப்போது அங்கிருந்த வக்கீல் சங்க தலைவர் அசோக் பத்ம ராஜ் , முன்னாள் உப தலைவர் செல்வா குமார் ஆகியோர் அவரை தடுத்து மண்ணெண்ணெய் கேனை அவரிடமிருந்து பறித்தனர் . பின்னர் கோசல் ராம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் .

சில தினங்களுக்கு முன்பு சீர்காழி காங்கிரஸ் வட்டார செயலாளர் ரவி சந்திரன் தீக்குளித்து வீர மரணம் அடைந்தார் என்பது குறிப்பிட தக்கது .



http://www.dailythanthi.com/FlashNews/FlashNews.html
Read More

Send your Status to your Facebook